தினம் ஒரு ஆலயம் - அதிசயம்
24. விடங்கீஸ்வரர் திருக்கோயில் குண்டடம் திருப்பூர்
குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோயில்
தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில் உள்ள குண்டடம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.
விடங்கி முனிவர் பூஜித்த காசி விஸ்வநாத லிங்கம் என்பதால் விடங்கீஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது.
காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால் பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது.
அதுமட்டுமல்ல, அட்டகாசம் செய்த அசுரன் சீசகனை பைரவர் கொன்ற இடம் என்பதால் இந்தப் பகுதியும் 'கொன்ற இடம்' என்றே வழங்கப்பட்டது.
அதுவே நாளடைவில் 'குண்டடம்' என்று மருவிவிட்டது.
பஞ்ச பாண்டவர்கள், இந்தப் பகுதியில் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டபோது, திரெளபதி மேல் அரக்கன் ஒருவன், ஆசை கொண்டதாகவும், அதனால் கோபப்பட்ட பீமன், அரக்கனை அடித்துக் கொன்ற இடமும் இதுதான்
என்பதால் 'குண்டடம்' என்ற பெயர் எழுந்ததாகவும் இன்னொரு புராணம் சொல்கிறது.
போர் நடந்த பூமி இது என்பதற்கு ஆதாரமாக சுற்றுப்பக்கத்தில் உள்ள தோட்டங்களின் பெயர்களே போதும்.ரத்தக்காடு, சாம்பல் காடு, களரிக்காடு இந்த கிராமத்தில் உள்ள காடுகளின் மற்றும் இருப்பிடங்கள் பெயர்கள் ஆகும்.
அதிசயம் மிக அதிசயம்:
குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. ஒவ்வொரு மாதத்திலும் எந்தெந்த விதமாக இருக்கும் என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள்.
கருமுட்டையில் விந்தணு நுழைவதைப் போல ஒரு சிற்பமும் உள்ளது.
அந்த காலத்தில் கருமுட்டை வடிவத்தை விந்தணுவின் வடிவத்தை எப்படி தெரிந்து வைத்திருப்பார்கள்
கர்ப்பமுற்ற தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் வடிவத்தை மட்டும் எப்படி தெரிந்து சிலையாக வடித்திருக்கிறார்கள்.
பழந்தமிழர்களிடம் அற்புதமான மருத்துவ விஞ்ஞானம் இருந்தது என்பதற்கு சாட்சியே சித்த மருத்துவம்.
இந்த சிலைகளில் ஒரு முக்கியமான செய்தியும் ஒளிந்திருக்கிறது. ஓம் என்ற எழுத்திற்கு உள்ளேயும் அறுகோண நட்சத்திரத்திற்கு உள்ளேயும் தான் குழந்தையின் வடிவம் அந்த சிலைகளில் உள்ளது.
ஓம் என்ற ஒலியும், அறுகோண நட்சத்திரமும் முருகக் கடவுளோடு தொடர்பு உடையவை..
1000 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த
கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .
தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.
நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.
ஓம் நமசிவாய…
சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்
24. விடங்கீஸ்வரர் திருக்கோயில் குண்டடம் திருப்பூர்
குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோயில்
தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில் உள்ள குண்டடம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.
விடங்கி முனிவர் பூஜித்த காசி விஸ்வநாத லிங்கம் என்பதால் விடங்கீஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது.
காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால் பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது.
அதுமட்டுமல்ல, அட்டகாசம் செய்த அசுரன் சீசகனை பைரவர் கொன்ற இடம் என்பதால் இந்தப் பகுதியும் 'கொன்ற இடம்' என்றே வழங்கப்பட்டது.
அதுவே நாளடைவில் 'குண்டடம்' என்று மருவிவிட்டது.
பஞ்ச பாண்டவர்கள், இந்தப் பகுதியில் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டபோது, திரெளபதி மேல் அரக்கன் ஒருவன், ஆசை கொண்டதாகவும், அதனால் கோபப்பட்ட பீமன், அரக்கனை அடித்துக் கொன்ற இடமும் இதுதான்
என்பதால் 'குண்டடம்' என்ற பெயர் எழுந்ததாகவும் இன்னொரு புராணம் சொல்கிறது.
போர் நடந்த பூமி இது என்பதற்கு ஆதாரமாக சுற்றுப்பக்கத்தில் உள்ள தோட்டங்களின் பெயர்களே போதும்.ரத்தக்காடு, சாம்பல் காடு, களரிக்காடு இந்த கிராமத்தில் உள்ள காடுகளின் மற்றும் இருப்பிடங்கள் பெயர்கள் ஆகும்.
அதிசயம் மிக அதிசயம்:
குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. ஒவ்வொரு மாதத்திலும் எந்தெந்த விதமாக இருக்கும் என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள்.
கருமுட்டையில் விந்தணு நுழைவதைப் போல ஒரு சிற்பமும் உள்ளது.
அந்த காலத்தில் கருமுட்டை வடிவத்தை விந்தணுவின் வடிவத்தை எப்படி தெரிந்து வைத்திருப்பார்கள்
கர்ப்பமுற்ற தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் வடிவத்தை மட்டும் எப்படி தெரிந்து சிலையாக வடித்திருக்கிறார்கள்.
பழந்தமிழர்களிடம் அற்புதமான மருத்துவ விஞ்ஞானம் இருந்தது என்பதற்கு சாட்சியே சித்த மருத்துவம்.
இந்த சிலைகளில் ஒரு முக்கியமான செய்தியும் ஒளிந்திருக்கிறது. ஓம் என்ற எழுத்திற்கு உள்ளேயும் அறுகோண நட்சத்திரத்திற்கு உள்ளேயும் தான் குழந்தையின் வடிவம் அந்த சிலைகளில் உள்ளது.
ஓம் என்ற ஒலியும், அறுகோண நட்சத்திரமும் முருகக் கடவுளோடு தொடர்பு உடையவை..
1000 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த
கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .
தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.
நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.
ஓம் நமசிவாய…
சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்






No comments:
Post a Comment