Sunday, December 29, 2019

மறந்து போன அணிகலன்கள்


மறந்து போன அணிகலன்கள்..
புது வடிவில் வந்தாலும்...
இதுபோல் செழுமை பெறுமா..???

-தமிழன் திமிரானவன்



பார்ப்பனனின்_பூர்வீகம்

Sundarji.....
பார்ப்பனனின்_பூர்வீகம்..

பார்ப்பனர் என்று சொல்லக்கூடிய பிராம்மணர்கள் யார்?
அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்??

நமது வரலாற்றுப்பாடத்தில் ஆரியர் படையெடுப்பு என்றொரு பாடமுண்டு.

ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்ததாகவும் இந்தியாவின் கைபர்-போலன் கனவாய் வழியாக இந்தியாவினுள் ஊடுருவியதாகவும் படித்திருப்போம்.

ஆனால் இதெல்லாம் உண்மையா??
இதையெப்படி வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்..??
இதைப்பற்றிய குறிப்புகள் எங்கே இருக்கிறது??
என்று நாம் ஆராய்ந்தால்..

1850க்கு பின் பிரிட்டீஸ் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட நூல்களில் மட்டுமே இது சம்பந்தமான குறிப்புகள் இருக்கிறது.

நம் நாட்டில் எழுதப்பட்ட வரலாற்றுக்குறிப்புகளில் ஆரியர் படையெடுப்பு சம்பந்தமாக எந்த குறிப்புகளும் இல்லை

சரி அப்படியே படையெடுப்பு நடந்ததாக வைத்துக்கொள்வோம்.
நான் ஒரு சாதாரணமான 10ம் வகுப்பு படித்த துர்காவாக யோசித்துப்பார்த்தால்..

மத்திய ஆசியாவில் இருக்கும் நாட்டை புவியியல் வரைபடத்தில் தேடினால் அங்கு இருக்கும் நாடு மங்கோலியா!

அப்படிப்பார்த்தால் ஆரியர்கள் மங்கோலியர்களா??

மங்கோலியர்களின் தாய்மொழி பாரசீகம்!

Durga
ஆரியர்கள் தாய்மொழி சமஸ்கிருதம் என வரலாற்று குறிப்புகளில் இருக்கிறது..

ஆனால் மங்கோலியாவில் சமஸ்கிருதம் மருந்துக்கு கூட இல்லை.

சரி மத்திய ஆசியாவில் தான் சமஸ்கிருத மொழி இல்லை கிழக்கு ஆசியா மேற்கு ஆசியா வடக்கு ஆசியா ஏன் ஐரோப்பியா ஆப்பிரிக்கா கண்டங்களில் கூட சமஸ்கிருதம் இல்லை.

பிறகு ஆரியர்கள் என்று சொல்லக்கூடிய பார்ப்பனர்கள் எங்கிருந்து வந்தார்கள்??

தெற்கு ஆசியாவிலிருந்து,!!

தெற்கு ஆசியாவில் உள்ள நாடு எது?
இந்தியா

ஆம்!..
சமஸ்கிருதம் மொழி இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் கலந்து இருக்கிறது!

குறிப்பாக 
தமிழ்மொழியில் தான் சமஸ்கிருதம் அதிகம் கலந்திருக்கிறது.
50சதவீதத்திற்கும் அதிகமாக..

ஆக ஆரியர் என்ற இனமும் மத்திய ஆசியாவில் இல்லை மொழியும் இல்லை.

எல்லாம் பிரிட்டீஸ் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட கட்டுக்கதை..

நாம் பார்ப்பனன் என்று வசைபாடும் பிராம்மணனின் பூர்வீகம் தமிழ்நாடு
அவன் தாய்மொழி தமிழ் 

பிற்கு எப்படி இந்திய மொழிகளில் சமஸ்கிருத கலப்பு இருக்கிறது?? என்ற கேள்வி எழுகிறது?

(சமஸ்கிருதம் பற்றிய வரலாற்றை அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்)

எந்த பிராம்மணனும் தாய்மொழியாக சமஸ்கிருதத்தை குறிப்பிடுவதில்லை

மேலும் 
மங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்தவன் பாபன் என்றொரு பாரசீக மன்னன் படையெடுத்து வந்ததாக வரலாற்று குறிப்பு இருக்கிறது

அவனே பின்னர் மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவியதாகவும் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.

இதெல்லாம் சாதாரணமாக படிக்காத பாமரன் யோசித்தால் கூட பிரிட்டீஷ் கிறிஸ்தவன் சொன்னது கட்டுக்கதை என்பது புரியும்??

கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஆட்சிசெய்யும் காங்கிரஸ் அரசுக்கோ அல்லது வரலாறு ஆய்வு செய்யும் படித்த முட்டாள்களுக்கு ஏன் தெரியவில்லை??

எங்கிருந்தோ வந்த கிறிஸ்தவனையும் மொகலாயனையும் உடன்பிறவா சகோதரனாக ஏற்றுக்கொள்ளும் தமிழா?? இம்மண்ணில் பிறந்து வளர்ந்த பிராம்மனனை ஏன் வெறுக்கிறாய்??

பிராம்மனன் உன் கடவுளை சாத்தான் என எங்காவது சபித்தானா?
அல்லது உன் தமிழ் சமூகத்திற்கு எதிராக குண்டு வைத்தானா??

ஆரியர்கள் . திராவிடர்கள் என்று பேசி தமிழர்களுக்குள் பிரிவினை ஏற்படுத்துவது தான் மாற்று மொழி பேசுபவர்களின் வேலைகள் நோக்கம்
 காரணம்

 இன்று கடவுளாக வணங்குபவர்கள் அனைவரும் தமிழர்களே

இதையெல்லாம் கூறுவதால் என்னையும் காவியென்று முத்திரை குத்திவிடாதே!

உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் பதிவு செய்யுங்கள்
நாணும் தெரிந்து கொள்கிறேன்
#Arunagiri 
#Sundarji 



Wednesday, December 25, 2019

ஒரு ரகசியம் தெரிந்து கொள்ளுங்கள்...

ஒரு ரகசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

கோவிலில் சனீஸவரர் முன்பு எள்தீபம் ஏற்றக்கூடாது என்பதற்க்கான ஒரு ரகசியம் தெரிந்து கொள்ளுங்கள்

பிணம் எரிக்கும் பொழுது உண்டாகும் வாடை தான் எள்ளு எரியும் பொழுது வெளிப்படும்.

எனவே கோவிலில் எள்விளக்கை ஏற்ற கூடாது .

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இது தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு.

இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படுத்தும்.

எள் என்பது அரிசியைப் போல ஒரு தானியம்.

அரிசியை எரிப்போமா?

எள்ளை எண்ணெயாக்கி அந்த எண்ணெயைக் கொண்டு தீபமேற்றச் சொல்லித்தான் நமது பரிகாரமுறைகள் சொல்கிறதே தவிர எள்ளையே நேரிடையாக எரிக்க அல்ல.

எள்ளை நைவேத்தியமாகத்தான் படைக்க வேண்டும்.

மனித உருவத்தில் நமது காலத்தில் வாழ்ந்து நம் கண்முன் நடமாடிய மகான் காஞ்சித்தெய்வம் ஸ்ரீமகாபெரியவர் கூட ஒருமுறை இந்த எள் தீபம் கூடாது என்று தெளிவுபடுத்தியும் நமது கோவில்களில் இந்த முறையைத் தொடருவது துரதிர்ஷ்டம்தான்.

எள் எண்ணெய்
(ந.எண்ணை) விளக்கு அல்லது சகல தோஷத்தையும் தீர்க்கும் நெய்விளக்கு ஏற்றலாம்.

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.

அதே போல் மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற, தூய்மையடைந்து நற்பலனை அடைகின்றன.

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன.

சூரிய நாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது.

சந்திர நாடி, குளுமையைத் தருகிறது.

சுஷம்னா நாடி, அந்தப் பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு, ஆன்மீகப் பாதையை வகுக்கிறது.

நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரிய நாடி, சுறுசுறுப்பு அடைகிறது.

நெய்விளக்கு, சுஷம்னா நாடியைத் தூண்டிவிட உதவுகிறது.

பொதுவாகவே நெய் தீபம், (கடையில் விற்கும் மாட்டுக்கொழுப்பு நெய் இல்லை- சுத்தமான பசு நெய்) சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலனையும் தருகிறது.

உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன்.....

உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.

அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்

உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.

எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.

எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.

எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.

மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.

மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.

நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்

#முதுமை என்று எதுவும் இல்லை.

நோய் என்று எதுவும் இல்லை.

#இயலாமை என்று எதுவுமில்லை.

எல்லாம் உங்கள் மனதிலும், அதன் #நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.

#சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.

#நான்... #நான்... #நான்...

#நான்  #சம்பாதித்தேன்,

#நான் #காப்பாற்றினேன்,

#நான் தான் வீடு கட்டினேன்,

#நான் தான் #உதவி செய்தேன்,

#நான் உதவி செய்யலனா? அவர் என்ன ஆகுறது!

#நான்  #பெரியவன்,

#நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன்,

#நான் நான் நான் நான்* என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!

#நான் தான் என் #இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

#நான் தான் என் #மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

#நான் தான் என் இரண்டு #கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

#நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா??

#நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?

இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "#நான்" என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..

ஆகையால் #நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் #அன்பாக இருங்கள்.

#உலகைப்பற்றிக்கவலைப்படாதே ஏனெனில் அது இறைவனுக்குரியது.

உணவைப்பற்றி கவலைப்படாதே !அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.

எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதே! அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது எல்லாவற்றையும் வழங்கிய இறைவனுக்கு இணை வக்காதே! அதற்கு கூலி நிரந்தர நரகப் படுகுழி எத்தனை கோடி வருடங்கள் ஆனாலும் வெளியேற முடியாது

உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே #தாழ்வுமனப்பான்மை வரும்

உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்.

#உன்னை_யாரோடும்_ஒப்பிடாமல் நீ நீயாக இரு #தன்னம்பிகை வரும்.

ஹரே கிருஷ்ணா..!ஆப்ரிக்காவில்.....

Monday, December 23, 2019

உங்களுக்கு பிடிக்காதவங்கள பழி வாங்க போறீங்களா.....

                             உங்களுக்கு பிடிக்காதவங்கள பழி வாங்க போறீங்களா?
“நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி   செய்திருக்கிறார்கள்? எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்?
எத்தனை பேர் என் முதுகில் குத்தியிருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி
வாங்காமல் ஓயமாட்டேன்” என்று
அந்த சாமியார் முன் வந்து பொருமினான் ஒரு சீடன்.
“ஏதாவது மந்திரம் கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி” என்றான்.
சாமி யோசித்தார்.
“சரி… ஒன்று செய்யலாம்” என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி.
“நீ யாரையெல்லாம் பழி வாங்கவேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு  உருளைக்கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக்கொண்டே வா” என்றார்.
“ஆனால் இரண்டு நிபந்தனைகள்” என்று தொடர்ந்தார்…. “ஒரு உருளைக்கிழங்கில் இரண்டு  மூன்று பெயர்களை செதுக்கக்கூடாது. ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாய் செதுக்க  வேண்டும்”.
“சரி… அப்புறம்?”
“நீ எங்கெல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போகவேண்டும்”..
“ப்பூ, இவ்வளவுதானா? நான் என்னமோ பெரிசா ஏதோ சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன்”
என்று சீடன் எழுந்து போனான்.
அன்றிலிருந்து யார் மீதெல்லாம் ஆத்திரமோ யார் யாரை பழிவாங்க வேண்டும் என்று நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து பெயரை செதுக்கி கோணிப்பையில் போட்டுக்கொண்டே வந்தான்.
ஆரம்பத்தில் கோணியை தூக்கி கொண்டு திரிவது ஒன்று பெரிய சிரமமாய் தெரியவில்லை.
ஆனால் நாளாக .....நாளாக, அது சுமையாக தோன்றியது. இன்னும் கொஞ்சநாள் போனதும் தூக்குவதே சிரமமாகிவிட்டது.
இதனிடையே சில நாட்களுக்கு பின் அந்த உரித்த உருளைக்கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது. நாள் போக போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீச ஆரம்பித்தது.



அவன் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, எல்லோரும் – நெருங்கிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் என எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள்.
அவனிடம் பேசவோ, அவன் சொல்வதை யாரும் காதுகொடுத்து கேட்கவோ கூட தயாராக இல்லை.
சீடன் மறுபடியும் சாமியிடம் வந்தான்.
“என்ன சாமி இப்படிப் பண்ணிட்டீங்களே..?” என்றான்.
“என்ன புரிந்தது?” என்றார் சாமி.
“பழி வாங்கும் குரோத உணர்வை சேகரித்துக்கொண்டே வந்தால் அது சுமையாகிவிடும்.
துர்நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள். அதை எனக்கு விலக்கத்தானே இப்படி செய்தீர்கள்?” என்றான் சீடன்.
“ம்… சரி. ஆனால் நீ இன்னும் முழுக்கிணற்றை தாண்டவில்லை” என்றார் சாமி.
“புரியலையே…?”
“உன் பிரச்னை சுமை கூடி போச்சே என்பதும் நாற்றமடிக்கிறதே என்பதும் தான் என நீ நினைக்கிறாய், இல்லையா?”
“ஆமாம்”
“சரி… அந்த உருளைக்கிழங்குகளை அவ்வப்போது கொட்டி அந்த கோணியை காலி செய்து கொண்டே வந்தால் இந்த சுமைப் பிரச்னை, நாற்றப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறாய் இல்லையா?”
“ஆமாம்.”
“மகனே, பிரச்சனை உருளைக்கிழங்கில் இல்லை. கோணிப்பை. ?!
கோணி இருப்பதால் தானே அதில்
உருளைகிழங்கை சேர்க்க ஆரம்பித்தாய்?
எனவே,
உனக்கு சுமையில்லாமல் இருக்க வேண்டுமானால், அந்த சுமை நாற்றமெடுக்காமல் இருக்க
வேண்டுமானால் கோணியை முதலில் தூக்கி எறி.
உனக்கு துன்பம் இழைத்தவர்கள் தண்டனை பெற்றே தீருவார்கள்.. நீ உன் வேலையில் கவனம் செலுத்தி உன் கடமையை சரியாக செய்து வா.”..என்றார்..
ஆம்,நண்பர்களே..
கைவிடவேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டுமல்ல, பழி வாங்கும் மனதையும் கூடத்தான்...
இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு எல்லாம் காரணம்:-
"மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்........
மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான் ".







Sunday, December 22, 2019

நாம் தினமும் கடவுளை வணங்கும்போது விளக்கேற்றி வணங்குதல் வேண்டும்.

நாம் தினமும் கடவுளை வணங்கும்போது விளக்கேற்றி வணங்குதல் வேண்டும்.
அவ்வாறு விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் தெய்வீகப் பேரொளியும், லட்சுமி கடாட்சமும் ஒன்று சேரும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது. அந்தவகையில், கடவுளுக்கு எவ்வாறு விளக்கேற்றி வழிபட வேண்டும்? என்பதை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
வேதத்தின்படி விளக்கினை கிழக்கு, வடக்கு திசை நோக்கி ஏற்றலாம். மேற்கும், தெற்கும் விளக்கு ஏற்ற சரியான திசை அல்ல. இறந்தவர்களுக்கு கர்மா செய்யும்போது குறிப்பிட்ட அந்த நாட்களில் மட்டும்தான் தெற்கு திசையை நோக்கி விளக்கினை ஏற்ற வேண்டும். மற்றபடி தெற்கு திசையை நோக்கி நம் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது.


வாசல் தெளித்து கோலமிட்ட பின்புதான் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும். பூஜை அறையில் தீபத்தை ஏற்றி விட்டு, பின்பு அந்த தீபத்திலிருந்து மற்றொரு தீபத்தை ஏற்றிக்கொண்டு அதன்மூலம் வாசலில் உள்ள தீபத்தை ஏற்ற வேண்டும்.
தினந்தோறும் நம் வீட்டில் ஒரு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் போதுமானது. அம்பாள் அல்லது ஸ்ரீ சக்கரத்தை வீட்டில் வைத்து பூஜை செய்பவர்கள், பூஜை அறையின் வலது புறம் பசு நெய் தீபமும், இடது புறம் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
பருத்தியால் ஆன பஞ்சுத்திரி அல்லது தாமரை தண்டு திரி கொண்டு வீட்டிலும், கோவில்களிலும் விளக்கு ஏற்றலாம். அதிலும் தாமரை தண்டினாலான திரியில் ஏற்றும் விளக்கிற்கு அதிக பலன் உண்டு. திரியானது ஒன்று, இரண்டு, மூன்று என்ற எந்த கணக்கில் வேண்டுமானாலும் இருக்கலாம். மேலும் தீபம் அணையாமல் எரியும் அளவிற்கு திரியினை போடவேண்டும். அதில் எந்த கட்டுப்பாடும் இல்லை.
சுத்தமான பசு நெய், நல்லெண்ணெய் இவைகளை கொண்டு நம் வீட்டில் விளக்கினை ஏற்றலாம். இதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் ஏராளமாக இருக்கும். ஆனால் நெய்யையும், நல்லெண்ணையையும் கலந்து விளக்கினை ஏற்றக்கூடாது. வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசுநெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்தும் கலந்ததுதான் பஞ்சதீப எண்ணெய். இந்த எண்ணெய்களை தனித்தனியாக கொண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும்.

மாறாக ஐந்து எண்ணெயையும் ஒன்றாக கலந்து கொண்டு விளக்கு ஏற்றுதல் தவறு. ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணெய் கலந்து தீபம் ஏற்றுவது சாஸ்திரப்படி சரியானது அல்ல. கூட்டு எண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் இவற்றில் கட்டாயம் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது. வேப்ப எண்ணெயை கொண்டு விளக்கு ஏற்றும்போது அதை வீட்டின் நுழைவாயில் மாடத்தில் வைக்க வேண்டுமே தவிர வீட்டிற்குள் வைக்கக்கூடாது.
நம் வீட்டில் சாந்தமான தெய்வங்களை மட்டும் வைத்து வழிபடுகின்றோம். ஆனால் ஆலயங்களில் சாந்தமான தெய்வம், உக்கிரமான தெய்வம் இரண்டையும் சேர்த்து வழிபடுவோம். ஆகையால் விளக்கு ஏற்றுவதில் சிறு வேறுபாடு உள்ளது. ஆலயங்களில் நெய், நல்லெண்ணெய், இலுப்பெண்ணை இவைகளில் விளக்கு ஏற்றலாம்.

Saturday, December 21, 2019

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்!

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.






1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.
13. அவ்வப்போது பரிசுகள் அளி.
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!






31. வாழ்வை கண்டு களி!
32. ரசனையோடு வாழ்!
33. வாழ்க்கை வாழ்வதற்கே!

                               34. நான்கு நபர்களை புறக்கணி!
மடையன்
சுயநலக்காரன்
முட்டாள்
ஓய்வாக இருப்பவன்

                                                35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே! 
😏பொய்யன்
😏துரோகி                                         
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்
38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு
41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்
42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்
43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘
வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்



Friday, December 20, 2019

மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்.....

மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்

ஒரு பெண், லண்டன் நகரத்தில் வாழ்பவர். அங்குள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி. ஒரு பூ அருகிலிருந்தாலே, அவர் கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார். அதனால் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்வார்.
🌹🌹🌹
இந்த சூழ்நிலையில் ஒருநாள், அவருடைய ஆபீசில் ஒரு மீட்டிங். கலந்து கொள்ளப் போனார். அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளில் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள்.

'ஒரு பூ அருகில் இருந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே, இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மீட்டிங்கை அட்டென்ட் செய்யப் போகிறோம்' என்று பயந்தார்.

ஆனால் வேறு வழியில்லாமல், அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தார். பூக்களைப் பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்தது, தும்மலும் வந்தது, முகமெல்லாம் சிவந்து விட்டது.

மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், பின்னாலிருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறபோது "இந்த பூக்களைப் பாருங்கள். நிஜமான பூக்கள் போலவே இருக்கின்றன.." என்று வியந்தபடி கூறிக்கொண்டே சென்றார்.

அப்பொழுதுதான் இவருக்கு தெரிந்தது, அந்த பூக்கள் உண்மையான பூக்கள் அல்ல. எல்லாமே காகிதத்தால் செய்யப்பட்ட செயற்கை மலர்கள் என்று.

இவர் யோசித்தார்.. "இந்த பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்..?"

இப்படி நினைத்த மறுவினாடியே அவருடைய அலர்ஜிக்குண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன.

#இதுதான்நமதுமனம்..

#இந்தமனதால்நோய்களை_உருவாக்கவும் முடியும்.. #குணப்படுத்தவும் முடியும்..

இந்த மனதால்


suryatrustmob@gmail.com

 #பிரச்னையை_உருவாக்கவும் முடியும்.. அதற்கு #தீர்வையும் தர முடியும்.

எனவே,

 #நேர்மறை_எண்ணங்களை மட்டும் எண்ணி, மனதை நல்ல முறையில் பயன்படுத்துவோம்.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை விவேகத்துடன் ஒவ்வொரு பிரச்சனைக்கும் முடிவு காண முயலுங்கள்.

Tuesday, December 10, 2019

தமிழன் என்கிற திமிர் எனக்கும் உண்டு

ஆதிதமிழினம்
தன்னை இழந்து...
வரலாறு தொலைத்து...
தமிழினம் இன்று
பல சாதியினமானது
பார்ப்பன சதியாலே...
43,73,120 ஆண்டுகள்
வரலாற்றை அறியாது
2019
ஆண்டுக்கு அடிமையானது...
அந்தோ பரிதாபம்
கல்வி,கலை,மருத்துவம்
கலாச்சாரம், பண்பாடு இழந்து தவிக்குதே...
முச்சங்கம் வைத்தே
இறையனார் கட்டிக்காத்ததை
காணாமல் செய்ததே அந்நிய மோகம்...
மாற்றான் தாயை மதிப்பது
தவறல்ல தமிழா...
தன்தாயை மிதிப்பது முறையோ...
உன் புத்தாண்டை
ஆள்பவன் சித்திரை என்றால்
எதிர்ப்பவன் தை என்கிறான்...
இடையிலே நீ யாரென
தேடி உணர நேரமில்லை
சாதி,சினிமா,ஆன்மீக போதையிலே நீ...
நாளுக்கு கிழமை வைத்து
நாளுக்குள் விண்மீன், திதி,ஓரை
எனவே நேரங்குறித்து வளர்,தேய்பிறை கண்ட...
ஆதிசிவன் வழிவந்த
உன் சித்த பாட்ட,பூட்டனை
நீ அறிந்து உணர நேரமில்லை...
பூட்டா சங்கிலியில்
சிக்கிய யானை போலே
அந்நிய மாயையில் மாட்டிய தமிழினமே...
நாளுக்குள் உறவையும்,உணர்வையும்
விட்டு,விட்டு வாழ்வில் தொலைத்தவர்கள்
உன் வாழ்வியலை கெடுத்தது புரியலயா???
இறைவா!!!
தன்னை மறந்த தமிழினத்தை
முன்னம் உணர்த்தி தலை நிமிர்த்து...
மற்றவரை மதிப்போம் என்றென்றும்
தன்னிலை உணர்ந்தே
தன்மானம் காப்போம் தமிழினமே..

Sunday, December 8, 2019

நீங்கள் தமிழன் என்றாலும் இந்துதான்.


#இயேசுவை வழிபடும்
#அல்லாவை வழிபடும் எனது அன்பு
#சகோதர #சகோதரிகளுக்கு.!!

நீங்கள் ஒன்றும் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் அல்ல.!!

#நமது நாட்டிலே
நமது இனத்திலே #பிறந்து
#நமது உணவை உண்டு
#நமது ஆடைகளை அணிந்து
#நமது ஊரிலே வசித்து
#நமது கடவுளை
#நமது கலாச்சாரத்தை
#நமது பாரம்பரியத்தை
#போற்றி வாழ்ந்தவர்கள்தான் #உங்களது#முன்னோர்கள்

நம்மை அடிமைப்படுத்த
நம்மை ஆட்சிபுரிய
நம் அடையாளத்தை அழிக்க வந்தவர்களிடம்

அவர்களின் பணத்திற்காக
அவர்களின் அற்ப சலுகைக்காக
அவர்களின் ஏமாற்று வேலைக்கு மயங்கி

#நமது கடவுள்
#நமது வழிபாடு
#நமது கலாச்சாரம்
#நமது பண்பாடு
#நமது அடையாளம்
#நமது கல்வி
#நமது ஞானம்

ஆகியவற்றை விட்டெறிந்து
அவர்கள் பின்னால் சென்று விட்டீர்களே.!!

நாம் உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களையும் அன்போடு உபசரிப்பவர்கள்.

விருந்தினர்களாக வந்தவர்களுக்கு
நம் விருந்து திருவிழா நமது பெருமைகளை
சொல்லி குலாவி வழியனுப்பி வைத்துவிட்டு...

நம் வேலையை செய்திருக்க வேண்டும்.!!

அதைவிடுத்து அவர்களோடு சேர்ந்து நமது கலாச்சாரத்தையம் பாரம்பரியத்தையும்
அழிக்க ஆரம்பித்து விட்டீர்களே.!!

இப்பொழுது தெரிகிறதா துரோகம்
எனும் செயல் எங்கிருந்து பிறந்ததென்று

அவர்கள் அவர்களுடைய கலாச்சாரத்தை
பின்பற்றும்போது நீ மட்டும் ஏன் மற்றவர் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்.??

அதற்கு நீங்கள் சொல்லும் காரணம்.??

தீண்டாமை ! பாகுபாடு ! ஏற்ற தாழ்வு !
உண்மைதான் அதை நமக்குள் சரிசெய்திருக்கவேண்டும்.!!

உனது குடும்பத்தில் உனது மனைவியுடன் பிரச்சனை என்றால்

அதை சரிசெய்யாமல்
மாற்றான் மனைவியுடன் #ஓடிவிடுவாயா.??

உனது கணவன் உனை அடிமைபடுத்துகிறான்
உன்னை துன்புறுத்துகிறார் என்றால் அதற்கு எதிராக போராடியிருக்க வேண்டும்.!!

அதை சரி செய்திருக்கவேண்டும்.!!

அதைவிடுத்து மாற்றாள் கணவனையோ அல்லது ஆண்மகனையோ தேடி#போய்விடுவாயா.??

அது விபச்சாரத்திற்கு சமமல்லவா.!!

எனது அன்பு #சகோதரனே ! சகோதரியே !

இப்பொழுது சொல்கிறீர்கள்
ஆரிய கடவுள் திராவிட கடவுளென்று

நீங்கள் இவையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வெளிநாட்டு
புனிதர்களை வழிபடுகிறீர்கள்

அவர்கள் இந்தியாவில் பிறந்தவரா.?? அல்லது தமிழகத்தில் வாழ்ந்தவரா.?? அல்லது நமது இனத்தின் #முன்னோர்களாசொல்லுங்கள்.!!

அதைவிட ஏராளமான
புனிதர்கள் வாழ்ந்த பூமி இது.!!

ஒரு அகத்தியருக்கு
ஒரு பதஞ்சலிக்கு
1000
வெளிநாட்டு புனிதர்கள்
வந்தாலும் #ஈடாகாது.

#இந்து என்பது மதமல்ல
அது நமது #வாழ்வியல்முறை

#மதத்தை நாம் உருவாக்கவில்லை
எங்கிருந்தோ வந்தவர்களெல்லாம்
நாங்கள் கிறுஸ்துவ மதம்
நாங்கள் இஸ்லாமிய மதம்
என்று பறைசாற்றும்போது

நாம் நமது வாழ்வியலை
காப்பாற்ற வேண்டாமா.??

அதனால்தான் நாங்கள் #இந்து மதமென்று உங்கள் வழியில் பயணிக்கிறோம்.!!

நமக்கு நம் முன்னோர்களான

சிவனும்
விஷ்ணுவும்
பிரம்மாவும்
விநாயகனும்
முருகனும்
காத்தவராயனும்
காளியும்
துர்க்கையும்
போதும் சகோதரர்களே ! சகோதரிகளே !

வா..........
மீண்டும் வா........
திரும்பி வா
நமது கடவுளை
நமது வழிபாட்டை
நமது கலாச்சாரத்தை
நமது வாழ்வியலை
நமது பாரம்பரியத்தை
பிழையில்லாமல் மீட்டெடுப்போம் வா...

ஒரு இந்தியனாக
ஒரு தமிழனாக
ஒரு கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் போராளியாக
சேர்ந்தே மீட்போம் வா...

இந்த பதிவிற்குப் பின்னும் உங்கள் மனம் மாறப்போவது என்பது குறைவு அல்லது இல்லை எனலாம்.

தாங்கள் தங்களை கிருத்துவன், முஸ்லிம் என்று கருதினாலும் நீங்கள் இந்துதான்.....

நீங்கள் தமிழன் என்றாலும் இந்துதான்....

இது மதவெறியல்ல மதபற்று....

நீங்கள் மேலும் எத்தனை மதம் மாறினாலும் தாய்மதம் இந்துதான்.!!

தங்கள் மனம் புண்பட்டால் படட்டும்..!!

தவறில்லை.!!

ஏனென்றால் யாரோ சிலர்
வாங்கும் அற்ப பணத்திற்கு
நீங்கள் விற்கப்பட்டுள்ளீர்கள்.!