Thursday, April 16, 2020

இன்று வரை எந்த ஆய்வாளர்களாலும் கண்டுபிடிக்க முடியாத மர்மம்

#யாழி... #உலகையே_மிரண்டு_போக_வைத்த #தமிழனின்_புராதன_கால_விலங்கு..!! 
~``~``~`` 🥀🍂 🥀🍂 ``~``~``~
இன்று வரை எந்த ஆய்வாளர்களாலும் கண்டுபிடிக்க முடியாத மர்மம்..!!

நம்மில் எத்தனைப் பேருக்கு யாழி(யாளி) என்றால் என்னவென்று தெரியும்.?

யாழிகள் தென்னிந்தியாவில் உள்ள கோவில் சிற்பங்களில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் #சிலை என்பது தான் பலரது எண்ணமும்.
அதன் தோற்றம் சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது.

சிங்கத்தின் தலை கொண்டதை “#சிம்ம #யாழி” என்றும்,

ஆட்டுத்தலை கொண்டதை “#மகர #யாழி” என்றும்,

யானை முகத்தை “#யானை #யாழி” என்றும் அழைக்கிறார்கள்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சத உடல் அமைப்புடன் “டைனோசர்” என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் #எலும்புகள், #முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள்.

பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது. அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது.

சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள். அப்படியானால் இவை போருக்கு பயன்படுதப்பட்டிருக்குமா?

இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாழிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை #கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை “யாழி வரிசை” என்றே அழைக்கிறோம்.

ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை பெரிய கோயிலில் கூட இந்த யாழிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் பார்க்க முடிகிறது.

மேலும், தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாழியின் சிலையும், அந்த யாழி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட யாழி சிலை தென் இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களில் லட்சத்திற்கும் மேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை.

குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாழி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம். அது தான் யாழி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை.

யாழிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன? யாழியில் எத்தனை வகைகள் உள்ளன? பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா? யாழி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது? 

நமது சிறிய கோவில்களிலும் யாழியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா? யாழியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? யாழி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? யாழி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன?

குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்? பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா?
இதுபோன்ற கேள்விகள் அனைத்திற்குமே யாரிடமும் பதில் இல்லை !!!!

யாழிகள் ஒருவேளை கற்பனை விலங்காகவே இருந்தாலும் கூட சீனர்களின் புராதன விலங்கு டிராகன் போல, எகிப்தியரின் புராதன பறவை ஃபீனிக்ஸ் போல, தமிழரின் புராதன விலங்கு யா‌ழி.
அவை போற்றப்பட வேண்டும்.

மேலும் நம் அருகில் இருந்தும் நாம் இந்த யாழிகளை கண்டுகொள்வதில்லை.
ஆனால், இங்கு வரும் வெளிநாட்டினரோ இதன் உருவ அமைப்பையும் அது வடிவமைக்கப்பட்டிருக்கும் தோற்றத்தையும் கண்டு மிரண்டுதான் போகிறார்கள்.

Wednesday, April 15, 2020

மரப்பாத்திரம் முடக்குவாதம் நீக்கும்,

மரப்பாத்திரம் முடக்குவாதம் நீக்கும், நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும்.

அட இது தானே நமக்கு இப்ப வேண்டும் கொரானா காலத்துக்கு

#சித்தமருத்துவம் #புத்தகம்  பற்றி படிக்கும்போது மரத்தினால் ஆனா பாத்திரங்களில் சாப்பிடும்போது அல்லது உபகாரணங்களாக பயன் படுத்தினால் அவ்வாறு செய்பவர்களின் உடலில் நோய்  எதிர்ப்பு சக்தி (இம்முயூனிட்டி)  அதிகரிக்கும் மற்றும் முடக்கு  வாதம் போக்கும் என அறிந்தேன் அதனால் இதனை பதிவுடுகிரென் .

#தேங்காய் #சிரட்டை #கரண்டி , தேங்காய் சிரட்டை  தட்டு அந்த மாதிரி தான் எனக்கு தெரியும்

தற்போது பல பெயர்களில் வரும் வைரஸ் தாக்குதல் நோய்கள் எல்லாவற்றிற்கும் மனித உடலில் நோய் எதிர்ப்பு #சக்தி இல்லாததே முக்கிய காரணமாக உள்ளது. எனவே சித்த மருத்துவ மகத்துவப்படி வாழ்க்கை நெறிமுறைகளை மேற்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியுடன் சித்தர்கள் கூறியதுபோல் நோயின்றி பல்லாண்டு வாழலாம்
இந்த பதிவை பார்ப்பவர்கள் நமது மூதாதையர்கள் எந்தமாதிரி மரங்களை கைப்பிடியாகவும் தட்டா கவும் பயன் படுத்தினார்கள் என்பதை சற்று கமெண்டில் பதிவிட்டால் நல்ல தொகுப்பு செய்தியாக இருக்கும்.
#Arunagiri
#Sundarji

Tuesday, April 14, 2020

கடவுள் என்ற ஒற்றைச் சொல்லுக்கு ஒளி என்று பெயர்

வாசி..! #வாசி..! வாசி..! 
கடவுள் என்ற ஒற்றைச் சொல்லுக்கு ஒளி என்று பெயர். பஞ்ச பூத சக்திகளின் கூட்டிணைவால் அவ்வொளி நம் உடலுக்குள் பிரகாசிக்கின்றது. பஞ்ச பூதத்தில் காற்றே மிக உன்னதமானது. இதனைக் கொண்டே #சித்தர்கள் சாகா நிலையை அடைந்தனர். அக்காற்றைப் பிடிக்கும் கலையைப் புண்ணிய ஆத்மாக்களுக்குப் பயன்படும் விதம் தம் செய்யுளில் பரிபாசையாகச் சொல்லி வைத்துள்ளனர். ஸ்ரீகாகபுசுண்டர் தொடங்கி வள்ளலார் வரையிலும் வாசியைப் பாடாத சித்தர்கள் இல்லை எனலாம் அதுபற்றி இனி!.
வாசி என்றால் என்ன?
பொதுவாக நாம் சுவாசிக்கும் காற்று மூக்கின் வழியே உள்சென்று சக்தியைக்கொடுக்கிறது. வாசி என்பது மூலாதாரத்தில் இருந்து தலையின் உச்சி வரை உள்முகமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு உயிர்க்காற்று. இது மூக்கின் வழி வாரா.
சித்தர்கள் தங்கள் உடலைக் காயகல்ப உடலாக மாற்றிக் கொள்வதற்கும் இறப்பில்லாமல் வாழ்வதற்கும் எங்கும் பறந்து செல்வதற்கும் அக்காற்றையே அவர்கள் இலயமாக்கிப் பயன்படுத்திக் கொண்டனர்.
நம் உடலில் உள்ள தசவாயுக்கள் :
(1)#பிராணன்
(2)₹அபாணன்
(3)#வியாணன்
(4)#உதானன்
(5)#சமானன்
(6)#நாகன்
(7)#கூர்மன்
(8)#கிருகரன்
(9)#தேவதத்தன்
(10)#தனஞ்செயன் என்பனவாகும்.

இதில் தனஞ்செயன் என்ற வாயு மட்டும் குழந்தையை உந்தித்தள்ளி #பிறக்க வைத்துப் பின்பு அது மூலாதாரத்தில் ஒடுங்கியே கிடக்கும். இது #மனிதன் #இறந்த பின்பு அவ்வுடலை வீங்கவைத்துச் சிதைத்துத் தலைவழியே வெளியேறும். உயிருள்ள போதே அக்காற்றைக் கிளப்பி அதனைப் பயன்படுத்திக் கொள்வதே வாசி எனும் யோகம் ஆகும்.

"உருத்தரித்த நாடியில்
ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே
கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர்
மேனியும் சிவந்திடும்
அருள்தாத்த நாதா பாதம்
அம்மைபாதம் உண்மையே"
- சிவவாக்கியர்; பா:126

இங்கே "உரு" தரிப்பதற்குத் தனஞ்செயன் என்ற வாயுவே காரணம்; இதுவே #பிறப்புறுப்புக்குக் கீழே மூலாதாரத்தில் ஒடுங்கிக் கிடக்கும் அதனைக் கபாலத்தில் நம் சாதனைகள் மூலம் ஏற்றினால் என்றும் இளமையுடன் வாழலாம் என்கிறார் சிவவாக்கியர்.

மேலும் மூலாதாரத்தில் அக்கினியாய் #ஒளிர்ந்து கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை மேலே கிளப்பி அதனையே #தியானித்து வந்தால் எல்லா சித்திகளும் பெறலாம் என்பதை
"பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடா"
- திருமந்திரம்,3ஆம் தந்திரம்
என்கிறார் என் குருநாதர் திருமூலர்.

வாசியை முறையாக இலகுவான பயிலும் வழிமுறை தான் என்ன? அதையும் அவர்களே கூறுகிறார்கள்...

வாசி என்பது சித்தர்கள் மட்டுமே செய்து வந்த அற்புதக் கலை. அதனைச் சாகாக்கலை, வேகாக்கால் என்று அழுகணிச் சித்தர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் #கலையைத் தீயவர்கள் பயன்படுத்தா வண்ணம் பரிபாசையாகத் தம்நூலில் சொல்லிவைத்தனர். அதனை நானும் வெளிப்படையாகச் இங்கு பகிர விரும்பவில்லை. ஆகவே சில விளக்கங்களை மட்டுமே கூறியுள்ளேன்.

காகபுசுண்டர்இயற்றிய பெருநூல் காவியம் 1000 என்ற #நூலில் வாசியை அழகாக எடுத்து இயம்பியுள்ளார். உணவில் விருப்பம் கொண்டு உண்டு திரிபவனுக்கு வாசி என்பது எட்டாக்கலையாகும். யோக சாதனையில் இருக்கும் யோகிக்கு உணவு கட்டுப்பாடு அவசியமானதாகும்.

"தெள்ளாத மாந்தருக்குத் தவிடுமில்லை
"தீனி குறையாதவர்க்கு வாசியில்லை"
- காகபுசுண்டர்; பா:72;அ-3

ஆகையால் உணவில் ஒரு கட்டுப்பாடும் திடமான உள்ளமும் கொண்டு விடாமுயற்சியுடன் செய்யும் ஒரு பயிற்சி முறைதான் வாசி யோகம்,

"வாசிப் பழக்கம் அறியவே ணுமற்று
மண்டல வீடுகள் கட்டவேணும்"
- கொங்கண சித்தர் பா:28;அ-1

என்று வாசியின் அவசியத்தைக் கொங்கண சித்தர் வலியுறுத்துகிறார். வாசி ஒன்றே மனிதனை நோயிலிருந்து காக்கும். அதுவே என்றும் இளமை தரும் மாமருந்து. வாசியை இலயமாக்கும் மந்திரத்தைத் தெள்ளத்தெளிவாக

"ஆகீகூவென்றே யுரைத்த
அட்சரத்தில் ஆனந்தம்
யோகியோகி என்பார்
கோடி உற்றறிந்து கண்டிடார்"
சிவவாக்கியர்; பா:450;அ-1-2
என்று சிவவாக்கியர் சுட்டிக்காட்டுகிறார்.

அஇ உஇ இ என்ற மூன்று எழுத்தே மந்திரம் ஆகும். இம்மந்திரத்தைச் சொல்லி வாசி என்னும் குதிரையை ஓட்டிப் பழக வேண்டும். அஇ உ இதுவே சித்தர்கள் சொன்ன எட்டு இரண்டு #மந்திரம் #தமிழ் எண்முறையில் இதனை அறிந்து கொள்ளலாம். அகரமும் உகரமும் உடலில் சூரிய சக்தியாகவும் சந்திர சக்தியாகவும் செயல்படுகின்றன. இம் மந்திரத்தைப் பயன்படுத்தியே தனஞ்செயன் என்ற வாயுவைக் கிளப்ப வேண்டும்.
"எட்டிரண்டு மொன்றுமது வாலை என்பார்
இதுதானே பாதிமதி சுழுமுனை என்பார்"
- கருவூறார்பா:24;அ-1

அங்ஙனம் கிளம்பும் வாயுவானது மேலே பாம்பைப் போல் சீறிப்பாய்ந்து உண்ணாக்கைத் தாக்கும். அங்கிருந்தே அது கபாலம் ஏறி ஒளியுடன் சேர்ந்து நடம்புரியும். இதனையே புறவுலகில் அனைவரும் அறியும்வண்ணம் அரச மரத்தடியில் பாம்புச்சிலையை வடித்து வைத்தனர். (ஓசோன் என்கிற சுத்தக் காற்றை அரசமரமே தரவல்லது).

"கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
" உண்ணாக்கு மேலேறி உண்புதுமை மெத்த உண்டு"
- அழுகணி சித்தர் பா:20;அ-1-2

உண்ணாக்கு வழியே மேல் ஏறும் காற்றே வாசி இப்பொழுது மூக்கின் வழியே சுவாசம் இருக்காது. ஆனால் வாசி மட்டும் இயங்கிக்கொண்டே இருக்கும். நாசி செய்யாதனவற்றை எல்லாம் வாசி ஒன்று மட்டுமே செய்து விடும். அக்காற்றே உடல் முழுதும் பரவி பரவச நிலையை அடைய வைக்கும் அந்நிலை அடைந்தவரைச் சுற்றியே மென்காந்த அலை பாயும். அதுதான் ஆன்ம சக்தி சித்தர்களின் ஜீவ சமாதியில் நாம் போகும் போது அந்நிலையை நாம் உணர முடியும். இத்தகைய வாசி நமக்குள்ளே அடங்கும் விதத்தைச் சிவவாக்கியர்,

"நாடி நாடி நம்முள்ளே நயந்து காண வல்லீரேல்
ஓடி ஓடி மீளுவான் உம்முளே அடங்கிடும்
தேடிவந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடிகோடி காலமும் குறைவிலாது இருப்பீரே"
- சிவவாக்கியர்; பா:275 என்கிறார்.
வாசி இலயமாகி நமக்குள் ஒடுங்கி விட்டால் எம பயமின்றி கோடி கோடி காலம் எந்தக்குறையும் இல்லாது வாழ முடியும்.

வாசியைத் தடுக்கும் எமன் யார் தெரியுமா?

போகர் தம்முடைய போகர்; 7000 என்ற நூலில் வாசியைக் குறிப்பிடும் பொழுது

"ஆட்டியே அண்ணாக்கில் கபத்தைத்தள்ளி
அடுத்தாறு தளத்திலுள்ள ஆமம் நீக்கு
வாட்டியே ஐம்புலனை வாளால் வீசு
மறவாதே இரவுபகல் வாசி வாட்டே"
- போகர்; பா:28;அ-3-4
என்று வாசி வேலை செய்யும் முறையைக் குறிப்பிடுகிறர். அ உ என்ற இரண்டு மந்திரத்தால் வாயின் உள்ளே இருக்கும் அண்ணாக்கை ஆட்டினால் அங்கிருக்கும் கபநீர் எல்லாம் வெளியேறிவிடும். அதுதான் வாசி மேலே ஏறாவண்ணம் தடுத்துக்கொண்டிருக்கும். அந்தக் கப நீரை வெளியேற்றினால் வாசி கபாலம் ஏறி இலயமாகும். இந்தக் கப நீரையே கோழை என்றும் எமன் என்றும் சொல்லி வைத்தார்கள். இது அதிகமாகும் போது மனிதன் இறப்பை எய்துகிறான். ஆனால் வாசியோகம் இக்கோழையை எடுத்துவிடுவதால் மரணமிலாப் பெருவாழ்வு வாழலாம். +அகரத்தையும் உகரத்தையும் ஓதும் முறைகளைப் காகபுசுண்டரும் சிவவாக்கியருமே தம்நூலில் கூறி வெளிப்படுத்தினர்.

அம்மந்திரம் வேட்டைக்காரன் குணுகுணுத்த மந்திரம் என்று பரிபாசையாகச் சொல்லிவைத்தார். வேட்டைக்காரன் பேச்சு எப்படி அமையுமோ அப்படித்தான் இம்மந்திரத்தை உச்சரிக்கவேண்டும்.

போகர் இவ்வாசியை வைத்தே மலைமீது தாவினார்; என்று காகபுஜண்டர் தம்நூலில் சான்று பகிர்கிறார்.

பிராணாயாமமும் வாசியும் ஒன்றல்ல,
பிராணாயாமம் என்பதனையே பலரும் வாசியென்று நினைத்துக்கொண்டுள்ளனர். அது தவறான எண்ணம் மனிதர்கள் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறார்கள்.

"போற்றியே சரமென்ற கணக்கின் போதம்
இருபத்தோ ராயிரத்து அறுநூ றோர்நாள்"
- கோரக்கர்; பா:34;அ-3

அதனைக் குறைத்துக்கொள்ளவும் காற்றிலுள்ள உயிர்ச்சக்தியின் மூலம் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தி ஆயுளைத் தள்ளிப் போடவும் இந்தக்காற்றைப் பிடிக்கும் கலையைச் சித்தர்கள் போற்றி அருளினார்கள். இது வெறும் மூச்சுப்பயிற்சியே ஒழிய வாசி ஆகாது. இதனையும் கணக்கறிந்தே பழகவேண்டும் அவ்வாறு இல்லையேல் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும்.

வாசி என்பது உடலை வருத்திச் செய்யும் ஒரு யோகம் ஆகும்.

வாசி ஒரு மிக சிறந்த தவமே...

வாசி இலயமானதும் நாம் தவநிலையில் அதனை ஓடவிடவேண்டும் ஏனெனில் வாசியை நம் கட்டுக்குள் வைக்க தவமே சிறந்த வழி

"சித்திரம் போலே யிருந்து வாசி பாரு"
- காகபுஜண்டர் பா:73;அ-3
என்கிறார்; புஜண்டர் அசைவற்ற நிலையில் இருந்து வாசியை மனதால் பார்க்கவேண்டும். நெஞ்சிலே இருத்தி நெருங்கி ஒடும் வாயுவை என்கிறார் சிவவாக்கியர்.

கோரக்கநாதர் சந்திர ரேகை என்னும் நூலில் ஒரு யோகி அசைவற்று நெஞ்சு நிமிர்ந்து ஆசனத்தில் அமந்து வாசியை நோக்கவேண்டும் என்கிறார்.

"வாசியென்றும் மவுனமென்றும் இரண்டும் வித்தை"
- கம்பளிச் சட்டைமுனி பா:13;அ-1

ஆகவே வாசியை மௌனம் என்ற வித்தையில் சேர்த்தால் தான் அது அட்டமாசித்திகளைப் பெற்றுத் தரும். வாசியை இலயமாக்கும் விதமும் அதனைத் தக்க வைத்துப் பயன்பெறும் விதமும் இதுவே ஆகும்.

"நாக்கு வாய் செவிமூக்கு மத்திக் கப்பால்
நடுவீதி குய்யமுதல் உச்சி தொட்டுத்
தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டுத்
தாயாரைப் பூசித்து வேதம் ஓது
வாக்குவாய் அசையாமல் மவுனங் கொண்டு
வாசிவரு மிடத்தில் மனம் வைத்துக் காத்து
நீக்குவாய் வாசியொடு மனந்தான் புக்கு
நினைவதனி லடங்கிவரும்; வாலை காணே"
- வால்மீகி; பா:12

இது வால்மீகி; ஞானம் என்ற நூலில் ஸ்ரீவால்மீகி சித்தர் ; சொன்ன தவமுறையாகும். இம்முறையன்றி வேறு எவ்வழியிலும் வாசியைப் பெற முடியாது இதுவே சித்தர் வழி. வாசி எனும் உயிர்க்காற்றைப் பிடித்துச் சித்தர்பெருமக்கள் இறவாநிலை எய்தினார்கள்; ஆகவேதான் அனைவரும் ஒன்றுபோலவே இதனைத் தம்நூலில் பதிவுசெய்தனர்.

காயகல்பம் என்றால் என்ன?

காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதை உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.

அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது
பத்து நிமிட மணித்துளிகள் "ஓம்" என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க
வேண்டும். உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக
காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட வேண்டும்.

இப்படி சூரிய பகுதியில் உஷ்ணமாக உள்ள காற்றை சந்திரப்பகுதியில்
குளிர்ச்சிப்படுத்தி வெளியேற்றும் பொழுது "ஓம்" என்ற மந்திரத்தை மனதால் நினைந்தவாறு தொடர்ந்து செய்து வரவேண்டும். இங்ஙனம் வெளிச்செல்லும் பிராணன்
குறைந்து குறைந்து இறுதியில் உள்ளேயே சுழலத் தொடங்கும். உள் சுழற்சியால் மூலாதாரத்தில் பாம்பு வடிவில் உறங்கிக் கொண்டிருப்பதாக சொல்லப்படும் குண்டலினி என்னும் சக்தி எழுப்பும். குண்டலியும் அடியுண்ட நாகம் போல் ஓசையுடன் எழும். இவ்வாறு எழும்பும் குண்டலினி ஆறு தரங்களில் பொருந்தி சகஸ்ராரத்தில் சென்று அமுதமாக மாறிக் கீழ்வரும்.

சித்தர்கள் "விந்து விட்டவன் நெந்து கெடுவான்" என்பார்கள். காரணம் இந்த விந்துதான் பிரணாயத்தின் மூலம் குண்டலினி வழி சகஸ்ராரத்தில் அடைகிறது. மேல் ஏறினால் பேரின்பம். கீழ் இறங்கினால் சிற்றின்பம்.

யோகியர் நாவை மடித்து இதனை உண்ணுவார். இந்த ஒரு சொட்டு அமுதம் சுவைத்தால் பசி, தாகம், தூக்கம் இல்லாது பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருக்கலாம்.
அதுவே சிவநீர் என்பார்கள். இதனை விழுங்கினால் நாமும் காயசித்தி பலனை அடையலாம்.

இதனை திருமூலர்;

"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாள்ர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே"
- என்கிறார்.

இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் எமனை எதிர்த்து உதைக்கும் ஆற்றல் அறிந்தவர்கள். வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் "தாம் பெற்ற இன்பம் இவ்வையகம்
பெறுக" என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.

காயசித்தியின் பெருமையினை "காகபுசண்டர்" பாடலைக் காண்போம்;

"பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே"

ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் – சக்தியும்.
உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் – பெண்ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப – துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம
பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே , விளக்கவே அர்த்தநாரீஸ்வரர்
உருவமாக சரிபாதி உடல்.
 

Saturday, April 4, 2020

The elegant image is from #KRISHNA MANDAPAM, MAMALLAPURAM

The #elegant #image is from #KRISHNA #MANDAPAM, #MAMALLAPURAM showing a #charming scene of cow being milked, the #animal licking the calf in a very natural manner. Close by stands a gopi holding a pile of milk pots in a rope-sling and balancing a bundle of fodder on her head.