Monday, October 19, 2020

போகா்

#போகா்
#இயேசு கிருஸ்து பிறப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் முன்னாடி பிறந்தவர் #போகர் என்ற மாபெரும் சித்தர். இவர் காளாங்கிநாதர் என்ற சித்தரின் சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார். இவர் பழனியில் இருக்கும் நவபாஷான சிலையை செய்தவரும் இவர்தான். இவரை பற்றிய தகவல் மிக ஆச்சரியத்தை கொடுக்கும். இவரை பற்றிய ஒரு தகவலை அவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நுலில் அவர் கூறிப்பிட்ட தகவலைப் படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன். இப்பேர்பட்ட தமிழனை உலகம் முழுவுதும் தெரியபடுத்த வேண்டும் என்பதே என் நோக்கம். அவர் இயற்றிய அந்த நூலில் 1799, 1800 ஆம் பாடலில் விமான தொழில்நுட்பத்தை பற்றிய குறிப்பையும் அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை வைத்து அவர் பறந்ததையும் தெள்ளதெளிவாக கூறிப்பிட்டிருக்கிறார்.
அது மட்டும் அல்ல 1926 ஆம் பாடலில் நீராவி இஞ்சின்(steam engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும் கப்பலின் டிசைனிங்கையும் குறிப்பிட்டிருக்கிறா­ர். இதை 5000 ஆண்டுகள் முன்பே தமிழன் கண்டுபிடித்து விட்டான் என்பது நமக்கெல்லாம் பெருமை. ஆனால் அப்பேர்பட்ட தமிழனை நாம் மறந்து விட்டோம் என்பது வேதனையளிக்கிறது.
தமிழனின் புகழ் உலகம் முழுவதும் பரவவேண்டும் உலகத்தின் முதல் இனமும் முதல்மொழியும் முதல் அறிவியல் விஞ்சானியும் முதல் மருந்துவனும் முதல் ஆன்மீகவாதியும் தமிழனே. இப்படி தமிழனின்
புகழை மறந்து நாத்திகம் பேசியும் மதமாற்றம் செய்தும் தமிழனின் பெருமை மறைக்கபட்டுவிட்டது. }
https://www.facebook.com/groups/305917699863621/
போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது. மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.

அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார். சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா...!

அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான். போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள். ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள். ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர்.அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர். உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர்.

பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால் பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.

உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர்.
https://www.facebook.com/groups/305917699863621
மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர்.

தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம்.
இப்படி பழனியம்பதியில் முருக வழிபாட்டிற்கு களம் அமைத்த போகரின் வாழ்க்கையும் ஒரு வகையில் நவரசங்களால் ஆனதுதான். பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்து பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி பெரிதாக செய்திகள் இல்லை. ஆனால்,நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு செய்தி.அதை இவரது, அரிய நூல்களுள் ஒன்றான 'போகர் ஏழாயிரம்' எனும் நூலின் வழி அறியலாம்.

பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக்கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு வெளியாகவே விளங்கியது. இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார்.

போகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும், வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது.

துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன்; உண்மையில் காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால், அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள்; என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார்.
இதனால், அந்த மலைத் தலத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர், நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார்.
https://www.facebook.com/groups/305917699863621
மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம், போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண்விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள். பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற, போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது.அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி, தான் கற்ற தாதுவித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள், போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள்.

ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, 'அமிர்தமணிப்பழம்' என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள்முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட,போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய 'பசி, தாகம், மூப்பு' என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்.

இப்படி படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம் தொடர்பானவையே.. ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது? அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது? இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை?

இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப்படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார். இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் 'போகர் ஏழாயிரம்', போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.

இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின. அதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர். சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.

அந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும்கண்டு அதைக் கைப்பற்றுவர். அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.
https://www.facebook.com/groups/305917699863621
தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட, சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார். போகர் எழுதியதை, போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர், போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவேசெய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர்.
மொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே, தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.

அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது. அங்கே, 'போ யாங்' என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.

சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம், புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் 'ரஜோலி' என்னும் யோக முறையும் ஒன்று. போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.
அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார்.பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் 'நவநாயகர்' என்றும் கூறலாம்.

அகஸ்திய முனிவர் போக சித்தரை சீன தேசத்தவர் என்று கூறுகிறார். புலிப்பாணியின் குரு என்றும் இவருடைய தாய் தந்தையர் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்றும் அகத்தியர் கூறுகிறார். போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது. போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார்.

அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.

1. போகர் – 12,000
2. சப்த காண்டம் – 7000
3. போகர் நிகண்டு – 1700
4. போகர் வைத்தியம் – 1000
5. போகர் சரக்கு வைப்பு – 800
6. போகர் ஜெனன சாகரம் – 550
7. போகர் கற்பம் – 360
8. போகர் உபதேசம் – 150
9. போகர் இரண விகடம் – 100
10. போகர் ஞானசாராம்சம் – 100
11. போகர் கற்ப சூத்திரம் – 54
12. போகர் வைத்திய சூத்திரம் – 77
13. போகர் மூப்பு சூத்திரம் – 51
14. போகர் ஞான சூத்திரம் – 37
15. போகர் அட்டாங்க யோகம் – 24
16. போகர் பூஜாவிதி – 20

இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.

இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார்.
“தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதே” என்று அறிவுரை கூறினர். அதுவரையில் போகர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர்.

போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது. அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. உடனே அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

போகர், “தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்” என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி “போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காது, முடி நரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.
https://www.facebook.com/groups/305917699863621
சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே “போகா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது.

பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார்.

“யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது” என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொட்ங்கியது.

அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். “ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டனர்.
போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.

போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.
அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோண்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார்.
அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.

தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.

போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர்.

தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “போகரே! நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுது அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம் விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராக” எனக் கேட்டு போகரின் நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.

போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.

போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.

இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே என்றும் கூறுவதுண்டு. பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.

போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது. இங்கு கூறப்பட்ட வரலாற்று செய்திகளனைத்தும் சதுரகிரி தலப்புராணத்தில் கூறப்பட்டவை.

Sunday, October 18, 2020

புத்தனின் சீடர்கள்


#அருணகிாி



உலகெல்லாம் பரந்திருந்த இந்துமதம் புத்தன் காலத்தில் திசைதிருப்பபட்டது, புத்தனின் சீடர்கள் இந்து தத்துவங்களை அழிக்க இந்துக்களின் புனித உருவங்களுக்கு புத்தன் பெயரை சூட்டினார்கள்
பிரம்மன் 4 முக புத்தன் என்றானார், பள்ளி கொண்ட பெருமாள் தூங்கும் புத்தர் என்றானார், இப்படி ஏக அழிச்சாட்டியங்களை அந்த புத்தமதம் கிழக்காசியாவில் செய்தது
பிள்ளையார் கூட சிரிக்கும் புத்தராக மாறினார், இன்னும் பல இந்து தத்துவ தெய்வங்கள் அப்படி மாறின‌
முருகன் கூட மயில்மேல் புத்தா என மங்கோலியா பக்கம் மாறினார்
இது ஜப்பானில் கூட உண்டு
சரஸ்வதி ஜப்பானிய மொழியில் அறிவு வழங்கும் கடவுள் என பென்சாண்டைன் என்றானார், பிள்ளையார் மூல கடவுள் என சொல்லபடும் வகையில் காங்கிடென் என்றானார்
குபேரன் செல்வங்களின் அதிபதி என சொல்லபடும் வகையில் பிஷமொன்டன் என்றானார்
சப்த ரிஷிகள் கதையும் ஜப்பானில் இன்று அப்படியே உண்டு மொழி மட்டும் வேறு
பிரம்மனுக்கு முகத்தை புத்தர் என மாற்றிய அம்மதம், சரஸ்வதிக்கு வீணையினை அப்படியே கொடுத்தது
இன்றும் சரஸ்வதி வீணையுடன் ஜப்பானில் பென்சான்டைன் எனும் தெய்வமாக அருள் புரிகின்றாள், ஜப்பானியரின் மிக விருப்பமான கடவுள் அவள்
ஒருவேளை ஜப்பானியர் பெற்றுகொண்ட அனைத்து அறிவுகளுக்கும் அந்த சரஸ்வதி கடாட்சமும் காரணமாக இருக்கலாம்
இந்துமதம் உலகெங்கும் பரவி இருந்தது, இன்று இந்தியாவில் மட்டும் தனித்து பாதுகாக்கபடுகின்றது
தன் வழிபாட்டு வேண்டுதல் வழியெங்கும் "உலகம் " "உலக நன்மை" "உலகை காக்கும் லோக நாயகி" என உலகுக்கு பொதுவான நலன்களை வேண்டிய அம்மதம் அப்படித்தான் உலகெல்லாம் பரவி இருந்தது.
உலகெல்லாம் பரவி இருந்ததாலே லோக ஷேமம் எனும் உலக நலம் அதன் முக்கிய நிலைப்பாடாய் இருந்தது
இன்று  அதன் சுவடுகள் உலகெங்கும் எஞ்சி இருக்கின்றன, வெவ்வேறு வடிவங்களில் அது திரிக்கபட்டாலும் அதன் மூலம் இந்துமதமே என்பது பட்டவர்த்தனமாக தெரிகின்றது
எவ்வடிவில் மழை பொழிந்தாலும் அந்த மேகங்களின் மூலம் இந்து மதமாகவே இருக்கின்றது.
அப்படி உலக மதங்களின் தாய் என சொல்லபடும் இந்துமதம் அதன் பழமையான வேர்களை ஜப்பானிலும் கொண்டிருக்கின்றது
இந்துக்களை போல ஜப்பானியரும் சரஸ்வதியினை வணங்கி இந்நாட்களில் சிறப்பித்து கொண்டிருக்கின்றார்கள்
ஆம், சரஸ்வதி பூஜை ஒரு காலத்தில் உலக பெரும் பண்டிகையாக இருந்தது என்பதற்கான சான்றுகள் இவை..
இந்து என்றொரு மதமில்லை, அப்படி இந்தியா தாண்டி ஒரு பேச்சே இல்லை என திக திமுக ராம்சாமி கோஷ்டி சொல்லி கொண்டிருந்தால் அவனை பரிதாபமாக பார்த்து  கொஞ்சம் சோறும் நீரும் கொடுத்துவிட்டு   நகர்ந்துவிடுங்கள், 
நாம் அவ்வளவுதான் செய்யமுடியும்.

ஸ்டான்லி ராஜன் பதிவிலிருந்து

அருணகிரி

Wednesday, October 14, 2020

புதுவிதமான பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள்...

 தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் இல்லாத சிறப்பு அம்சம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. ஆமாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒன்றுதான்
சிறப்பிடம் பெற்று இருக்கும்.

ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும்தான்

வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையாக இருக்கட்டும்,
கட்டிடகலையின் உச்ச சாதனைக் கோயிலாக இருக்கட்டும்

இயற்கை அழகுசொட்டும் அருவியாக இருக்கட்டும்,
பசுமை போர்வை விவசாய தோழன் அணைகட்டாக இருக்கட்டும்,

புவியியல் சிறப்பு பெற்ற புதை படிமங்களாகட்டும்,
சித்தர்கள் வாசம் செய்யும் மலையகமாக இருக்கட்டும்,

அயல் தேசத்து பறவைகளின் புகலிடமாக இருக்கட்டும்

இப்படி அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற
ஒரே மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமே.

வாருங்களேன். நீங்களும் வந்து கீழ்கண்ட அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்து ரசித்து அனுபவித்து மற்றவர்களுக்கும் சொல்லுங்களேன்...

முக்கியமாக இந்த சுற்றுலா தலங்களுக்கு
அரசின் எந்தவித நுழைவு வரியும் இல்லை
வாகன நிறுத்துமிட கட்டணமும் இல்லை.

தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒருநாள் இன்ப சுற்றுலாவாக திட்டமிட்டு வந்தால் அனைத்து இடத்தினையும் பார்த்து ரசிக்கலாம். குறைந்த செலவில் நிறைந்த சந்தோஷத்துடன் சுற்றுலாவை கண்டு களிக்கலாம்.

பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாதலங்களை பற்றி ஒரு சில வரிகளில் சுருக்கமாக கொடுத்திருக்கிறேன். படித்து முடித்து ஆர்வம் உள்ளவர்கள் நேரில் வந்து விரிவான விளக்கங்களை அறிந்து ஆச்சரியப்படுங்கள்.

சுற்றுலா ஏற்பாடு செய்யும் முனைவோர்களே.. டிராவல்ஸ் அதிபர்களே...
இதுமாதிரி ஒரு கலவையான சுற்றுலாவை நீங்கள் எங்கும் எப்பொழுதும் அமைத்திருக்க மாட்டீர்கள்., உங்கள் பகுதியில் உள்ளவர்களை பெரம்பலூருக்கு சுற்றுலா அழைத்துவந்து இன்புருங்கள். காத்திருக்கிறோம்.

ஜோதிடர்களே, நாடி பார்ப்பவர்களே, கைரேகை பார்ப்பவர்களே தோஷம் உள்ளவர்களையும், பரிகாரம் செய்யவேண்டியவர்களையும் எங்கள் பகுதியில் உள்ள அருள்மிகு ஏகாபரேஸ்வரர் - குருபகவான் கோயில், கண்ணகிக்கே மனதை ஆற்றுப்படுத்திய அருள்மிகு தண்டபாணி திருக்கோயில், சுவேதகேது முனிவருக்கே தோஷம் அகற்றி முக்தி கொடுத்த அருள்மிகு அபராதரட்சகர் திருக்கோயில் மற்றும் மதுர காளியம்மன் கோயில்களுக்குவரச்சொல்லுங்கள்.

மனநிறைவோடு கடவுள் அருளும் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும் அதுக்கு நான் உத்திரவாதம்.

உங்களுக்கு பொருளாதாரம் - எங்களுக்கு வாழ்வாதாரம்

வேறு தொழில்கள் வாய்ப்புகள் இல்லாத எங்கள்
வானம் பார்த்த வறண்ட பூமியான பெரம்பலூர்
உங்கள் சுற்றுலாவால் வளம் பெறட்டுமே....
------------------------------------------------------------
1. அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்-வாலிகண்டாபுரம்:
கி.பி. 10ம் நூற்றாண்டில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னால் பராந்தக சோழனால் தஞ்சை பெரிய கோயிலுக்கு முன் கலைநயமிக்க சிற்பிகளால் பார்த்துப்பார்த்து அழகுற கட்டப்பட்ட சிறப்பு பெருமை பெற்றது இத்திருக்கோயில். திரேதா யுகத்தில் கிஷ்கிந்தை நாட்டின் அரசன் வாலியே வந்து இங்குள்ள சுயம்பு ஈஸ்வரரை வணங்கித்தான் எதிரியின் பலத்தில் பாதி பெற்றதும் / வாலியை இராமன் மறைந்து இருந்து அம்பெய்து கொன்ற இடம் இது என்றும் ஆதலால் இங்குள்ள ஈஸ்வரர் வாலீஸ்வரர் என்றும் ஊருக்கு வாலிகண்டாபுரம் என்றும் அழைக்கப்படுவதாக சொல்கிறார்கள். இது பெரம்பலூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கியதுவமான திருக்கோயில் ஆகும்.

2. இரஞ்சன்குடி கோட்டை – இரஞ்சன்குடி
சுந்தர சோழனின் சிற்றரசன் வன்னாட்டு தூங்கானை மறவன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டியதாக வாலிகண்டபுரம் கோயில் கல்வெட்டுகள் சிறு குறிப்பினை தருகிறது..நாயக்கர்கள், பிஜப்பூர் சுல்தான் சுல்பீர் கான், மராட்டியர்கள், முகலாய ஆர்காடு நவாப் கூட்டு படைகள் ,கோட்டையை ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி உள்ளனர் .. 1751-52 ராபர்ட் கிளைவின் தலைமையிலான ஆங்கிலப் படை ஆர்டினல் தலைமையிலான பிரெஞ்சுப் படை ஆகியோருக்கு இடையேயான போரில் ஆங்கிலேயர் கோட்டை மீது பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளனர் ..அதன் பிறகு ஆங்கிலேய நவாப் கூட்டுப் படைகளுக்கும்- ஹைதர் அலி படைக்கும் நடந்த போரின் போதும் இந்த கோட்டை பயன்படுத்தப்பட்டது. இது பெரம்பலூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் சென்னை தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை அழியாமல் உள்ள ஒரு சில கோட்டைகளில் இதுவும் ஒன்று.

3. மருதையாறு-கொட்டரை நீர்தேக்கம் (கொட்டரை அணை)
பெரம்பலூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் வட்டம் கல்பாடி பிரிவிலிருந்து ஆதனூர் கொட்டரை நீர்தேக்கத்தை 18 கி.மீ.ல்வந்தடையலாம் புதிய அணை நீர்தேக்கம். புதிய பூங்கா. பரபர[ப்பான நகர வாழ்க்கையில் இருந்து விலகி மருதை ஆற்றின் அழகையும் இயற்கை வளத்தையும் கண்டுகளிக்கவும் மனதுக்கு இனிமை சேர்க்கவும் சிறந்த சுற்றுலாத்தலம்.

4. அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில்-சிறுவாச்சூர்:
கி.பி.9ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதும் ஸ்ரீ ஆதிசங்கரர் வழிபட்டு பாடல் பெற்ற முக்கியத் திருத்தலம். சிலப்பதிகார காவிய நாயகி கண்ணகி மதுரையை எரித்தபின் மனம் அமைதியின்றி வாழ்ந்ததாகவும் இங்கு வந்து செட்டிகுளம் தண்டாயுதபாணியால் ஆற்றுப்படுத்தப்பட்டு சிறுவாச்சூரில் அம்மனாக மக்களுக்கு அருள் பாளிப்பதாகவும் பெரியோர்கள் சொல்கின்றனர். வாரத்தில் திங்கள், வெள்ளி மற்றும் அம்மாவாசை, பௌர்ணமி தினங்களில் மட்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. இத்திருக்கோயில் பெரம்பலூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

5. தேசிய கல்மரபூங்கா-சாத்தனூர்:
இந்தியாவில் வேறு எங்கும் காணக்கிடைக்காத டைனோசர் முட்டை மற்றும் 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட மரம் கல்லாகி போன பாசில்கள் (புதை படிமங்கள்) உள்ள ஒரே முக்கியத்துவம் வாய்ந்த இடம் இது. பெரம்பலூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள ஆலத்தூர் வட்டத்தில் திருச்சி தேசியநெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் பிரிவிலிருந்து செல்லும் சாலையில் சாத்தனூர் கிராமத்தில் ஏரிக்கரை அருகில் உள்ள இந்த தேசிய கல்மர பூங்காவில் மட்டும்தான். வரலாற்று பெட்டகம். ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்த இடம் ஒருசிறந்த பாடமாகும்.

6. அருள்மிகு அபராதரட்சகர் திருக்கோயில்-சு.ஆடுதுறை:
சுவேதகேது முனிவரால் வணங்கப்பட்டு முக்தி பெற்றதும் கி.பி.12ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்தலம். இத்திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 11,12,13 ஆகிய தேதிகளில் சூரியன் மூலவர் சிலை மீது விழும்படி அமைக்கப்பட்ட சிறப்பு பெற்ற திருத்தலம். திருக்கோயில் தொழுதூர் திட்டக்குடி சாலையில் ஆக்கனூருக்கு தெற்கே சு. ஆடுதுறையில் வடவெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.

7. மயிலூத்து அருவி – லாடபுரம் மற்றும் கோரையாறு அருவி
தமிழகத்தில் இருக்கும் ஒரு சில அருவிகளில் பெரம்பலூர் நகரில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் லாடபுரம் பச்சை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மயிலூத்து அருவிக்கும் ஒரு சிறப்பு இடம் உண்டு. இங்கு வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் நவம்பர் மாதங்களில் அருவியில் தண்ணீர் ஆர்பரித்து வந்து சீசன் களைகட்டும். அருவியில் குளித்து இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க மிகசிறந்த இடம்.
இந்த லாடபுரம் மகாபாரத போரில் பஞ்சபாண்டவர்கள் மறைந்து இருந்த (அஞ்சாதவாசம்) இடம் என்ற செவி வழிச்செய்தியும் உண்டு. பச்சைமலையில் திரௌபதிக்கு கோயில் இருந்ததாகவும் காலவெள்ளத்தில் சிதிலமடைந்துவிட்ட அந்த கோயிலையும் காணலாம். வரலாற்று சுவடுகள்.
கோரையாறு அருவி இந்த பச்சைமலைக்கு வடக்கே(பின்புறம்) அதாவது பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் வேப்பந்தட்டை கிருஷ்ணாபுரம் தொண்டமாந்துறை விஜயபுரம் அய்யர்பாளையம் வழியாக பச்சைமலை அடிவாரம் வந்தால் கோரையாறு அருவியை அடையலாம். இயற்கை அன்னையின் மடியில் சுத்தமான காற்று சுத்தமான தண்ணீர் மாசற்ற சூழல் வேண்டுவோருக்கு அமைதியான சிறந்த இடம்.
8. அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்-செட்டிகுளம்.
கி.பி.12ம் நூற்றாண்டில் அதாவது சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் குலசேகர பாண்டிய மன்னனால் இவ்வாலயம் கட்டப்பட்டது. சூரிய ஒளி பங்குனி மாதம் 19,20,21 ஆகிய தேதிகளில் சுவாமிமீது விழும் வகையிலும் சிறுது நேரத்தில் அதே சூரிய ஒளி நகர்ந்து அம்மன் மீதும் விழும்படி இத்திருக்கோயில் தமிழனின் கட்டடகலையின் சிறப்பம்சமாகும். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத இங்கு குபேரனுக்கு தனி சன்னிதியும் பிரசாதமாக பச்சை குங்குமமும் வழங்கப்படுவது தனிச்சிறப்பு. அதுமட்டுமல்லாது 12 ராசிகளுக்குமான குபேரன் ஓம் வடிவில் தனித்தனியாக ஆலய தூண்களில் அமைத்துள்ளது வேறு எங்கும் இல்லா சிறப்பு. இதன் மூலம் குபேர சம்பத்துக்கு வழிகாட்டும் தளமாக இது திகழ்கிறது. இவ்வாலயம் பெரம்பலூரில் இருந்து துறையூர் சாலை பிரிவிலிருந்து செட்டிகுளம் 25 கி.மீ. திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆலத்தூர் கேட் பிரிவிலிருந்து 10 கி.மீ. தூரத்திலும் இவ்வாலயம் அமைந்துள்ளது.

9. விசுவகுடி அணை - கல்லாறு நீர் தேக்கம்
தமிழகத்தில் இருக்கும் மிகசில அணைகளில் 2015ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த விசுவகுடி நீர்தேக்கத்துக்கும் ஒரு இடம் உண்டு. அழகிய பூங்காவுடன் அமைந்த இந்த நீர்தேக்கம் பெரியவர்களையும் குழந்தைகளையும் கவரும் வண்ணம் ரம்மியமாக அமைக்கப்பட்டுள்ளது. இது பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் சாலையில் அன்னமங்கலம் ஊராட்சியில் 33 அடிவர்ரை நீர் தேக்கும் அளவில் கல்லாற்றின் குறுக்கே பச்சை மலைக்கும் செம்மலைக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பினருக்குமான சி’றந்த சுற்றுலா தளம்..

10. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்-செட்டிகுளம்
தமிழகத்திலேயே முருகன் 11 கணுக்களுடைய கரும்புடன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பது இத்தலத்தில் மட்டுமே. இத்தலத்தில் உள்ள காமாட்சியம்மன் அரக்கணை அழிக்க தண்டாயுதபாணிக்கு கரும்பினை கொடுத்தமையால் அம்மன் இத்தலத்தில் கரும்பில்லாமல் காட்சி கொடுக்கிறார். கி.பி.12ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டது. இதன் கட்டிடகலைக்கும் வான சாஸ்திரத்திற்கும் ஒரு சான்று எடுத்துக்காட்டு அதாவது ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம்19,20,21ம் தேதிகளில் மாலை வேளையில் சூரியனின் ஒளிகதிர்கள் சுவாமியின் மீது விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இத்திருதலத்தை தவிர வேறேங்கும் இல்லை. இது பெரம்பலூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் பிரிவில் இருந்து செட்டிகுளம் சென்றால் மலை குன்றின்மீது இருக்கும் சுவாமி தண்டாயுதபாணியை தரிசிக்கலாம்.

11. பறவைகள் சரணாலயம் – ஆதனூர்
விதவிதமான வெளிநாட்டு பறவைகளையும் உள்நாட்டு பறவைகள் நாரை கொக்கு போன்ற பறவைகளை பார்க்கனுமா? அப்ப உங்க சாய்ஸ் பெரம்பலூர் அருகில் இருக்கும் ஆதனூர் பறவைகள் சரணாலயம்தான். வாருங்கள் இயற்கை அழகை ரசித்துக்கொண்டே ஏரியில் மரங்களில் பறவைகள் கிறீச்சிடும் ஓசையும் சிரகடிக்கும் அழகும் ரம்யமான சுற்றுச்சூழலும் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும். அனைவருக்குமான அருமையான ஒரு சுற்றுலாதலம் இது.

12. பிரம்மரிஷி சித்தர்கள் மலைக்கோயில் – எளம்பளூர்
மலைஏற்றம் விருப்பம் உள்ள ஆட்களுக்கு இது ஒரு சிறந்த சுற்றுலாவுக்கான இடம். சிறிய மலை 20-30 நிமிடங்களில் ஏறிவிடலாம். சித்தர்கள் சூட்சுமமாக உலவும் இடம் என்று சொல்லப்படுகிறது.. மலை அடிவாரத்தில் சித்தருக்கு கோயிலும். மலை மேல் விளக்கு தூணும் அமைக்கப்பட்டுள்ளது. மலை மேல் இருந்து கீழே பறவை பார்வையில் பெரம்பலூர் நகரத்தையும் தேசிய நெடுஞ்சாலையையும் பார்ப்பது ஒரு பரவசமான அனுபவம். வாருங்களேன் ஒருமுறை பிரம்மரிஷி மலை ஏறித்தான் பாருங்களேன்... உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம். பெரம்பலூரில் இருந்து 3வது கி.மீ. எளம்பளலூரில் சென்னை தேசியநெடுஞ்சாலையில் இருந்து ஆத்தூர் செல்லும் சுற்றுவட்டச்சாலையில் அமைந்துள்ளது இந்த பிரம்ரிஷி மலை.
---------------------------------------------
அதிகம் பகிர்ந்து சேவை செய்யுங்கள் தோழமைகளே..!

ஒரு மாவட்டத்தின் வளர்ச்சியே உங்கள் கையில்...

தாமரை மக்கள் சேவை மையம்
9944433250