Sunday, January 26, 2020

Ourdreams


                                                          Our dreams




Monday, January 20, 2020

தேனும்.. லவங்கப்பட்டையும்.உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான்!

                                #தேனும் #லவங்கப்பட்டையும்.



உலகத்தில் கெட்டு போகாத ஒரே  உணவு #தேன் தான்! அதிகபட்ச மாற்றம் எதுவென்றால்,  தேன் உறைந்து கிறிஸ்டல்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும். இனி தேனும் லவங்கப் பட்டையும் குணப்படுத்தும் நோய்கள் பற்றி பார்ப்போம். 
#இதய நோயால் மாரடைப்பு வராமல் தடுக்க.இதயத்தின் ரத்தக் குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, போதிய ரத்தம் இல்லாமல்  இருதயம் செயல் இழந்து மாரடைப்பு ஏற்படுகிறது இதற்கு.அற்புத மருந்து இதோ! தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியைதேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். இதய நோய் உங்களை என்றுமே அணுகாது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு
வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது. இதயநோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு 
பலவீனமாக இருக்கும்.அவர்களுக்கு தேனும் லவங்கப்பட்டை பொடியும்  ஒரு வரப்பிரசாதம். ஒரே மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.
அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.மேலும் 
#ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம். #மூட்டுவலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்கள்,தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியைக் கலந்து குடித்துவாருங்கள்.ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.
‘எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் நிச்சயம்  குணமாகும். 
#சிறுநீர்க்குழாய் கிருமிகள் நீங்க. ..
2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில் 
கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும்.#கொலஸ்ரால் என்னும் கொழுப்பு சத்து 2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன்.
2 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி லவங்கப் பட்டை பொடியையும் 16 அவுன்ஸ் தண்ணீருடன் கலந்து  குடியுங்கள். இரண்டு மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும். ஒரு நாளில் மூன்று முறை இரண்டு கரண்டி தேன், ஒரு கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும்.சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.#ஜலதோஷம் நீங்க... 
சூடான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன் 1/4 தேக்கரண்டி லவங்கப் பொடியை குழைத்து  மூன்று நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடிப் போகும்.#அல்சர் உள்ளவர்கள்  இரு தேக்கரண்டி தேன்,  ஒரு தேக்கரண்டி லவங்கப்பொடி கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.
தேனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட்டால் #வாயுத்தொல்லை தீரும்!
#நோய் எதிர்ப்பு சக்தி வளரும். 
தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. இதை நாம் தொடர்ந்து லவங்கப் பொடியுடன் கலந்துஉண்டு வந்தால் 
வைரஸ் ஜுரம், ஃபுளு போன்ற வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கும.#அஜீரணம்...சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து  சிரமப்படுவார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன் இரண்டு தேக்கரண்டி தேனில்
சிறிது லவங்க பொடியை தூவி சாப்பிட வேண்டும். பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல் 
ஜீரணமாகும்.
#நீண்ட ஆயுளுக்கு 3 கப் மிதமான சூடில் உள்ள நீரில் 4 தேக்கரண்டி தேன்,  1 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியை கலந்து வைத்துகொண்டு
ஒரு நாளில் 3 அல்லது 2 முறையாக பருக இளமை ததும்பும்.வயதான தோற்றம் மறைந்தே போகும்.100 வயதில் 20 வயதிற்கான சுறுசுறுப்பைக் காணலாம்.  சருமம் மிருதுவாக இருக்கும். ஆயுள் நீடிக்கும். 1 தேக்கரண்டி தேனை எடுத்து மெதுவாக உண்ணுங்கள். 
3 மணிக்கு ஒரு தரம் இப்படி 
செய்து வாருங்கள். #தொண்டையில் கிச்கிச் போய்விடும்.
#முகப்பருக்கள் அடியோடு மறைய!
3 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கப் பொடியை எடுத்து இரவு படுக்கும் போது இதை குழைத்து பருக்களின் மேல் தடவி காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்புங்கள். தொடர்ந்து இரு வாரம் இதை செய்து வர பருக்களை வேரோடு இது அழித்துவிடும்.
#சொறி, படை போன்ற பல சரும நோய்களை குணப்படுத்த தேன் லவங்க பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு குழைத்து தடவி வர இந்த சரும நோய்கள் குணமாகும்.
#எடை குறைய வேண்டுமா?
தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்கப் பொடியையும் கலந்து குடிக்கவும். அதே போல இரவில் படுக்கப்போகும் முன்னர்தேனையும், லவங்கப்பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல் எடை குறைவது உறுதி.
இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும். அதாவது நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும். ‘வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்று நோய்களை குணப்படுத்தும்.ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து, 
தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில் இந்த புற்று நோய் ஆதிக்கம் குறைந்துவிடும்.
#அயர்ச்சி

தேன்


உடம்பில் சக்தியை அதிகரிக்க தேனை விடச் சிறந்தது இல்லை.  இதில் உள்ள சர்க்கரை ஆபத்தானது 
இல்லை. உடலுக்கு உதவக் 
கூடியது. வயதானவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள், சக்தி குறைவதால் தினமும் காலை ஒரு கப் நீரில், ஒரு தேக்கரண்டி தேனில் லவங்கப் பொடியை நன்று தூவிக் குடிக்க வேண்டும். அதே போல மதியம் 3மணிக்கும் குடித்து வர, இழந்த சக்தியை மீண்டும்  பெறுவார்கள்.#வாய் துர்நாற்றத்தை போக்க! தினமும் காலையில் தேனையும் லவங்கப் பொடியையும் கலந்து சுடுநீரில்  வாய் கொப்பளிப்பதால் வாய் துர்நாற்றம் போய் விடும்.
வாழ்க வளமுடன்.




 

Saturday, January 4, 2020

கடவுள், மொழி, மதம்.

#கடவுள், #மொழி, #மதம்.


பொதுவாக மொழிக்கும் கடவுளுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. கடவுளை அறிந்ததாக சொன்னவர்கள் ஒரு சிலரே, ஆனால் மற்ற அனைவரும் இவர்களை நம்பியும், இவர்களது அறிவுரைகளை கேட்டும், இவர்களை பின் தொடர்ந்துமே கடவுளை வணங்கி வருகின்றனர். கடவுளை அறிந்ததாக சொல்ல படும் சிலர் உலகில் உள்ள மற்ற அனைவருக்கும் எடுத்து கூற மொழி தேவை படுகிறது. https://namennangal.blogspot.com/2020/01/blog-post_94.html

மொழி இல்லாமல் போய் இருந்தால் எதையும், யாரும், யாருக்கும் புரிய வைத்து இருக்க முடியாது. கடவுளை பற்றிய ஞானம் மக்களுக்கு தெரிய படுத்த, அதை கேட்டு அனைவரும் பின் பற்ற மொழி ஒரு முக்கியமான, மறுக்க முடியாத ஒரு தேவை. அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பது மொழி இன்றி அனைவருக்கும் தெரிந்திராது.   

மொழி உருவான பின்பே கடவுளை பற்றி ஞானம் பரவி இருக்க முடியும். வேறு சைகையினாலோ அல்லது ஓவியம் வரைந்தோ கடவுளை பற்றிய செய்திகளை யாராலும் முழுமையாக பரப்பி இருக்க முடியாது. மொழி இல்லாமல் இருந்த காலத்தில் ஒரு சிலர் கடவுளை அறிந்து இருந்தாலும் அதை மற்றவர்களிடத்தில் சொல்லி இருக்க முடியாது.

கடவுளை பற்றிய ஞானம், மொழி உருவானதற்க்கு முன்னரும் மொழி உருவானதற்க்கு பின்னரும் நிச்சயமாக ஒன்றாக இருக்க முடியாது. ஆனால் முதல் முதலாக கடவுளை பற்றிய தகவல்களை பரிமாற ஏதேனும் ஒரு மொழி அவசியம் தேவை. அதன்பின் அந்தந்த மொழிகளில் இருக்கும் கடவுளை பற்றிய தகவல்கள் மற்றோரு மொழிகளில் இருந்து பெறப்பட்டு இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் மொழி இல்லாத காலத்தில் இருந்து மொழி உருவான காலத்திற்க்கு தகவல்களை பரிமாறிக் கொள்ள வாய்ப்புகள் இல்லை.

கடவுளை பற்றிய தகவல்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை மக்களுக்கு அறிவித்து அவர்களை பின்பற்ற வைக்க மதம் என்னும் ஒரு அமைப்பு தேவை படுகிறது. ஆனால் மதம் தோன்ற, மக்கள் அதை பின்பற்ற மொழி நிச்சயம் தேவை. மொழி இல்லாமல் மதம் இல்லை. எனவே மதம் அனைத்தும் அந்தந்த மொழி உருவான பின்னரே தோன்றி இருக்க முடியும். மதம் உருவாகி பின் அதை மக்கள் பின் பற்ற ஏதேனும் ஒரு மொழி நிச்சயம் அவசியம். 
 
கடவுள், மொழி, மதம்.
Tamilan


ஒரு மதம் தோன்றிய காலம் அறிய அது உருவான மொழியின் காலம் அறியப்பட வேண்டும். அதன் பின்னரே மதம் தோன்றிய காலத்தை கணக்கிட முடியும். ஒரு மதம் தோன்றிய மொழியில் இருந்து மற்ற மொழிக்கு பரவி அது பின்பற்றப்பட்டு இருக்கிறது. ஒரு மொழியில் ஒரு மதம் தோன்றி அது மற்ற மொழிக்கு பரவாமல் இருக்கும் போது, அந்த மொழி அழியும் போது அந்த மதமும் அழிந்து, அந்த மதத்தில் பின் பற்றப் பட்ட கடவுள்கள் பற்றிய தகவல்களும் மறைந்து விடுகிறது..

புத்தருடைய மொழி மஹதி ப்ராக்ரித். ஆனால் அவருடைய கருத்துக்கள், போதனைகளாகி, புத்த மதம் உருவாகி, பின்னர் பல்வேறு மொழிகளை சேர்ந்தவர்களால் இன்றும் பின்பற்றப் படுகிறது. ஆனால் புத்த மதம் தோன்றிய மஹதி ப்ராக்ரித் மொழி இன்று இல்லை. புத்த மதம் வேறு மொழிகளுக்கு பரவாமல் இருந்திருந்தால் இன்று புத்தருடைய போதனைகள் நம்மிடையே இல்லாமல் போயிருக்கலாம்.

மேற்கு அந்தமானில், 65,000 ஆண்டுகள் பழைமையான  கிரேட் அந்தமானீஸ் மொழி குடும்பத்தை (Great Andamanese language family) சேர்ந்த கடைசி பெண்மணி, போவா சீனியர் (Boa Sr) கடந்த ஜனவரி 2, 2010 –ல் இறந்தார். அவருடன் அந்த இனத்தை சேர்ந்த போ (Aka-Bo) மொழியும், அதில் பின் பற்றப்பட்ட மதமும் மறைந்து போனது. இது போலவே மனித குலம் தோன்றிய காலம் முதல் ஏராளமான மொழிகளும் அதில் தோன்றிய மதங்களும் மறைந்து போன சரித்திரம் நிறைய உண்டு.


Tamilan

சூட்சும சக்திகளும் நமது உடலும், சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!

சூட்சுமசக்தி:

சூட்சும சக்திகளும் நமது உடலும், சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!

1. நமது மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு நமது மனம்  செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.

நாம் தீயவர்களை நினைக்கும்போது நமது சூட்சும சக்தி அவர்களுடன் இணைந்து நமது வலிமை குறைகிறது. இறைவனை எண்ணும்போது சூட்சும சக்தி வலிமை பெற்று நம்மை காக்கிறது.

2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.

3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.

4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.

5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.

6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.

7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.

8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.

9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.

10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.

11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல. அவனின் சூட்சுமசக்தி காந்தசக்தி போல அவனைச் சுற்றி பாதுகாத்து வருகிறது.

12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.

13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள தொடர்பின் பாதிப்பே ஆகும்.

14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.

15. நோயாளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.

16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.

17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.

18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.

19. ஒரு மனிதனை புண்படச் செய்வது நூதனமான கொலைக்கு சமம்.

20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.

21. நாம் விஞ்ஞான அறிவை மட்டும் பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.

22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

23. வலி என்பது உடலின் மொழி. 
அதை ஒரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.

24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.

25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.

26. உடலின் உறுப்புக்கள் அனைத்தும் மனதுடன் சேர்ந்து இயங்குவதே ஆரோக்கியம். மனது நோயுற்ற பின்னரே உடல்  நோயுறுகிறது.

27. விவசாய நிலத்தில் தாயின் கருவறையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.

28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.

29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.

30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.

31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.

32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.

33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய சக்திகள் நீங்கும்.

34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.

35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரீரத்தின் கவசம் பலம் பெறுகிறது.

36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.

37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடக்கவும்.

38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.

39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.

40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரீரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.

41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.

42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.

43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.

44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.

45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.

46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.

47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.

48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.

49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.

50. தூக்கம் என்பது, 
விழிப்புணர்வு அற்ற தியானம். 
 
தியானம் என்பது, 
விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம். 
*சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்.

Wednesday, January 1, 2020

கண்ணை மூடி இறைவனை வணங்குவது சரியா?



திருச்சிற்றம்பலம்*
முப்பொழுதும்... *நற்றுணையாவது நமசிவாயவே*

*கண்ணை மூடி இறைவனை வணங்குவது சரியா?*
சிலர் கோயிலுக்கு செல்கிறார்கள்.
வரிசையில் நிற்கிறார்கள். கருவறையில் மூலவரைக் கண்டவுடன் வழிபாடு என்ற பெயரில் கண்களை மூடிக்கொள்கிறார்கள்.
சூட தீபாரதனை காட்டினால் கூட தெரியாத அளவிற்கு கண்களை மூடி நின்று கொண்டிருக்கிறார்கள்.
இப்படி செய்வது இறைவழிபாடு ஆகாது.
கோயிலில் உள்ள மூலவரைக்கண்டவுடன் ஒரு நொடி கூட வீணாக்காமல் மூலவரை வைத்தகண் அகற்றாமல் பார்த்து தரிசனம் செய்யுங்கள்.
இறைவனின் அழகில் உங்கள் மனதை பறிகொடுங்கள்.
இறைவனின் ஆடை அணிகலனை ரசியுங்கள்.
அவர் அருள்பாலிக்கும் கோலத்தை நினைத்து வியப்படையுங்கள்.
ஏனென்றால், நீங்கள் மூலவர் முன் செல்லும்போது சில சமயம் திடீரென அபிஷேகத்திற்காக திரை போட்டு விடலாம்.அல்லது அர்ச்சகர் மூலவரை மறைத்துவிடலாம்.
எனவே கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே
இறைவா! உனது தரிசனத்தை சிறப்பான முறையில் எனக்கு கிடைக்க அருள்புரிவாய்.
நான் உன்னை தரிசிக்க முடியாவிட்டாலும் கூட நீ என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறாய்.
உனது கடைக்கண்பார்வை என்மீது விழட்டும்
என மனதார பிரார்த்தனை செய்து கொண்டே, இறைவனை காண செல்லுங்கள்.
இறைவனிடம் வேண்டுவதற்கு ஒன்றுமில்லை.
நம்மைப்படைத்த இறைவனுக்கு நமக்கு எது தேவை என்பதும் தெரியும்.
எனவே இறைவனிடம் கண் மூடி வேண்டுவதை விட்டு விட்டு, கண்திறந்து பார்த்து தரிசியுங்கள்.
அழகில் மயங்குங்கள். அத்துடன் இறைவா! என்னை நீ தான் வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய்.
எனக்கு எது தேவையோ அதைக்கொடு.
எது தேவையில்லையோ அதை நீக்கிவிடு
என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.
மேலும், இறைவா! நீ என் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்திருந்து அருள் ஆட்சி செய்வாய் என வேண்டி
இறைவனை இல்லத்தில் எழுந்தருள செய்யுங்கள்.
பின்னர் தினசரி பூஜையின் போது, கோயிலில் தரிசித்த இறைவனின் திருவுருவத்தை மனதில்நினைத்து பிரார்த்தனை செய்வது தான். உண்மையான வழிபாடு ஆகும்...


https://namennangal.blogspot.com
https://namennangal.blogspot.com