Monday, August 31, 2015

நேரத்திற்குச் சாப்பிட்டால்தான் அல்சர் வரும்!

நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்று உங்களுக்கு இத்தனை நாளும் போதிக்கப்பட்டுள்ளது. அல்சர் பெரும்பாலும் நேரா நேரத்திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமோ அல்லது சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். இப்போது அந்தச் சாதம் கெட்டுப்போய் நாற்றம் எடுக்கும். சில சமயம் புழுக்கள்கூட வந்திருக்கலாம். மீண்டும்அந்தப் பாத்திரதை மூடி அப்படியே வைத்து விடுங்கள். மறுபடியும் ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். அந்தக் கெட்டுப்போன சாதம் விஷமாக மாறி, அந்தப் பாத்திரத்தைப் பாதித்து ஓட்டை போட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம் (இதை வீட்டிலேயே சோதித்துப் பாருங்கள்).
இப்போது அல்சர் எப்படி வந்தது என்று உங்களால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் நினைப்பது போல் நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்பதெல்லாம் பொய். பசிக்காமல் நேரத்திற்குச் சாப்பிடும்போதுதான் அல்சரே வருகிறது.
பசித்துச் சாப்பிடும் போதுதான் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. வயிற்றில் நேரத்திற்கு அலாரம் வைத்துக்கொண்டு ஜீரண நீர்கள் சுரப்பதில்லை. அந்தந்த ரேத்திற்கு வருவதற்கு இது ஒன்றும் பேருந்தோ, ரயிலோ அல்ல. என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா, நேரா நேரத்திற்குச் சுரப்பதற்கு அங்கு எந்த விதமான ஏற்பாடும் கிடையாது. மனித உடலானது முற்றிலும் உணர்வுகளால் ஆனது. உணர்வுகளே மனித உடலை வேலை செய்யத் தூண்டுகின்றன, வேலையை முடிக்கவும் தூண்டுகின்றன. செயல்படுத்தவும் வைக்கின்றன. நேரத்திற்கு ஜீரண நீர் சுரந்து விடும். அப்போது வயிற்றில் சாப்பாடு இல்லையென்னறால் அல்சர் புண் வந்துவிடும் என்பது போன்ற காமெடி வேறு எதுவும் இல்லை.
நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வருகிறதென்றால், இந்தியாவில் பெரும்பாலான ஏழை மக்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் அல்சர் வந்திருக்க வேண்டுமே! பெரும்பாலும் அல்சர் வருவது மூன்று வேளையும் நன்கு சாப்பிடுபவர்களுக்கே என்பதைக் கவனியுங்கள்.
நீங்கள் பசிக்காமல் மூன்று வேலையும் சாப்பிடும் போது, ஜீரண நீர்கள் சுரக்காத நிலையில் வயிற்றில் இருக்கும் உணவு அங்கேயே தங்கி, புளித்து, கெட்டு, கெட்ட வாயுக்கள் உருவாகத் துணை புரிகிறது. தினம்தோறும் இதுபோன்ற செயல் தொடர்ந்து நடைபெறும்போது, கெட்டுப் போன உணவு விஷமாக மாறுகிறது. பாத்திரத்தில் வைத்த உணவு எப்படி விஷமாக மாறுகிறதோ.... அப்படி விஷமாக மாறிய உணவு, உங்கள் வயிற்றில் அல்சரை (புண்களை) உருவாக்குகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
ஜீரணம் கெட்டால்தான் அல்சர் வருமே ஒழிய, ஜீரணிப்பதற்கு அங்கு ஒன்றுமே இல்லாத போது அல்சர் வராது. சாப்பிடாமல் இருந்தால் உடல் சோர்வடைந்து, சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அது சம்பந்தமாக நோய்கள் வேண்டுமானால் வரலாம்.
அல்சர் வயிற்றில் மட்டுமல்லாமல், உடலின் எந்தப் பாகத்தில் வேண்டுமானாலும் தோன்றலாம். நாட்பட்டு வெளியேற முடியாமல் தேங்கும் கழிவுகள் அந்த இடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட அந்த இடத்தில் புண்கள் உருவாகின்றன. அதையே அல்சர் என்கிறோம். அல்சர் என்ற புண்கள் குணமாக வேண்டுமானால், தேங்கியுள்ள் கழிவுகளை முதலில் வெளியேற்ற வேண்டும். கழிவுகள் வெளியேறாவிட்டால் மீண்டும் மீண்டும் அல்சர் வந்துகொண்டே தான் இருக்கும்.
அல்சர் வந்துவிட்டால் உங்கள் உடலில் கழிவுகளின் தேக்கம் நிறைய உள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

வியக்க வைக்கும் வியர்வையின் நன்மைகள்...?

வியர்வையால் மனிதனுக்கு சில நன்மைகளும் கிடைக்கின்றது. குறிப்பாக குண்டாக இருப்பவர்களுக்கு அதிகம் வியர்க்கும். அதிகம் வியர்த்தால் தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தையும் பழகிகொள்ளலாம். ஏனெனில் வியர்வை அதிகம் வெளியேறினால், உடலின் நீர்ச்சத்தானது குறைந்துவிடும்.
அதிகம் வியர்த்தால், எப்போதும் காற்றாடிக்கு அருகிலேயே உட்காராமல் சற்று வியர்க்கவும் வழிவிடலாம். வியர்வை அதிகம் வெளியேறினால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது ஊக்குவிக்கப்படும். அதனால் தான் காய்ச்சலின் போது வியர்த்தால், காய்ச்சலானது குணமாகிவிடுகிறது.
உடற்பயிற்சியின் போது வெளிவரும் வியர்வையானது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. அதிலும் நடைபயிற்சி அல்லது வேறு ஏதேனும் உடற்பயிற்சி செய்தால், இதயமானது வேகமாக இரத்தத்தை அழுத்துவதால், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராகி, உடலின் மெட்டபாலிசமானது அதிகரித்து, உடல் எடை குறைய வழிசெய்கிறது.
வியர்க்கும் போது சருமத்துளைகளானது விரிவடைந்து, அதன் வழியே வியர்வை வெளியேறுவதால், சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, சருமத்தை பொலிவாகவும், மென்மையாகவும் மாற்றுகிறது.
உடற்பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வந்தால், சிறுநீரகமானது சீராக செயல்பட்டு, சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு குறையும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், உடற்பயிற்சியில் ஈடுபடும் போது நன்கு வியர்வையானது வெளியேறினால், மன அழுத்தம், சோர்வு போன்றவை நீங்கி, மனநிலையானது
புத்துணர்ச்சி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் உடற்பயிற்சியின் போது மூளையில் உள்ள கெமிக்கலானது ஊக்குவிக்கப்பட்டு, ஒருவரின் மனதை சந்தோஷமாகவும், ரிலாக்ஸாகவும் வைக்கவும் உதவுகிறது.

Saturday, August 29, 2015

விதவைகள் மறுமணம் செய்வதும் விதவைகளை திருமணம் செய்வதும் இந்துமத நெறி!!


கணவனை இழந்த பெண்களுக்கு இந்துக்கள் கொடுமைகளை செய்திருக்கின்றனர். இதைச் சுட்டிக்காட்டி இந்துமதத்தை பிற இனத்தவர்கள் இகழ்ந்தும் இருக்கிறார்கள். வக்கிரம் கொண்ட இந்துக்கள் சிலர் செய்த தவறு இந்த மதத்துக்கு அவப்பெயர் தந்தது. உண்மையில் கணவன இழந்த பெண்களுக்கு தேறுதல் தரும் நியாயத்தை தந்தது இந்துமதம்.
நமது அடிப்படை நூலான வேதத்தில் (அதர்வணம்) காண்டம் 13ல் கூறப்படுவது:

"பெண்ணே! உனது இறந்து போன கணவனைப் பற்றிய துயரத்தை விட்டுவிடு. அவனை மறந்து வாழும் உலகுக்கு வந்துவிடு. திரும்பவும் மணந்திடு. குழந்தைகளைப் பெற்றிடு.
தனது கணவனத் தொடர்ந்து மயானம் வரை சென்ற ஒரு பெண்ணை நான் திரும்ப கொண்டு வந்திருக்கிறேன். அவள் வருத்தத்தில் அழுது புலம்புகிறாள. ஆனால் நான் அவளை உலகிற்கு திரும்பவும் கொண்டு வந்து விட்டேன்"

கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்:

ஆகம விதிகளின் படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத,ஆகம ,சிற்ப சாஸ்திர முறைப்படி,யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில்,நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வத்தை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.
ஆகவே தான்,பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். பெரும்பாலும் தெய்வ சிலைளை உலோகங்களில் செய்யாமல், ருங்கல்லால் சிலை செய்கிறார்கள்.அதற்கு முக்கியமான கரணம் உண்டு.
உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது.எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மைஉடையது கருங்கல்.இதில் நீர்,நிலம் ,நெருப்பு ,காற்று,ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது.இது வேறு எந்த உலோகத்திலும் வெளிபடுவது இல்லை.
நீர்:
கல்லில் நீர் உள்ளது.எனவே தன் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது.கல்லில் நீருற்று இருப்பதை காணலாம்.
நிலம்:
பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் உள்ளது.எனவே கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.
நெருப்பு:
கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு.கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.
காற்று :
கல்லில் காற்று உண்டு.எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.
ஆகாயம்:
ஆகாயத்தைப் போல் ,வெளியிலிருக்கும் சப்தத்தை தனக்கே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு.எனவே தான் கருங்கல்லில் கட்டப்பட்ட'கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம்.

இக்காரணங்களினால்,இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம் பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம். அபிஷேகம்,அர்ச்சனை,ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது ,ஒரு கோவிலின் பஞ்சபூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும்போது , நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி ,அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன.

கடவுள் எப்படி வருவார்?

கடவுளே,என்னிடம் பேச மாட்டாயா?'' என்று ஒருவன் நெஞ்சுருக வேண்டினான்.
அப்போது அவன் அருகில் ஒரு குயில் கூவிற்று. ஆனால்
அதை அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,என்னிடம் நீ பேச மாட்டாயா?''என்று இப்போது அவன் உரத்த குரலில் கத்தினான். அப்போது வானத்தில்
பலத்த இடியோசை கேட்டது.அதையும் அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,,உன்னை நான் உடனடியாகப் பார்க்க வேண்டும்,''என்று இப்போது அவன் வேண்டினான். அப்போது வானில் ஒரு தாரகை சுடர்விட்டுப்
பிரகாசித்தது. அதையும் அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,எனக்கு ஒரு அதிசயத்தைக் காட்டு,'' என்று பிரார்த்தனை செய்தான். அப்போது அருகில்
ஒரு குழந்தை பிறந்து அழும் சப்தம் கேட்டது. அதையும் அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,நீ இங்கு என் அருகில் இருக்கிறாய் என்பதை நான் தெரிந்து கொள்ள என்னை நீ தொட வேண்டும்,''என்று கூவினான். அப்போது அவன் தோளில் ஒரு அழகிய
வண்ணத்துப் பூச்சி வந்து அமர்ந்தது. அவன் அதை கையால் அப்புறப்படுத்தினான்.
கடவுள் நம்மைச் சுற்றி சிறிய எளிமையான விஷயங்களில் இருக்கிறார்.
எனவே அந்த அருட்கொடையை தவற
விட்டு விடாதீர்கள்.
ஏனெனில் கடவுள் நீங்கள் எதிர் பார்க்கும் வடிவில் வருவார் என்று எதிர் பார்க்காதீர்கள்....""
-நான் கடவுள்

மாத்தி யோசிப்போம் . .


அந்தணர் ஒருவர் முக்கியமான
காரியத்திற்காக
குளித்துவிட்டு ஈர உடையுடன்
வீட்டை விட்டு தெருவில்
இறங்கினார் .
அவருக்காகவே காத்திருந்தது
போல
ஒரு பூனை குறுக்கே ஓடியது .'' சனியன்
பிடித்த பூனை'' என்று ஆங்காரமான
குரலில் கத்தினார் அந்தணர்.ஓடிய
பூனை நின்றது .
கோபத்துடன் திரும்பிப்
பார்த்து அவரை முறைத்தது.மீசை துடிக்க , '' ஏ
மனிதனே , எதற்காக என்னைத்
திட்டினாய் ?'' என்று கடுமையான
குரலில் கேட்டது .
வியப்படைந்த
அந்தணர், '' முக்கியமான காரியமாக
நான் புறப்பட்டேன் .
அந்த சமயத்தில்
கறுப்புப் பூனையாகிய
நீ
அபசகுனம் போல
குறுக்கே வரலாமா ?''என்றார்
சற்று சமாதானமான
குரலில். பூனை அவரைப் பார்த்துக்
கேட்டது , '' எல்லாம இறைவன்
சித்தப்படிதான் நடக்கும் என்று நீ
ஓதிய வேதங்கள் கூறவில்லையா?
அப்படியிருக்க சகுனத்தின் பேரில்
பழி போடுவது நியாயமா ?
இந்த
சகுனம் பற்றி உனக்குக்
கற்பித்தது யார்? உன்
தாயா ,தந்தையா , குருவா , அல்லது நீ
ஓதிய வேதங்களா ?'' அனல் போல்
பொழிந்த பூனையின்
வாதங்களுக்கு பதில் சொல்ல
முடியாமல் திணறினார் அந்தணர்.
பூனை தொடர்ந்தது, '' மூன்று நாட்களாக
ஒரு எலியைக் குறி வைத்து நான்
பாயும் போதெல்லாம் உங்கள்
வீட்டிலிருந்து யாராவது
குறுக்கே வந்துள்ளீர்கள்.
அதற்காக
நான் உங்களைத் திட்டினேனா?
சரி , நமக்கு இன்னும் நேரம்
வரவில்லை என்று என்னை
நானே சமாதானப்
படுத்திக்
கொண்டேன் .இன்றாவது
அது சிக்கும்
என்ற நம்பிக்கையில் நான்
சென்று கொண்டிருக்கிறேன் .
'' அபசகுனம் என்று வீட்டுக்குத்
திரும்ப நினைத்த அந்தணர்
தனது முடிவை மாற்றிக்
கொண்டு ,பூனைக்கு வந்தனம்
சொல்லிவிட்டு தன பயணத்தைத்
தொடர்ந்தார் .

Friday, August 28, 2015

மா..டி..பா..டா..குட்டி..செல்லம்

மனைவியை அல்லது காதலியை வாடி போடி என்றும்.. வாமா போமா என்றும் வாடா போடா என்றும் பா என்றும் செல்லம் குட்டி என்றும் அழைப்பது அனைத்து ஆண்களின் வழக்கமாக இருக்கிறது. இதையெல்லாம் என்ன அர்த்தத்தில் தன் துணையை அழைக்கிறோம் என்று அநேகம் பேருக்கு தெரிவதில்லை.
இதற்க்கு எல்லாம் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது.
மா என்று அழைப்பது அவர்களை ஒரு தாயாக நினைத்து,
பா என்று அழைப்பது அவர்களை தந்தைக்கு நிகராக நினைத்து,
டா என்று அழைப்பது அவர்களை தன் தோழனுக்கு நிகராக நினைத்து (தனக்கு நிகராகவும்
நினைத்து தான்) அதாவது ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையில்,
குட்டி என்றுஅழைப்பது குழந்தைக்கு நிகராகவும்
செல்லம் என்று அழைப்பது தன்னுடைய அன்புக்கு நிகராகவும
அழைக்கிறார்கள்...
ஆனால் டி என்ற வார்த்தை தன்னுடைய மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோக படுத்த வேண்டும்.
அதனால் தான் நான் பெண்களை வாடி போடி என்று அழைப்பதில்லை.
அந்த எழுத்து என் மனைவிக்கானது.அதை நான் மற்ற பெண்களிடம்
பயன்படுத்தவிரும்பவில்லை..மேலும் டா என்ற வார்த்தை தன்னுடைய மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும்.
அதனால் தான் பிற பெண்கள் என்னை டா என்று அழைப்பதை நான் விரும்புவது இல்லை.
அது என் மனைவி மட்டும் என்னை அழைப்பதற்கான வார்த்தை. அதை நான் பிற பெண்களிடம் இருந்து கேட்க விரும்பவில்லை...!!!

தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரமிப்பானது.

தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரமிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.
1. வைகறை
2. காலை
3. நண்பகல்
4. எற்பாடு
5. மாலை
6. யாமம்
என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன.
அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.
தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்...!

Thursday, August 27, 2015

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கோயிலுக்கு செல்லலாமா?


இறைவனின் படைப்பில் மனிதர்களே சிறந்த படைப்பாகும்.மனிதர்களில் பெண்கள் மட்டுமே இயற்கை உடற்க்கூறு மாற்றம் அதிகம் கொண்டவர்கள்.ஒரு உயிரை ருவாக்கும் பெரும்பங்கு பெண்களையே சாரும் அதனால்தான் பெண்களை தெய்வத்திற்கு சமமானவர்கள் என்று சாஸ்திரம் போற்றுகின்றது.
அந்த கால கருங்கல் கோவில்கள் மனித உடல்நிலை வெப்பநிலையை பொறுத்தே அமைக்க பட்டது . அதாவது மனித உடலின் சராசரி வெப்பநிலை எவ்வளவோ அதே வெப்பநிலை கருங்கல்லால் கட்டப்பட்ட கோவில்களுக்கும் உண்டு .
மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும் .அந்த நேரங்களில் கோவில்களுக்கு பெண்கள் வந்தால் இன்னும் அதிக படியான உஷ்ணம் உண்டாகும் . இதனால் அதிக படியான ரத்தபோக்கு உண்டாகும் . இதை கருத்தில் கொண்டே கோவில்களுக்கு மாதவிடாய் காலங்களில் பெண்கள் வரக்கூடாது என்று முன்னோர்கள் கூறினார் .
ஒரு பெண்ணிற்குள் உள்ளே என்ன இருக்கிறதோ அதே இரத்தம் தான் மாதவிலக்கு நேரத்தில் வெளியேறுகிறது. மேலும் எந்த இரத்தம் வெளி ஏறுகிறதோ, அதிலே தான் ஒவ்வொரு மனிதனும் கருவாகி, பின்பு திசுவாகி, பிள்ளையாகி, பெரிய ஆளாகிறான்.
அந்த காலங்களில் பெரியவர்கள் மாதவிலக்கு நேரத்தில் பூரண ஓய்வினை பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தினை கொண்டு செயல்பட்டனர்.
இதுவே காலப்போக்கில் தீட்டு நாட்களில் பெண்களை தீண்ட கூடாது மற்றும் இறைவழிபாடுகளில் ஈடுபடக்கூடாது என்ற மூட நம்பிக்கையாக உருவெடுத்துவிட்டது என்பதே உண்மையான விசயமாகும்.

திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்

திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல.
ஒருவர் இன்னொருவரிடம்
பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில்
தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.
அரிசி, நெல் முதலானவற்றை
கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான்
கொடுப்பார்கள்.
பணமாயிருந்தால் தட்டு.
இது எதனாலென்றால்,
கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில்
மேல்கீழாய் இருந்தாலும்
அந்த
வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.
வெறுமனே கையால் கொடுத்தால்,
கொடுப்பவர்கை மேலும்
வாங்குபவர்கை கீழுமிருக்கும்.
இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்
நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே
எப்பொருளை கொடுத்தாலும்
தட்டில் வைத்துக்கொடுப்பதை பழக்கமாகக்கொண்ட
ிருந்தனர்
நம் முன்னோர்கள்.
இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும்
இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.
# அழைப்பிதழ் கொடுக்கப்போகும்போது
கூடவே தாம்பூலத்தட்டையும் எடுத்துச்செல்லுங்கள்...