Thursday, July 9, 2020

தமிழ் இந்து மத நூல்களை திருடிய கிறிஸ்தவ மிஷனரிகள்

தமிழ் இந்து மத நூல்களை திருடிய கிறிஸ்தவ மிஷனரிகள்
#சுந்தா்ஜீ


தோலுரிப்பு தொடங்குகிறது...

"விரிவிலா வறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனு மெம்பிராற் கேற்ற தாகும்
பரிவினாற் பெரியோ ரேத்தும் பெருவேளூர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி யுய்யும் வகையது நினைக்கின் றேனே"

என்று பெருவேளூர் இறைவனைப் பாடுகிறார் திருநாவுக்கரசு சுவாமிகள். இப்பாடலின் பொருளை கீழே விளக்கி இருக்கிறோம்.

சிற்றறிவு கொண்டவர்கள் புதிய மதத்தை உண்டாகுவார்கள். பிறகு வயிற்றெரிச்சலால் அந்த மதத்தை பிரச்சாரம் செய்வார்கள். அந்த மதம் பொய்யான மதம் என்றாலும் இதனை சிவபெருமான் பொறுத்துக் கொள்கிறார். ஆனால் பெரியோர்கள் அன்போடு வழிபடும் பெருவேளூர்ப் பெருமானை வணங்கி பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுபடும் வழியை விருப்புற்று நினைக்கின்றேன் நான்.

அவரவர்களுடைய சிற்றறிவுக்குத் தகுந்த சமயத்தை உருவாக்கிக் கொள்ளவும் இறைவன் அனுமதிக்கிறான். சிற்றறிவு படிப்படியாக விரியும் போது அதற்கேற்பச் சமயங்களும் படிமுறையில் அமைகின்றன. முற்ற விரிவடைந்த அறிவுடையோர்க்கே உண்மையை உள்ளவாறு உணர்த்த இயலும். உண்மை உணர்த்தும் அச்சமயத்தை இறுதியாக அடையத்தக்கதாக வைத்தான் இறைவன்.

மற்ற சமயங்கள் யாவும் பதி, பசு, பாசம் என்ற முப்பொருள் இயல்புகளை விவாதித்துக் கொண்டிருக்கின்ற பூர்வ பக்கச் சமயங்கள் என்றும், அந்த முப்பொருள் இயல்புகள் இவையே என்று விவாதித்து முடித்து முடிந்த முடிவாகச் சொல்லும் சமயம் சித்தாந்தம் என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே சித்தாந்தம் என்பது காரண இடுகுறியாய்ச் சைவ சித்தாந்தத்திற்கே வழங்கப்படுகிறது.

இதனால் எல்லாச் சமயங்களும் இறைவனால் வகுக்கப்பட்டன என்றே சைவசித்தாந்தம் கொள்ளும். கொள்வதால் யாரிடமும் வம்புச் சண்டைக்குப் போவது இல்லை.

அதேசமயம் இதைச் சாதகமாக வைத்துக் கொண்டு சமயாதீதமாக விளங்கும் சைவசித்தாந்தத்தையும் சிவபரம்பொருளையும் இகழ்ந்து வம்புச் சண்டைக்கு வருவோரை விட்டு வைப்பதும் இல்லை. அது வைதீகப் புறச்சமயத்தார் ஆயினும், அவைதீகப் புறச்சமயத்தார் ஆயினும், சைவம் தன் கண்டனங்களையும் மறுப்புகளையும் தந்து கொண்டே இருந்தது.

இன்று வைதீகப் புறச்சமயத்தாரைக் காட்டிலும் பெரும்பாலும் அவைதீகப் புறச்சமயத்தாரே தொடர்ந்து சிவநிந்தனை செய்து வருகின்றனர்.

அவ்வகையில் கிறிஸ்தவ மிஷனரியான வீரமாமுனிவர் பதினேழாம் நூற்றாண்டில் சிவநிந்தனை செய்து தம் மதத்தைப் பிரச்சாரம் செய்து வந்தார். அவரைக் கண்டித்து வீரசைவ மரபில் வந்த "கற்பனைக் களஞ்சியம்" துறைமங்கலம் சிவப்பிரகாசர் "ஏசு மத நிராகரணம்" என்ற நூலை எழுதினார். அந்தச் சுவடிகள் எங்கெங்கு இருந்தனவோ எல்லாவற்றையும் வாங்கி அழித்தார்கள் வீரமாமுனிவரின் ஆட்கள். இன்று மூன்றே பாடல்கள் மட்டும் கிடைக்கின்றன. பிறகு தமிழகத்தில் பெரிதாக எந்த மோதல்களும் இல்லாமலேயே இருந்தது.

பதினாறாம் நூற்றாண்டில் இலங்கையில் போர்த்துக்கேயரின் ஆட்சியில் அநேக அத்துமீறல்கள் நடந்து கொண்ட  இருந்தன. இதேநிலை அவர்களுக்குப் பின்னரும் டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர் என்று தொடர்ந்தது.

கோயில்கள் இடிக்கப்பட்டன; வழக்கு, தண்டனை என்று அச்சுறுத்திச் சைவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டார்கள்; உத்தியோகம், பணம் ஆகியவற்றாலும் மதமாற்றம் செய்யப்பட்டார்கள்; சைவ நூல்களைக் கற்றுத் தம் சமயமே சிறந்தது என்ற உறுதியுடைய சைவர்கள் உள்ளே சைவராகவும் வெளியே கிறித்தவராகவும் இருந்து வந்தார்கள் (இவர்கள் பஞ்சாட்சரக் கிறித்தவர்கள் என்று சொல்லப்பட்டார்கள்); யாழ்ப்பாணத்து ஞானப்பிரகாசர் பசுக்கொலைக்கு அஞ்சித் தமிழகத்திற்கு வர நேர்ந்தது.

இவ்வளவு துன்பங்கள் நேர்ந்தாலும் சைவ சித்தாந்தம் அங்கே உயிர்ப்போடு இருந்தது. அதற்குக் காரணம் என்னவென்று "யாழ்ப்பாணச் சரித்திரம்" என்னும் நூலில், முத்துத் தம்பிப் பிள்ளை கூறுகிறார் பாருங்கள்.

"பறங்கிக்காரரும் ஒல்லாந்தரும் அரசு செய்த இருநூறு வருஷ காலமும் தமது சமயத்தில் பிரவேசிக்கும்படி பெருந்துன்பங்கள் செய்து குடிகளை வருத்தினர். அதற்காற்றாது அச்சமயத்தைக் (கிறிஸ்தவம்) கைக்கொண்டார் போலப் புறத்தே நடித்தும் அகத்தே சைவசமயிகளாயே இருந்தார்கள். பறங்கிக்காரரும் ஒல்லாந்தரும் தமது சமயத்தின் மேற்கொண்ட பேரபிமானம் பற்றி மற்றைச் சமய ஆலயங்களையும் சமய நூல்களையும் கல்வி நூல்களையும் எரியூட்டி அழித்தார்கள். அழித்தும் நம் முன்னோர்கள் சைவத்திலும் சமய நூல்களிலும் கல்வி நூல்களிலும் வைத்த அசையாப் பேரன்பினாலே அவற்றை இரகசியத்திற் பாதுகாத்து வந்தனர். அங்ஙனம் அவர்கள் பாதுகாத்து வையாதிருப்பரேல் யாழ்ப்பாணம் சைவமணமும் தமிழ்க்கல்வியும் சிறிதுமில்லாத நாடாயிருக்கும்."

இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்து மதத்தைக் காப்பாற்றுவேன் பேர்வழி என்று சமய நூல்களில் போதிய அறிவில்லாமல் வெறுமனே மாற்று மதத்தினரிடம் சண்டை போட்டுக் கொண்டு அவர்களைக் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டு இருப்பவரால் தம் மதத்தை எள்ளளவும் காப்பாற்ற முடியாது என்பது உறுதியாகிறது.

ஆனால் இக்காலத்தில் நம் சைவ நூல்களைப் பயிலுங்கள் என்று தலைப்பாடாக அடித்துக் கொண்டாலும் யாரும் கேட்க மாட்டார்கள்; அடுத்தவரை வசைபாட மட்டும் பயில்வார்கள்.

இனி யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களை நினைவு கூர்வோம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்கள் கிறித்தவர்களின் மதமாற்றத்தைக் கண்டிக்கும் விதமாக முத்துக்குமார கவிராசர் இயற்றிய ஞானக்கும்மி, யேசுமத பரிகாரம் ஆகிய நூல்களைப் பதிப்பித்தார்.

பெர்சிவல் பாதிரியாருக்குப் பண்டிதராய் இருந்து தமிழ் கற்பித்த காலத்தில் பைபிள் மொழிபெயர்ப்புப் பணியைச் செய்திருந்ததால் அந்நூலில் உள்ள குற்றங்கள் யாவும் கிறித்தவர்களைக் காட்டிலும் ஆறுமுக நாவலருக்கு அத்துப்படி. ஆகவே தொடர்ந்து சிவநிந்தனைகளை எழுதி வந்த கிறித்தவருக்கு நாவலர் அவர்களும் நாகரிகமான முறையில் கண்டனங்களை எழுதியுள்ளார். சைவ தூஷண பரிகாரம், யாழ்ப்பாணச் சமய நிலை, சுப்பிர போதம் போன்ற நூல்கள் அவ்வாறு வெளிவந்தன.

பிறகு கிறித்தவர் தமிழ்நாட்டில் இருந்து ஒருவரை அழைத்து வந்து சைவ நிந்தனை செய்வித்தார்கள். நாவலர் அவர்கள் அந்தக் கிறித்தவரோடு வாதம் செய்யும் பொறுப்பை காசிவாசி செந்திநாதையர் அவர்களிடம் ஒப்படைத்தார்கள். கிறித்தவர்களின் சைவ நிந்தனைக் கட்டுரைகளைக் கண்டித்து எழுதித் தர்க்க ரீதியாகத் தகர்த்தார் செந்திநாதையர் அவர்கள். அதோடு நில்லாமல் பொது மேடையில் சமய வாதம் செய்யவும் ஆயத்தமானார்கள்.

இலங்கை நேசன் பத்திரிகையில் விளம்பரம் செய்து தம்முடன் வாதம் செய்ய வருமாறு கிறித்தவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். தாம் தோற்றால் எவ்விதக் கைம்மாறும் கருதாமல் கிறித்தவ சமய பிரச்சாரம் செய்வதாக அறிவித்தார்கள். செந்திநாதையரோடு வாதம் செய்ய எவரும் முன்வரவில்லை. ஆனால் தம் பத்திரிகை ஒன்றில் யாரோ ஒருவரைக் கொண்டு ஐயரைக் குறைகூறி "இழிமொழித் திமிர தீபிகை" என்று எழுதினார்கள். அதற்கு நாவலர் அவர்கள் இலங்கை நேசன் பத்திரிகையில், காசிவாசி செந்திநாதையர் அவர்களின் படிப்பாற்றலையும், தருக்க ரீதியில் வாதம் செய்யும் திறமையையும் குறிப்பிட்டு எழுதி அவர்களைக் கண்டித்தார்கள்.

(தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் புலமை வாய்ந்த செந்திநாதையர் அவர்கள் காசியில் பத்தாண்டுகள் தங்கி வடமொழிச் சாத்திர நூல்களைக் கற்றுக் காசிவாசி என்று சிறப்படைந்தவர்கள்.)

கிறித்தவர் சிலர் "சிவனும் தேவனா?" என்றொரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டார்கள். அதற்கு காசிவாசி செந்திநாதையர் "சிவனும் தேவனா என்னும் தீய நாவுக்கு ஆப்பு" என்றொரு நூல் செய்து வெளியிட்டார்கள். மேலும் ஒரு கண்டன நூலாக "வஜ்ரடங்கம்" (வைரக் கோடாரி) என்ற நூலை வெளியிட்டார்கள். அதோடு கிறித்தவ நூலாகிய விவிலியத்தில் குறைகளைச் சுட்டி "விவிலிய குற்சிதம்" (குற்சிதம் - அசுத்தம்) என்ற நூலை வெளியிட்டார்கள்.

யாழ்ப்பாணத்து வடகோவைச் சபாபதி நாவலர் அவர்கள், "யேசு மத சங்கற்ப நிராகரணம்" போன்ற நூல்கள் எழுதிக் கிறித்தவரைக் கண்டித்து வந்தார்கள்.

இன்னும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. இங்கே முக்கியமான சிலவற்றை மட்டும் குறிப்பிட்டோம். இவற்றில் சில நூல்கள் இன்று கிடைப்பதும் இல்லை. யாராவது அச்சிட்டு வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

இதுகாறும் சொல்லப்பட்ட கிறித்தவர்களை ஒரு கணக்கில் சேர்க்கலாம். அவர்கள் நேரடியாக மோதினார்கள். மறைமுகமாகக் கிறித்தவத்தைத் திணிக்கும் கும்பல் ஒன்று இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இன்று வரை உள்ளது. அவர்களிடமே மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இந்த மறைமுகத் திணிப்பைத் தொடங்கி வைத்து வழிநடத்துபவர் தெய்வநாயகம் என்பவர் ஆவார்.

இனி அதுபற்றிக் காண்போம்...

அன்புடன்,
"சிவஞானதாசன்"
பரணிதரன்.

படங்கள் :
1. துறைமங்கலம் சிவப்பிரகாசர்

2. ஸ்ரீ காசிவாசி செந்திநாதையர்

3. ஆறுமுக நாவலர்

Wednesday, July 8, 2020

தமிழர் வரலாறு


#தமிழர் வரலாறு


#Sundarji.....
9842741451
https://ourdream-s.blogspot.com


தமிழரின் தொன்மையும் மேன்மையையும் அறிவது தமிழர்க்கு மட்டுமன்று, எல்லா மனிதருக்கும் ஒரு கண்ணோட்டக் கண்ணாடியாக விளங்கும் - உதவும். மொழியும் இனமும் இணை
ந்ததொரு பரிணாமபடப்பிடிப்பு, காலத்திரையில் தமிழனின் கால்பதிப்பு, தமிழன் விழுந்ததும் எழுந்ததும், இணைந்ததும் பிரிந்ததும், வாழ்ந்ததுமான வரலாற்றின் பகுப்புத் தொகுப்பு.

கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.
http://namennangal.blogspot.com

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000

#தமிழர் வரலாறு


Tamilan
நியாண்டெர்தல்
மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000

கடைசி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

#தமிழர் வரலாறு

கி.மு. 35000 - 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

http://namennangal.blogspot.com



Monday, July 6, 2020

இப்போது நோய்களின் பிறப்பிடமான சீனா

பசிபிக் கடல் நிலநடுக்கத்தின் தாய் என அழைக்கபடும், அங்கு அன்றாடம் நிலநடுக்கம் நடக்கும், 
#Sundarji
#Arunagiri

வெகு சில பெரிய நிலநடுக்கமே சுனாமியினை ஏற்படுத்தும்

அப்படி கொரோனா எனும் சுனாமியினை மட்டும் நமக்கு தெரியும், அன்றாடம் சீனாவில் பரவு ஏராளமான நோய் பற்றி நமக்கு தெரியாது

இப்போது நோய்களின் பிறப்பிடமான சீனா இப்பொழுது புதியவகை நோய் எச்சரிக்கையினை விடுகின்றது

அதாவது கண்டதையும் உண்ணும் அச்சமூகம், ஒவ்வொரு மிருகத்தில் இருந்தும் ஒரு நோயினை உருவாக்குவதை வழமையாக கொண்டிருக்கின்றது

விலங்குகளில் உண்ணதக்கன தகாதன என சில வகை உண்டு. 

இந்து தர்மம் மொத்தமாக புலால் மறுத்தல் என மாமிசத்தால் ஏற்படும் நோய்களை விரட்ட வழி சொன்னது.

மேற்காசிய மதங்கள் சிலவற்றுக்கு விலக்கு அளித்தன, அந்த சிலவற்றிலும் சில உடல் பாகங்களை உண்ணாமல் இருக்க சொன்னது

யூத மதம் பன்றி, காலில் குளம்பு இல்லா மிருகம் (முயல், பூனை, நாய்) போன்றவை செதில் இல்லா நீர்வாழ் உயிரினம் (இறால், நண்டு, வஞ்சிரம் மீன் வகையறா) போன்றவை தடை செய்யபட்ட மாமிசம் என்றது

பறவைகளில் கூட பல பறவைகள் உண்ணதகாதவை என அது வரையறுத்தது. 

இதில் உண்மையும் உண்டு, நண்டு வஞ்சிரம் இறால் போன்றவை உஷ்ணத்தை ஏற்படுத்தும் விஷயங்கள், 

சில உடல் உபாதைகளையும் ரத்த சிக்கல்களையும் அவை கொடுக்கும், அவை தவிர்க்கபடத்தான் வேண்டும் 

ஆனால் அதை எல்லாம் சொல்லமுடியாது, யார் கேட்பார்கள்?

(மிருகங்களிலும் பன்றி, பூனை, நாய், நரி போன்றவையின் மாமிசம் மிகபெரும் நோய்களை கொண்டுவரும், அல்லது ரத்தத்தில் சில மாறுதல்களை செய்து மந்த புத்தியினை கொண்டுவரும்)

அனுமதிக்கபட மாமிசமான ஆடு மாடில் கூட இரத்தம் ,குடல் இன்னபிற பாகங்களை உண்ண வேண்டாம் என்றது யூதமதம்.

(அவற்றில் கிருமி இருக்கும் என்பது இன்று ஆய்வில் சொல்லபட்ட உண்மை)

இதையே யூதரில் இருந்து இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் பின்பற்றினர். உண்மையில் கிறிஸ்தவர்களுக்கும் பன்றி, நண்டு, இறால், முயல் எல்லாம் விலக்கபட்டது, ரத்தமும், குடலும் விலக்கபட்டது, உண்ண கூடாது.

ஆனால் அவர்களோ அதெல்லாம் பழைய ஏற்பாடு என நழுவுவார்கள், சரி பத்து கட்டளையும் பத்தில் ஒரு பங்கு காணிக்கையும் பழைய ஏற்பாடுதானே? அதை ஏன் பின்பற்றுகின்றீர்கள் என்றால் "அப்பாலே போ சாத்தானே" என்பார்கள் , இப்போது "அப்பாலே போ சங்கி" என்பார்கள்

ஆம், மாமிசங்களில் பல வகை நோய்பரவும் என்பது அன்றே சொல்லபட்ட உண்மை. கண்ணுக்கு தெரியா கிருமி அதில் கலந்திருக்கும், அதை தொட்டாலோ அருகில் சென்று முகர்ந்தாலோ கண்ணுக்கு தெரியா கிருமி பரவும் என்பதை அறிவுடை சமூகம் அறிந்திருந்தது

இன்னும் வேக வைத்தாலும் சில நுண் உயிர்களை கொல்லமுடியாது என்பது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்த இனம் பல விதிகளை வகுத்தது

இந்துமதம் இதில் மகா அபாரமாக விதிகளை சொன்னது, புலால் மறுத்தல் என சொன்ன மதம் மேற்கொண்டும் ஏகபட்ட விஷயங்களை போதித்தது

ஒருவேளை தின்று தீர்ப்பேன் என்பவனுக்கு கூட மஞ்சள், மிளகு இன்னும் ஏகபட்ட மருத்துவ குணம் கொண்ட பொருட்களோடு சமைத்து உண்ண சொன்னது. அதாவது மாமிசத்தின் கிருமியினை அழித்துவிட்டு உண்ண சொன்னது

உண்ணாதே என்ற இந்துமதம் அவன் உண்டே தீருவேன் என சொன்னபொழுது பல பாதுகாப்பான வழிகளை சொன்னது

ஆம், கிராமங்களில் ஆடுவெட்டும் பொழுது ரத்தம் எனக்கு வேண்டும் என்றது சாமி, உண்மையில் சாமிக்கு ரத்தம் தேவையா என்றால் இல்லை 

ஆனால் எதற்கு சொன்னது என்றால் "ரத்தம் உண்பது ஆபத்து, விஷத்தை எனக்கு கொடுத்துவிட்டு கறியினை நீ உண்டுகொள்"

ஆடு வெட்டி ரத்தம் தெளிக்கும் விஷயம் இதுதான், அதை மக்கள் உண்ண கூடாது என்பதே

முன்பு கொழுப்பையும் சாமிக்கு படைக்கும் வழக்கம் இருந்ததாம், ஆம் கொழுப்பு மனிதர் உண்ண கூடாதது என்பது விஷயம்

இதுபோக இன்னும் ஏராளமான பாதுகாப்பு வழிகளை சொன்னது, கோவிலில் வெட்டபடும் ஆடு பழதற்று இருக்க வேண்டும், நோயுற்றதாக காயம்பட்டதாக  இருக்க கூடாது என அது சொல்லி வைத்தது

ஏன்? ஆட்டில் காயம் இருந்தால் அதில் கிருமி இருக்கும்., ஆட்டுக்கு நோய் இருந்தால் உள்ளே கிருமி இருக்கும் அதை உண்ணும் மக்கள் நோயுற்று வீழ்வர்

இதை தடுக்கவே கோவிலுக்கு வரும் ஆடு தரமானதாக இருக்க வேண்டும் என சொல்லிற்று அந்நாளைய அறிவுடை சமூகம்

இது போக புவிஈர்ப்பு அதிகபடும் சில நாட்களில், கிரகபலன் அதிகபடும் சில நாட்களில் மாமிசத்துக்கு அது தடை விதித்தது

மாமிச படையலுக்கு முன்னும் பின்னும் பல நாட்கள் விரதம் இருக்க சொன்னது அதில் உடலில் சமநிலை வந்தது, கொழுப்பு ஏறாமல் பார்க்க சொன்னது

சீனாவில் அப்படி அல்ல, அவர்களுக்கு மதமுமில்லை கலாச்சாரமுமில்லை புத்த கொள்கைகளை எல்லாம் கடமைக்கு துடைத்து அழகுக்கு வைத்தாயிற்று, 

கம்யூனிசம் வந்தபின் அதுவுமில்லை
இதனால் வவ்வால், தவளை, எலி, பன்றி இன்னும் எதெல்லாம் உயிருடையதோ அதை எல்லாம் உண்டார்கள்

கோழி பண்ணையில் இருந்து பறவை காய்ச்சல் வந்தது,வாத்து பண்ணையில் இருந்து சார்ஸ் வந்தது, 

வவ்வாலில் இருந்து கொரோனா வந்தது, பன்றியில் இருந்து அடிக்கடி ஒரு காய்ச்சல் வரும்

இப்பொழுது மங்கோலியா பக்கம் ஒரு மர்ம காய்ச்சல் பரவுவதாக சீனா அலறுகின்றது, அது எலி மூலம் பரவும் காய்ச்சல், இதற்கு இருவர் பலியாகிவிட்டார்கள்

இந்த பகுதி ரஷ்ய எல்லைபக்கம் வருவதால், அதாவது சீனா கட்டுபடுத்தி சுயாட்சி வழங்கியிருக்கும் 

மங்கோலியா பக்கம் வருவதால் ரஷ்யா கடும் எச்சரிக்கையில் இருக்கின்றது

ஆக கோழி, வாத்து, பன்றி, வவ்வால் வரிசையில் எலியும் சேர்ந்தாயிற்று

இவ்வளவுதான் விஷயமா என்றால் இல்லை, 

அவர்களின் உணவு வரிசையில் நாய், பூனை, பாம்பு, தேள், கரப்பான் பூச்சி, முதலை, குரங்கு, நரி என ஏகபட்ட வரிசை உண்டு என்பதால் இனி ஒவ்வொரு அம்மாவாசைக்கும் ஒரு நோய் பரவலாம்...
சுந்தா் ஜீ

Saturday, July 4, 2020

உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை

*உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை*
#Sundarji 
#Arunagiri 

_திடக்கழிவு,_
_திரவக்கழிவு,_
_வாயுக்கழிவு,_ 
_சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் *மருத்துவக்கழிவு,*_

     இவைகளை வாழ்நாள் முழுவதும், சிரமமில்லாமல் நீக்கும், எளிமையான,
சுவையான முறை.

      *வெந்நீர்*
              +
*எலுமிச்சை சாரு*
             +
       *தேன்*

செய்முறை 

   ஒரு டம்ளர் நீரை குறைந்த தனலில் வைக்கவும் !
கொதிக்க வேண்டியதில்லை !
நாம் தாங்கும் சூடு இருந்தால் போதும் !

ஒரு காலி டம்ளரில் 1/2 எலுமிச்சை, சிறியதாயிருந்தால் ஒரு எலுமிச்சை பிழிந்துக்கொள்ளவும் !

3 ஸ்பூன் தேன் சேர்த்து, வெந்நீர் கலந்து, ஸ்பூனில் சிறிது சிறிதாக, அனுபவித்து, உமிழ் நீருடன் நன்றாக உறவாடி, பின் அருந்தவும் !

   காலையில் முதல் உணவாக, வெறும் வயிற்றில் அருந்தவும் !

எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான 
உடனடி குளுக்கோஸ், தரமான உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும் கிடைக்கும் !

*வாழ்நாள் முழுதும் "கேன்சர்" என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும் !*

   வயது வித்தியாசமின்றி உட்கொள்ளலாம் !

*உணவாகவும்,*
*மருந்தாகவும்,* செயல்புரியும் உன்னத இயற்கை பானம் !

குறிப்பு :......

     சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் அருந்தலாம் !

சிறிது சிறிதாக, உமிழ் நீர் சேர்த்து, சுவைத்து உட்கொள்வதால், தேனில் உள்ள குளுக்கோஸ் தரமான குளுக்கோஸாக மாற்றமடைந்து நன்மை மட்டுமே செய்யும் !

   மேலும், "தேன்" நாக்கிற்கு இனிப்பு, உடல் உறுப்புகளுக்கு கசப்பு !

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாதென்பது வடிகட்டிய "மூட நம்பிக்கை"!

தொடர்ந்து அருந்துவதால் "அல்சர்" எனும் மருத்துவத்தால் தூண்டப்படும் உபாதை, சொல்லாமல் ஓடிப்போகும்.......!

உடலின் மொழி

1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி

2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம்

3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி

4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.

5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்

6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -  வாய் கசப்பு மற்றும் பசியின்மை 

7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி

8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி

9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை

11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்

       எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

      நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.

       நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.