Wednesday, March 25, 2020

அனைவரின் கவனத்திற்கு...

அவசரம்! அவசியம்!!

தமிழக மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களின் பார்வைக்கு,

கடந்த மார்ச் 6 ம், 2020 ம் தேதியிட்ட சுற்றறிக்கை மத்திய AYUSH அமைச்சகம் மூலம் இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் அனுப்பியுள்ளார்கள். எண் : D.O.No S 16030/18/2019 NAM Dated : 6th March 2020

அதில் தெளிவாக #சித்த வைத்தியம், #ஆயுர்வேதம், #யுனானி, #ஓமியோபதி எனும் நான்கு வகை பாரம்பரிய முறைப்படி கொரோனா பரவுவதை தடுப்பதற்கும், வந்தவர்களை காப்பாற்றுவதற்கும் மிகச்சிறந்த முறையில் மருந்துகளின் விவரங்கள் கொடுத்துள்ளார்கள்.

மக்களின் நலன்கருதி உடனே மருத்துவத்தை மேற்கொள்ளவும் இந்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுவரை அதுகுறித்து மக்களுக்கு எவ்வித அறிவிப்பும் செய்யாதது ஏன்? இதுவரை மூலிகை மருத்துவத்தை மேற்கொள்ளாது ஏன்?

சித்தாவில் #வாதசுரகுடிநீர் உட்பட 14 மருந்துகளும், ஆயுர்வேதத்தில் #திரிகடுகசூரணம் உட்பட 19 மருந்துகளும், யுனானியில் 9 வகை மருந்தும், ஓமியோபதியில் 1ம் ஆக 43 மருத்துவ வகைகளை வைத்துக்கொண்டு இன்னும் மருந்தில்லை மருந்தில்லை என்று மக்களை அச்சமூட்டுவது ஏன்?

நீங்கள் இருவரும் தமிழர்கள். உங்களை இந்த இக்கட்டான சூழலில் மனதார நம்பிக்கை கொண்டுள்ளனர் மக்கள். அவர்களின் அச்சத்தை துடைத்தெரிய வேண்டாமா? இதில் உண்மை என்ன? ஆயுஷ் அமைச்சரவையில் முடிவெடுத்து அனுப்பிய சுற்றறிக்கையும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் என் கவனத்திற்கு வந்தது. பார்த்ததிலிருந்து மிகுந்த வேதனையை அளிக்கிறது.

இந்த சுற்றறிக்கை உங்கள் கவனத்திற்கு வராமலிருக்கும் அளவிற்கு சதிகள் இருக்க வாய்ப்பு குறைவே. இருந்தாலும் குழப்பத்தோடு உடனடி தீர்வினை தமிழக அரசு எடுக்க வலியுறுத்தி இந்த பதிவினை பதிவு செய்கிறேன். மக்கள் உடனே பகிர்ந்து கவன ஈர்ப்பு வேலையை செய்யுங்கள்.                                                                                        மரபுவழி தமிழ் மருத்துவர்

Sunday, March 22, 2020

குங்குமம் அணிவதன் நன்மைகள்.

#குங்குமம் அணிவதன் #நன்மைகள்.

#சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தான் #மகாலக்ஷ்மி மகிழ்ந்து இருப்பதாக #இந்து தர்மம் சொல்கிறது. 

*நெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் நெருங்காது.

*இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. 

*மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது.

*குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்துகிறது. 

 *வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

*குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். 

*பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்புதான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

*அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். 

*தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

*திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

*ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

*கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

*குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

*சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். 

(இயற்கை முறையில் விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியன சேர்ந்து அரைக்கபட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி குங்குமம் தயாரிக்கப்படுகிறது. மஞ்சளும் காரமும் வேதிவினையாற்றி சிவப்பு நிறம் கிடைக்கிறது.)

Saturday, March 21, 2020

தமிழன் திமிரானவன்









அகோரிகள்

#அகோரிகள்

#சமஸ்கிருதத்தில் அகோரி என்றால் 'பயமில்லாத' என்று அர்த்தம்.

உடலில் ஆடைகள் இல்லாமல், நீண்ட முடியுடன். முகத்திலும மார்ப்பிலும் முடிகள் இல்லாமல் இருப்பவர்கள் அகோரிகள். 

தலை பகுதிகள் தவிர பிற இடங்களில் இவர்களுக்கு முடிகள் இருக்காது. 

அகோரிகளுக்கு #வருத்தம், துக்கம் என்பதே கிடையாது. 

#நன்மை, #தீமை என்பதும் கிடையாது எனவேதான் அவர்கள் தாகம் எடுத்தால் தங்கள் சிறுநீரை கூட குடிப்பார்கள்.

எந்த ஒரு சமைத்த உணவையும் விரும்பிச் சாப்பிடுபவது போலவே மிக மோசமாக அழுக்கிபோன எந்த ஒரு உயிரியின் சதைய ையும் சாப்பிடுவார்கள்.

தங்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர்களுக்கு தங்களிடம் உள்ள அனைத்தையும் வழங்கி விடுவார்களாம் அகோரிகள்.

பசுமாட்டு மாமிசத்தைத் தவிர அவர்கள் எதைவேண்டுமானாலும் உணவாக எடுத்துக் கொள்வார்கள். பிணம் முதல் மனித கழிவுகள் வரை அவர்கள் உண்பார்கள் அவர்களுக்கு விருப்பு வெறுப்பு தெரியாது.

இவர்கள் உலகை வெறுத்து தனியாக வாழ்பவர்கள் கிடையாது. சிறு சிறு குழுக்களாகவும் தலைமை யோகியின் பின்னால் இவர்கள் இருப்பார்கள். 

தங்களை விளம்பரப் படுத்திகொள்ளவோ, தங்களுக்கு இருக்கும் அமானுஷ ஆற்றலை வெளிக்காண்பிக்கவோ மாட்டார்கள் .

உடல் முழுவதும் சாம்பல் அல்லது மண்கொண்டு பூசியிருப்பார்கள். 

ருத்திராட்சம், சங்கு மற்றும் ஆயுதம் இவற்றில் ஏதாவது ஒன்று கைகளில் வைத்திருப்பார்கள்.

அகோரிகள் குழுக்களாக இருக்கும் சூழலில் யார் தலைமை யோகி அல்லது குரு என கண்டறிவது சிரமம். 

அனைவரும் ஒன்று போல ஒரே மாதிரி  இருப்பார்கள். 

ஆண் மற்றும் பெண் அகோரிகள் இருவரும் இருப்பர்கள். நிர்வாணமாக இருந்தாலும் பெண்யோகிகளை கண்டறிவது கடினம். 

இவர்களின் தலைமுடி வயதானாலும் வெள்ளை ஆகாது. 

உடல் பயில்வானை போல இல்லாமல், சீரான நிலையில் இருக்கும். 

ரிஷிகேசம் அல்லது இமாலய மலையின் வனங்களில் இருப்பார்கள்.

பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளாவிற்கு வந்து கூடுவார்கள். 

இமாலயவனத்திலிருந்து நடந்தே அலாகாபாத் எனும் இடத்திற்கு வருவார்கள், மீண்டும் நடந்தே சென்றுவிடுவார்கள். 

வாகனத்தை பயன்படுத்த மாட்டார்கள். வாகனத்தில் சென்றால் குறைந்த பட்சம் பன்னிரெண்டு மணி நேர பயணம். 

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது கட்டுகோப்பாக வரிசையில் செல்வார்கள். 

வரிசையின் முன்னாலும் ,பின்னாலும் இருக்கும் அகோரிகள் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள். 

நீண்ட முடியும், மண் அல்லது சுடுகாட்டு சாம்பலை பூசி இருந்தாலும் அவர்கள் மேல் எந்த விதமான வாசனையும் இருக்காது. நறுமணமும் இருக்காது, நாற்றமும் இருக்கது. 

முக்கியமாக இவர்கள் பிறருடன் பேசுவது குறைவு. தங்களுக்குள் பேசிக்கொள்ளவே மாட்டார்கள். 

குழுவாக வட்டவடிவில் உற்கார்ந்து கொண்டு ஒரு மூலிகையை புகைப்பார்கள். 

இம்மூலிகை கஞ்சா என பிறர் எண்ணுகிறார்கள். 

கும்பளாவில் கஞ்சா எல்லாஇடத்திலும் கிடைக்கும், சிலர் இலவசமாக பிறருக்கு வழங்குவார்கள். 

ஆனால் இவர்களிடம் யாரும் கொடுக்க மாட்டார்கள், இவர்களும் வாங்க மாட்டார்கள். 

தாங்கள் இருக்கும் வனத்திலிருந்து சில மூலிகைகளை கொண்டு வருவார்கள். 

வட்டமாக உட்கார்ந்திருக்கும் இவர்கள் வட்டத்தின் மையத்தில் அந்த மூலிகையை வைத்து ப்ரார்த்தனை செய்த பின் புகைப்பார்கள். 

மூலிகை குழாயில் வைத்து ஒரு முறை மட்டுமே உள்ளே இழுப்பார்கள். பிறகு அடுத்தவருக்கு கொடுப்பார்கள். இப்படியாக வட்டம் முழுவதும் புகைகுழாய் வட்டமடிக்கும்.

ரிஷிகேசத்திலும், கும்ப மேளாவிலும் எத்தனை டிகிரி செண்டிகிரேட் குளிராக இருந்தாலும் நிர்வாணமாக உட்கார்ந்து தியானம் செய்வார்கள். 

அவர்கள் வாழ்க்கை முறை மிகவும் விசித்திரமாகவும், சாதாரண இயல்பு வாழ்க்கையை வாழ்பவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருப்பதால் யாரும் வராத சுடுகாட்டை தங்கள் வாழ்விடமாக அவர்கள் தேர்வு செய்கின்றனர்.

சுடுகாட்டில் சிதையின் மீது அமர்ந்து சாதனா செய்வது அவர்களது இந்த மனோ பலத்திற்கு மிகப்பெரிய காரணமாம்.

அவர்கள் ஒருவிஷயத்தை குறி வைத்து விட்டால் அதனை முடிக்காமல் விடமாட்டார்கள். அதேபோல் கோபாவேசம் வந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்தவர்கள். 

ஆனாலும் தங்கள் இருதயம் அமைதியின் இருப்பிடம் என்றே அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். 

கறுபு பாடையில் மண்டை ஓட்டை மாலையாக அணிந்து கொள்ளும் இவர்கள் இதயம் அமைதியானது என்பதைக் கேட்க சற்று வினோதமாகவே இருக்கும்.

சிவபெருமானையும், காளி தேவியையும் வணங்குவார்கள் அகோரிகள். 

காளி தேவி அல்லது தாரா என்பவர் 10 மகாவித்யாக்களில் (அறிவை கொடுக்கும் கடவுள்கள்) ஒருவராகும். இக்கடவுள் இயற்கைக்கு மாறாக அதீத சக்திகள் கொண்டுள்ள அகோரிகளை மட்டுமே ஆசீர்வதிப்பார்கள். 

துமாவதி, பகளமுகி மற்றும் பைரவி வடிவில் இருக்கும் இக்கடவுளை இவர்கள் வணங்குகிறார்கள். 

மஹாகல், பைரவா மற்றும் வீரபத்ரா போன்ற மிகவும் கடுஞ்சினத்துடன் கூடிய வடிவத்தில் இருக்கும் சிவபெருமானையும் வணங்குவார்கள். 

அகோரிகளின் காப்பாளர் கடவுளாக விளங்குவது ஹிங்க்லஜ் மாதா

இமாலய மலை பகுதிகளில் (யமுனோத்தரி, கங்கோத்தரி மற்றும் நேப்பாளம்) இவர்களின் முக்கிய இடமாக இருக்கிறது. 

கும்பமேளா தவிர பிற காலங்களில் இவர்கள் குழுவாக வெளியே வலம் வருவதில்லை. 

குழுவிலிருந்து தனியே சில பணிகளுக்காக செல்லும் அகோரிகள் தங்கும் இடம் மயானம். 

எந்த ஊருக்கு சென்றாலும் இவர்கள் மயானத்தில் இருப்பதை விரும்புவார்கள்.

அகோரிகளுக்கு தங்கள் உடலின் சக்தி நிலை மிகவும் முக்கியமானது. 

இங்கே உடல் சக்தி என்ற யோக சக்தியின் உயர் நிலையை எக்காரணத்திலும் இழக்க அவர்கள் தயாரக இருக்க மாட்டார்கள். 

இயற்கையிலிருந்து எப்படி சக்தியை பெறுவது எனபது இவர்களுக்கு அத்துப்படி. மயானம், ஆறு மற்றும் வனங்களில் தங்கள் உடல்சக்தியை மேம்படுத்துவார்கள். 

தங்கள் யோக சக்தியை பிறருக்கு அநாவசியமாக காட்ட மாட்டார்கள். 

சமூகத்தில் தர்மம் தடுமாறும் பொழுது சூட்சமமாக செயல்பட்டு தர்மத்தை நிலைநிறுத்துவார்கள்.

தங்கள் குழுக்களில் பிறரை சுலபமாக சேர்க்க மாட்டார்கள். 

அகோரிகளின் ராணுவ அமைப்பின் தலைவர் பதவியை ஏற்கும் முறை விசித்திரமானது. 

புதிய தலைவரை வணங்கிவிட்டு, பழைய தலைவர் தன்னை மாய்த்துக்கொள்ளுவார்.

Tuesday, March 17, 2020

கொரோனா வைரசும் தமிழன் மறந்த தமிழர் நோய்த்தடுப்பு_மரபுகளும்

கொரோனா வைரசும் தமிழன் மறந்த தமிழர் நோய்த்தடுப்பு_மரபுகளும்  

1. இரு கை கூப்பி #வணக்கம் சொல்லியது.

2. #வாசல் முற்றத்தில்  நீரில் கால் கழுவி பிறகு வீடுநுழைந்தது.

3. #மாவிலை தோரணங்கள் கட்டியது.

4. #மஞ்சள் பூசி #குளித்தது தெளித்து விளையாடியது.

5. உணவில் மிளகு சுக்கு மஞ்சள் சேர்ந்தது.

6. #வாழை #இலையில் உணவு பரிமாறியது .

7. #வேப்பங்குச்சி #உப்பு கரி கொண்டு பல் துலக்கியது.

8. #வேப்பம் #இலையில் புகை போட்டது.

9. #மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக்கியது.

10. வருடம் ஒரு முறை வீட்டிற்கு வெள்ளை அடித்தது.
     
11.#எலுமிச்சம் பழம் காய்ந்த மிளகாய் படிகாரம் உத்திரசங்கு இவைகளை தலை வாசலில் தொங்க விட்டது.

12. நெரிசல் மிக்க இடங்களில் இருந்து திரும்பியதும் உடைகளை கழற்றி வீட்டிற்கு வெளியே வைத்தது. பின்வாசல் வழியாக சென்று குளித்துவிட்டு வீட்டில் நுழைந்தது.

13. #வெற்றிலை பாக்கு போடுவதும்.

14. #கசாயம் ஊறல் குடிப்பதும்.

15. வெள்ளாவியில் உடை வெளுத்தது.

16.மரண வீட்டிற்கு சென்றுவந்தால் மஞ்சள் நீர் தெளித்து நீராடி வீட்டிற்குள் செல்லுதல்.

17.இறந்த பிரேதத்தை எரித்தது.

18. அம்மை வந்தால் வெப்பம்  பத்திரம் போடுதல்.

19. வீட்டு முற்றத்தில் துளசிச் செடியை நாட்டி வைத்தல்.

20. மாலை நேரம் வீட்டில் #சாம்பிராணி ஏற்றி புகை போட்டது. 

இவை அனைத்துமே கிருமியை தடுப்பதும் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் சுத்தமாக வாழ்வதுக்கு மட்டுமே தமிழனால் உருவாக்கப்பட்ட மரபு  என்பது புரியாமல் இன்று நடக்கும் பெரு அழிவில் பங்காளர்களாக இருக்கிறோம்

"நீ புதைத்ததை நீயே எடுத்துவிடு இல்லாவிட்டால் நீயே புதைக்கப்படுவாய்"

Thursday, March 12, 2020

தேங்காயை உடைத்த பின்புதான் அதன் குடுமியை உரிப்பது எதற்காக..?

#தேங்காயை உடைத்த பின்புதான் அதன் குடுமியை உரிப்பது எதற்காக..?

#சில பழக்க வழக்கங்கள் ஏன் எதற்கு என்று தெரியாது ஆனால் கண்டிப்பாக கடைபிடித்துவருவோம். 

#இயற்கையோடு ஒத்து வாழ்ந்து அதனை மதித்து வாழ்வது நம் மக்களின் பெருமை. 

#இயற்கை எல்லா விதத்திலும் ஆச்சர்யத்தை மறைத்து வைத்துள்ளது. 

#ஓர் அறிவு ஜீவன்களான #தாவரங்கள் கூட தன் இனப்பெருக்கத்தை உறுதி செய்ய  சூழ்நிலையை உறுதி செய்து முளைவிட்டு செழிக்கும்படியான விதைகளை #உற்பத்தி செய்து பரப்புகிறது. 

#ஒவ்வொரு #விதையும் முற்றியபின் தன் #தாயிடம் இருந்து முடிந்தவரை தள்ளிச் சென்று வேறூன்றி தழைத்துச் சந்ததியைப் பெருக்கத் தேவையான அனைத்து தகவமைப்புகளையும் கொண்டுள்ளது

#விதைகள் ரோமங்களில் ஒட்டிக்கொள்வது, வெடித்துச் சிதறுவது, #காற்றில் பரப்பது, பறவைகளுக்கு உணவாவது. தண்ணீரில் மிதந்து செல்வது என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. 

#அந்த விதத்தில் #தென்னை நீர்நிலையைச் சார்ந்த தாவரம் என்பதால் முற்றிய தேங்காய் #நீரில் மிதந்து வெகுதூரம் செல்லத்தக்கது. குறைந்தபட்சம் தென்னைமட்டை தூரமாவது தாய் #மரத்தை விட்டு விலகிச் சென்று விழும்படியான அமைப்பைக் கொண்டது. 

#தென்னை நெற்று முளைவிட வேண்டும் என்றால் குறிப்பிட்ட அளவிலான ஈரப்பதம் அதன் கண் பகுதியில் தொடர்ந்து இருந்துவரவேண்டும்.  அதனை உறுதிப் படுத்தவே #நீர் உறிஞ்சி தக்கவைத்துக் கொள்ளும்படியான நார்  தென்னை நெற்றைச் சுற்றி உள்ளது. குறிப்பிட்ட காலம் ஈரப்பதம் இருந்தால்தான்  அதன் காம்புப் பகுதி கழன்று நீர் உட்புகுந்து ஈரப்பதம் காக்கப்பட்டு கண் திறந்து முளைவிடும். 

#ஒவ்வொரு விதையும் ஒரு உயிரைத் தன்னகத்தே கொண்டுள்ளது.  அதனைப் போற்றும் விதமாக, நாம் பயன்படுத்தும் தேங்காயினை தேங்காய் உடைக்கும் வரை அதன் கண்களை மூடியிருக்கும்  குடுமியை உரிக்காமல் வைத்து உடைத்த பின்பே  உரிக்கிறோம். 

#கடைசி நேரத்தில் கூட அதன் முளைக்கும் தன்மையை நாம் பறிப்பதில்லை. உடைக்காதவரை எப்போது வேண்டுமென்றாலும் மீண்டும் விதைத்து மரமாக்கலாம்..

Tuesday, March 10, 2020

ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது "

ஓராண்டு #கோயிலுக்குச் செல்லலாகாது " 

தவறான வழக்கம் சந்ததிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி விடும் ...!
எவரேனும் இறந்துவிட்டால் அக்குடும்பத்தினர் ஒரு ...வருடத்திற்குக் கோலம் போட கூடாது , மலைத் தலத்திற்கும் போகக் கூடாது , #பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்ற தவறான வழக்கங்கள் தற்போது நிலவி வருகின்றது . #இறப்பு நேரிட்ட நாளிலேயே கூட அக்குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதிலும் ,#வீட்டில் கோலம் இடுவதிலும் எவ்விதத் தவறும் #இல்லை , சாஸ்திர முரண்பாடும் கிடையாது . இடைச் செருகலாக வந்த இத்தவறான வழக்கமே பல குடும்பத்தவர்கள
ை ஒரு வருட காலம் கோயிலுக்குச் செல்ல விடாமல் தடுப்பதோடு ,அக்குடும்பத்தி
னருக்கு எவ்வித ஆலய வழிபாட்டுப் பலாபலன்களையும் வரவிடாது ஓராண்டிற்குத் தடுப்பதால் அக்குடும்பத்தின
ரின் பல துன்பங்களுக்கு நிவர்த்தி கிட்டாமல் போவதுடன் ஆன்மீகத் தற்காப்பு சக்தியும் குறைந்து பலத்த பிரச்சனைகளும் தோன்றி சந்ததிகளை அலைக்கழித்துவிட
ும் ! இந்த ஒரு வருடத்திலும் பண்டிகைகள் கொண்டாடுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை . பண்டிகைகளினால் வரும் புண்ய சக்தி சேகரிப்பையும் இழத்தலும் தவிர்க்கப்படும் .
****அவ்வாறு துக்கத்தை ஒரு வருடகாலம் அனுஷ்ஷப்பதனால் டீ.வி , #சினிமா , #செய்தித்தாள் #படித்தல் , #புது ஆடைகள் , #ஸ்வீட்டுகள் , #காபி , டீ , ருசிகர #உணவுகள் , கேளிக்கைகளை ஒரு வருட காலம் எவரேனும் ஒத்தி வைகிறார்களா ? இறைவனா ஓராண்டு தன்னைக் காணலாகாது என்று விதிப்பார் ??? இறைப் பகுத்தறிவுடன் சிந்தியுங்கள் ! துன்பங்கள் மலை மலையாய்ப் பெருகும் கலியுகத்தில் ,அதுவும் பல பூஜைகளும் , வேத சக்திகளும் வெகு வேகமாக மறைந்து வரும் கலியுகத்தில் , " ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது " என்ற அறியாமையினால் தோன்றிய தவறான எண்ணத்தைக் கட்டாயம் சமுதாயத்தில் இருந்து அகற்றியே ஆக வேண்டும் .

#Sundarji

Saturday, March 7, 2020

இது என்ன கொடுமை? இப்படிக் கூட செய்வார்களா?


#குங்கிலியக்கலய_நாயனார்

இது என்ன கொடுமை? இப்படிக் கூட செய்வார்களா??

தெருவில் எல்லோரும் இதைப்பற்றி பெருமையாகப் பேசிக் கொள்கிறார்களே ஒருவருக்கு கூட உறுத்தவில்லையா...

நடந்து சென்றால் 10 மணி நேரத்தில் #திருக்கடையூரில் இருந்து திருப்பனந்தாள் சென்றுவிடலாம் . ஓடிவிடலாம் ஓட ஓட எப்படியும் 6 மணி நேரத்தில் அடைந்து விடலாம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அங்கிருக்க வேண்டும். மனது பதைபதைத்தது குங்கிலயக்கலயருக்கு.

தாடகை என்ற #பெண்ணின் பக்தியைப் பெரிதாகக் கருதிய இறைவன் அவளுக்காக சாய்ந்த நிலையில் இன்று வரை விளங்குகிறார். மன்னருக்கு இது தெரியாதா இல்லை இதை மற்றவர்கள் தான் சொல்லவில்லையா. சாய்ந்து உள்ள #லிங்கத்தை நிமிர்த்த யானைகள் குதிரைகள் கட்டி இழுக்கிறாராமே ...

#ஐயோ, எம்பெருமானே நான் கேள்விப்பட்டது வெறும் பொய்யாகத்தான் இருக்க வேண்டும். ஆட்சி அதிகாரம் இருந்தால் நினைத்ததை செய்யலாமா? குங்கிலயரின் மனது நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தாலும் கால்கள் ஓடிக்கொண்டே இருந்தது.

#செம்பொன்னார் #கோவில் மணியோசை மற்ற நேரங்களில் நின்று கேட்கத் தோன்றும். இன்றோ அதையும் தாண்டி #ஓட்டம். வேள்விக்குடியே வேடிக்கை பார்த்தது. ஏதோ உச்சி வெயிலில் பைத்தியம் ஒடுகிறது என்று. இலக்கு தெரிந்தபடியால் வழி விசாரிக்கக் கூட அவசியம் இல்லை அதற்கு நேரமும் இல்லை.

இதோ திருப்பனந்தாள் எல்லையிலேயே கூட்டம் கூடி #வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டது. கேட்டது பொய்யில்லை. இந்த சம்பவம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. குங்கிலியர் மூச்சிரைக்க கோவில் வாசல் வந்து சேர்ந்தார். ஏற்கனவே #யானை #குதிரை எல்லாம் களைத்திருக்க சற்று கூட நிமிர்ந்து கொடுக்காமல் இருந்தபடியே இருந்தான் இறைவன். கைகளைப் பிசைந்தபடி மன்னர் கன்னிமூலை கணநாயகன் சந்நிதி முன் அமர்ந்துள்ளார்.

யாரைக் கேட்க நியாயம்? நியாயம் வழங்கும் மன்னவன் செய்யும் செயலா இது. நோக்கம் உயர்ந்ததாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்திய விதம் தவறு. போகட்டும்... இப்போது இது எதுவும் முக்கியமில்லை ... கடந்தது கடந்ததாகட்டும். இனி இந்த தவறு நடக்கக்கூடாது.

வேகமாக யானையைப் பிணைத்திருந்த பெருஞ்சங்கிலியை அவிழ்த்து தன்னுடைய கழுத்தில் கட்டிக்கொண்டார். கண்களில் இருந்து நீர் பெருகியது. இறைவா என் அருமை சிவமே அன்பினாலன்றி வெறும் கயிறால் வளைக்கமுடியுமா உன்னை அன்று அந்தப் பெண்மணியின் உயர்ந்த பக்திக்காக தாழ்ந்த உன் சிரம் நிமிரட்டும் இந்த மன்னனின் மனம் மாறட்டும் மக்களும் உன்னை ஒரு கல்லாகக் காணாமல் கருணைவடிவாய்க் காணட்டும். இது உனக்கு விருப்பமில்லாவிடில் எனது கழுத்து அறுபடட்டும் என மனம் விண்ணப்பித்தது. கூப்பிய கைகளும் மூடிய கண்களுமாக சங்கிலியை இழுக்க இதோ முற்றிலும் வளைந்திருந்த லிங்கம் மெதுவாக தலையை நிமிர்த்தியது.

யானைகள் குதிரைகளால் கட்டி இழுத்து முடியாததை சாதாரண மனிதனின் அன்பு சாதித்தது. கொற்றவன் குறுகினான். ஊர் குதூகலித்தது. அந்த இறையன்பர் எதுவும் நடவாதது போல திருக்கடையூர் திரும்பினார்

அவரது மெய்யன்பினை உலகம் உணர்ந்தது. இறைவன் மகிழ்ந்தார். தன்னைக் காட்டிலும் தன் அடியவர்கள் புகழப்படுவதை இறை விரும்புகிறது. 
வாழ்க குங்கிலியக்கலயர்

அன்று நடந்து முடிந்ததை இன்றும் மறவாமல் இருக்க விரலளவில் மொத்தத்தையும் கொண்டு நிறுத்தியிருக்கிறார்கள். சிற்பத்தைக் கண்டதும் நம் நெஞ்சு பதைக்கிறது. எவ்வளவு ஆழ்ந்த அன்பு. 

இடம்: தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்கோவில்

Thursday, March 5, 2020

பாவம் செய்யும்போது எப்படி மறைவாக செய்கிறீர்களோ

#பாவம் செய்யும்போது #எப்படி மறைவாக செய்கிறீர்களோ
அதேபோல மிகுந்த #புண்ணியமான #அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல் #அமைதியாக செய்ய வேண்டும். அப்படியானால்தான் அந்த தானத்திற்குரிய #பலன் வெகுவாக கிடைக்கும்.

சோழர் காலத்தில் தமிழ் நாடுதான் #உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.




                          சோழர் காலத்தில் தமிழ் நாடுதான்

                     #உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.


Suryatrust
Ourdreams
#பணக்கார நாடு.எம் பாரத நாடு 🎑 

சோழர் காலத்தில் தமிழ் நாடுதான் #உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

#சுமார்40,000 #கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் #தஞ்சை பெரிய கோவிலும், #கங்கை கொண்ட சோழபுரம்தான்.

அப்போது வட #அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 ல் நிறுவப்பட்டது.

#தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் #தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் #மாலிக்கபூரின் #முஸ்லிம் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, #500யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வளவு #கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

எல்லாம் #கடல் வாணிபம் ஏற்றுமதிதான். 
ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் #சோழநாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.

உலகிலேயே ஒரே சீராக #80இலட்சம் ஏக்கர் விளை நிலம் #காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் #மூன்று போகச் சாகுபடிக்குக் #காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

#வியாபாரத்திலும், #ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன் படுத்தினர்.

#மலேயா காடுகளிலிருந்தும், #மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. 

அசுவசாஸ்திரம் என்ற குதிரைப் பராமரிப்பு நூல் எழுதப்பட்டது. முதன் முதலில் #குதிரைகளுக்கு #லாடம் அடிக்கும் முறையைக் கண்டு பிடித்தவர்கள் #தமிழர்களே!

#ஏழுமலையானும் சோழர்களும் என்ற நூலில் இருந்து...#இந்து தர்மமும்..இந்து கோவில்களும்..

#ஏன் #கோவிலை #கட்டினார்கள்?

#ஹிந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???

கோயில் #பிராமணர்களுக்கு மட்டும் தட்டு காசு கிடைக்க வழி செய்யும் வியாபார ஸ்தலமா ???

#பாரத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விசாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை காட்டினார்கள் ???

கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ???? 🎑 

#மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ???? 💗 

உலகின் குருவாக பாரதம் ஆனது எப்படி ???

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் #செலவு, #மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் பட்ஜட் போடுவார்கள்.

இதையேதான் ஹிந்து கோயில்கள் செய்தன.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம்,  பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால்  கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு  தொடர்ந்து வேலை.

நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, 
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். 

தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் ஹிந்து கோயில்கள்.

ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம், 

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, 

ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிரைவு வாழ்க்கை. 

இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.

கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.

உயிருள்ள ஒருவர்,எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி  அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக,  பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம். 

அனைத்து சமூகமும் ஒரே முகமாக ஹிந்து என்ற ஒரு குடையின் கீழ், தன்னிறைவு பெற்ற வாழ்க்கையை நமக்கு அளித்ததே ஹிந்து தர்மமும், ஹிந்து  கோயில்கள் மட்டும்தான்.

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, பாரதம் உலக குருவாக திகழ்ந்தது.
#Arunagiri
#Suryatrust
#Ourdreams