Tuesday, December 10, 2019

தமிழன் என்கிற திமிர் எனக்கும் உண்டு

ஆதிதமிழினம்
தன்னை இழந்து...
வரலாறு தொலைத்து...
தமிழினம் இன்று
பல சாதியினமானது
பார்ப்பன சதியாலே...
43,73,120 ஆண்டுகள்
வரலாற்றை அறியாது
2019
ஆண்டுக்கு அடிமையானது...
அந்தோ பரிதாபம்
கல்வி,கலை,மருத்துவம்
கலாச்சாரம், பண்பாடு இழந்து தவிக்குதே...
முச்சங்கம் வைத்தே
இறையனார் கட்டிக்காத்ததை
காணாமல் செய்ததே அந்நிய மோகம்...
மாற்றான் தாயை மதிப்பது
தவறல்ல தமிழா...
தன்தாயை மிதிப்பது முறையோ...
உன் புத்தாண்டை
ஆள்பவன் சித்திரை என்றால்
எதிர்ப்பவன் தை என்கிறான்...
இடையிலே நீ யாரென
தேடி உணர நேரமில்லை
சாதி,சினிமா,ஆன்மீக போதையிலே நீ...
நாளுக்கு கிழமை வைத்து
நாளுக்குள் விண்மீன், திதி,ஓரை
எனவே நேரங்குறித்து வளர்,தேய்பிறை கண்ட...
ஆதிசிவன் வழிவந்த
உன் சித்த பாட்ட,பூட்டனை
நீ அறிந்து உணர நேரமில்லை...
பூட்டா சங்கிலியில்
சிக்கிய யானை போலே
அந்நிய மாயையில் மாட்டிய தமிழினமே...
நாளுக்குள் உறவையும்,உணர்வையும்
விட்டு,விட்டு வாழ்வில் தொலைத்தவர்கள்
உன் வாழ்வியலை கெடுத்தது புரியலயா???
இறைவா!!!
தன்னை மறந்த தமிழினத்தை
முன்னம் உணர்த்தி தலை நிமிர்த்து...
மற்றவரை மதிப்போம் என்றென்றும்
தன்னிலை உணர்ந்தே
தன்மானம் காப்போம் தமிழினமே..

No comments:

Post a Comment