தினம் ஒரு ஆலயம் - அதிசயம்
23. சோழீஸ்வரர் திருக்கோயில் கங்கைகொண்ட சோழபுரம்
23. சோழீஸ்வரர் திருக்கோயில் கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில், தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது.
இது கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் முதலாம் இராசேந்திர சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி.1020இல் கட்டப்பட்டது.
கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக, கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை முதலாம் இராசேந்திரன் அமைத்து அங்கு இக்கோவிலையும் கட்டினான்.
இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்
2004-இல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டன.
அதுமுதல் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இந்த திருத்தலம் பராமரிக்கபடுகிறது.
அதிசயம் 1:பிரமாண்ட சிவலிங்கம்
தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவலிங்கம் ஒரே கல்லால் ஆன மூலவர் பிரமாண்டமாக இங்கு தான் உள்ளது.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது.
ஆவுடையை சுற்றி பலகை கட்டி, அதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர்.
அதிசயம் 2: நந்தி மூலம் சூரிய ஒளி பிரதிபளிப்பு
இங்குள்ள நந்தி சுண்ணாம்புக் கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது.
இந்த நந்தியும் மிகவும் பெரியது. சூரியன் உதயமானதிலிருந்து மறையும் வரை நந்தியின் நெற்றியில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கீற்று 200 மீட்டர் தொலைவில் உள்ள கருவறை சிவலிங்கத்தின் மீது விழும் காட்சி வேறு எங்கும் காணமுடியாத அற்புத கட்டிடக்கலை சாட்சியான காட்சியாகும்.
அதிசயம் 3: அந்த காலத்தில் இயற்கை ஏசி
மூலவர் சிவலிங்கத்தின் அடியில் சந்திரகாந்தக்கல் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் வெப்பத்தையும் தருகிறது.
கருவறை எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும் வகையில் அங்கு சந்திரக்காந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலின் கர்ப்பக் கிரகத்திற்குள் சென்று பார்த்தால், அதன் உட்புறச் சுவர்கள் எல்லாவற்றிலுமிருந்து தண்ணீர், வியர்வைபோல முத்து முத்தாய், வடிவதைக் காணலாம்.
கர்ப்பக்கிரகம் 10 டன் A/c போட்டது போன்று குளுமையாக இருக்கும். கடும் கோடையில்கூட அந்தக் குளிர்ச்சி மாறாது.
இன்றுவரை குளிர்ச்சியாகவே இருக்கிறது.
கல்வெட்டுகளில் ‘சந்திரகாந்தக்கல்’ என்று குறிப்பிடப்படும் ஒருவகைக் கற்களால் கட்டியதால்தான் இந்தக் குளிர்ச்சி நிலை என்று கூறப்பட்டுள்ளது.
தொழிற்நுட்பத்தில் பழந்தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றுகிறது.
அதிசயம் 4: நவகிரகங்கள்
ஒன்பது கோள்களைக் குறிக்கும் ஒற்றைக் கல்லாலான நவக்கிரகம் இக்கோயிலில் அமைந்துள்ளது
டெலஸ்கோப் கண்டுபிடிக்கப்படாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்பது கிரங்கள் இருக்கிறது என்று தமிழர் உணர்ந்து அதை சிலையாய் வடித்து தன் வானியல் அறிவை உலகிற்கு முதலில் உணர்த்தியவர்கள் தமிழர்கள்.
அதற்கு இந்த கோயில் நவகிரகமே சாட்சி.
அதிசயம் 5: வீணை இல்லாத பூணூல் அணிந்த சரஸ்வதி
இத்தலத்தில் கையில் வீணை இல்லாமல் சரஸ்வதி தேவி எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.
சிலையில் ஞான சரஸ்வதியாக தாமரை பீடத்தின் மேல் அமர்ந்து காட்சி தருகிறாள்.
அர்த்த (பாதி) பத்மாசனத்தில் காட்சி தரும் இவளின் வலது கையின் ஆள்காட்டி விரல் மேல் நோக்கியபடி உள்ளது.
இதற்கு சூசி முத்திரை என பெயர். கடவுளைப் பற்றி அறிவதே மேலானது என்ற ஞான உபதேசத்தை நமக்கு போதிக்கிறாள்.
சாந்த முகத்துடன் மார்பில் பூணூல், கைகளில் ஜபமாலை, கமண்டலம், சுவடி, வளையல்கள் என கலை நயத்துடன் காட்சி அளிக்கும் இவளது தோற்றம், பார்ப்பவரை பரவசமடைய செய்யும்.
அதிசயம் 6: முப்பரிமாண நடராஜர்
தென்கிழக்கு மூலையில் முப்பரிமாண நடராஜர் சிலை சிற்ப சிறப்புகளைக் கொண்ட இக்கோயில் சோழர் கால கட்டட கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
அதிசயம் 7 கலச நிழல் விழாது:
160 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் நிழல் பூமியில் விழாதவாறு கட்டிடகலை கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டுள்ளது
அதிசய்ம் 8: சிங்கமுக கிணறு
கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிமாண்ட சிங்க வாயிலில் இருந்து உள்ளே படிக்கட்டில் கீழே சென்றால் குகைபோல ஒரு கிணறு இருக்கிறது.
மேலிந்து பார்த்தால் எதுவும் தெரியாது. ஆனால் உள்ளே அரச பெண்கள் ராணிகள் குளிக்கும் வகையில் பிரமாண்ட கிணறு இது.
போர் காலங்களில் இங்கிருந்து தப்பிக்கவும் சுரங்கபாதை உண்டு என்று சொல்கிறார்கள்.
அதிசயம் 9: சோழகங்கம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நீர் வசதி ஆறுகளே இல்லாத இடத்தில் ஒரு மிகப்பெரிய ஏரியை அதாவது ஆறு கி.மீ. நீளம் 3 கி.மீ. அகலத்தில் பிரமாண்ட ஏரியை மனித சக்தியால் புதிதாக உருவாக்கி
அதற்கு நீர் ஆதாரமாக 60 கி.மீ. தள்ளி இருக்கும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கால்வாய் வெட்டி இதில் இணைத்தது மிகப்பெரிய சாதனை.
இந்த ஏரியில் ராஜேந்திர சோழன் கங்கை மன்னனை வெற்றிகொண்டு அங்கிருந்து தோற்ற மன்னர்கள் தலையில் கங்கை நீரை தலையில் கொண்டு வந்து தாம் கட்டிய இந்த ஏரியில் நிரப்பி இதை சோழகங்கம் என்று பெயர் சூட்டினார்.
இது இன்றும் தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று.
யோசித்துப்பாருங்கள் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு ஏரி கட்ட எவ்வளவு சிரமம் என்றும் அதிசயம் என்றும் புரியும்.
1000 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த
கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .
தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.
நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.
ஓம் நமசிவாய…
சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்

No comments:
Post a Comment