Tuesday, December 30, 2014

பைசா செலவில்லாமல் ஆரோக்கியமாக வாழ சில வழிமுறைகள்:

நம் முன்னோர்கள் இயற்கை உணவை உண்டு நீண்ட ஆயுள்காலத்துடன் வாழ்ந்தார்கள், ஆனால் அவர்கள் வழிவந்த நாம் பாஸ்புட் உணவுகளையும், மருத்துவரையும் நாடி செல்கின்ற நிலமை ஏற்பட்டுள்ளது. நாம் இதை மாற்றி பைசா செலவில்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ நம் முன்னோர்களின் இயற்கை வழிமுறைகள்:
அருகம்புல் சாறு: குடித்த இரண்டு மணிநேரம் கழித்து, இரண்டு வாழைப்பழங்களுடன் ஒருவேளை உணவை முடித்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு இதில் அதிக சத்துகள் உள்ளன. எல்லா நோய்களுக்கும ஏற்ற டானிக் அருகம்புல் சாறு. ரத்தத்தை சுத்தம் செய்யும். நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். அமிலத்தன்மையை குறைக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது.
துளசி இலைச்சாறு: காய்ச்சல்,இருமல், ஜீரணக்கோளாறு, ஈரல் சம்பந்தமான நோய்கள், காது வலி ஆகியவற்றை நீக்கி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
தூதுவளை இலைச்சாறு: மார்ப்பு சளியை அகற்றும். நரம்புத்தளர்ச்சி மறையும். மூளை வளர்ச்சி, நினைவாற்றல் அதிகரிக்கும். தோல் நோய்கள் மறையும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சாறு: உடல் தங்க நிறமடையும். கண்கள் நல்ல பார்வை பெறும். மூளைக்கு நல்ல சுறுசுறுப்பை தரும்.தெளிவான அறிவு கிடைக்கும். காமாலையும், மலச்சிக்கலும் ஓடும்.
பொன்னாங்கண்ணிச் சாறு: உடலுக்கு வலு ஊட்டுவதோடு பொன்போல் பளபளக்கும் தன்மையை அளிக்கிறது. கண்ணொளி அதிகரிக்கும். வாதநோய்கள் மறையும். உடல் சூடு குறையும்.
வல்லாரை இலைச்சாறு: நினைவாற்றல் வளரும், நரம்புத்தளர்ச்சி அகலும், வயிற்று நோய்கள், குடல் நோய்கள் நீங்கும், தாது விருத்தியாகும். சிறுநீர் நன்கு பிரியும். இதயம் வலுவாகும்.
வில்வ இலைச்சாறு: காய்ச்சல், நீரழிவு குறையும். வயிற்றுப்புண்கள் ஆறும். நல்ல பசி எடுக்கும், மந்த புத்தி மாறும், மஞ்சள் காமாலை நீங்கும், காலாரா குறையும்.
முசுமுசுக்கை இலைச்சாறு: தொடர் இருமல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் குறையும். நுரையீரல் நோய்கள் மறையும்.
புதினா இலைச்சாறு: வாய்ப்புண், குடல்புண்கள், சளி, கபம், இருமல் குறையும். புற்றுநோய்கள், வெண்குஷ்டம் குறையும்.
நெல்லிக்காய் சாறு: தலைமுடி உதிர்வது குறையும். தும்மல்,இருமல்,சளி,கண்நோய்,பல்நோய்கள் குறையும். நன்கு பசிக்கும், இதயநோய்கள், நீரழிவு நோய்கள் குறையும்,உடல் பலமின்மை, தோல் நோய்கள் குறையும்.
வாழைத்தண்டுதண்டுச்சாறு: சிறுநீர் அடைப்பு,சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும். ரத்த அழுத்தம், தொந்தி குறையும்.அமில்;அமிலத்தை குறையும், உடல்,கை,கால் வீக்கம் குறையும். பாம்புக்கடி, வண்டுக்கடி நச்சுக்கள் குறையும். ரத்தம் சுத்தமாகும்.
சாம்பல் பூசணிக்காய்சாறு: பெண்களுக்கு மாதவிடாய் நோய்கள், கர்ப்பப்பைநோய்கள், வயற்றுப்புண்கள் அமிலத்தைக் குறைக்கும்.
கேரட் சாறு: கண்பார்வை ஒளி பெறும். கண்நோய்கள், பல்நோய்கள் குறையும். அமிலத்தை குறைக்கும்.
அரச இலைச்சாறு: மலச்சிகல்,உடல் சூடு,கர்ப்பப்பை நோய்கள் குறையும்.
பூவரசு இலைச்சாறு: காலரா,தொழுநோய்,தோல் நோய்கள் குறையும்.

கொத்துமல்லிச்சாறு: பசியைதூண்டும், பித்தம் குறையும்,வாத நோய் குறையும், மூலம், காய்ச்சல், இருமல், சளி, வாதம் குறையும்.

No comments:

Post a Comment