Saturday, December 27, 2014

தமிழ் தொன்மையான மொழி

சில கோடி ஆண்டுகளுக்கு முன் பெய்த கடும் மழையில் மரங்கள் அடித்து செல்லப்பட்டு ,ஆழமிக்க ஏரிகளில் புதைந்து காலப் போக்கில் பூமியில் ஏற்படும் அதிகபடி யான அழுத்தங்களால் கல்லாக மாறின. இது போன்ற இயற்கையின் அறிய வகை செல்வங்கள் உலகில் தொன் மையான நிலப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். அதில் தமிழர் நாடும் ஒன்று .அவ்வாறு கிடைத்த அரிய வகை செல்வங்களை , விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் தாலுக்காவில் உள்ள திருவக்கரை என்னும் ஊரில் உள்ள அருங் காட்சியகத்தில் காட்சி படுத்தப்பட்டுள்ளது.

பெரும் மழையில் தாவரங்களும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு ஆற்றோரம் உள்ள பாறைகளின் மீது படிந்து திடிரென்று ஏற்படும் நில நடுக்கம் போன்ற இயற்க்கை சீற்றங்களால் பூமியின் ஆழப்பகுதிகளில் புதைந்து விடுகிறது .நாளடைவில் அதே பகுதியில் பாறைகள் புதைந்து ஏற்படும் அதிக படியான அழுத்தத் தால் தாவரங்களில் இருக்கும் சிலிகான் என்று மூலப் பொருள் பாறைகளின் மீது படிந்து பாறையோடு பாறையாக மாறி விடுகிறது . இவ்வாறு மாறுவதற்கு இரண்டு லட்சம் கோடி ஆண்டுகள் தேவை படுகிறது . இது போன்ற கற்கள் ஆற்றோரங்களில் மட்டுமே கிடைக்கும் . திருச்சியில் இது போன்ற பாறை கற்கள் கிடைத்துள்ளன .

2009 ஆண்டு அக்டோபரில் சேலம் பெரியார் பழகலை கழக ஆய்வாளர்கள் 6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனசோர் முட்டைகளின் படிவங்களை ஆயிரக்கணக்கில் தமிழர் நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் கண்டு பிடித்தனர் .

சில லட்சம் ஆண்டுகளுக்கு முன் கற்கால தமிழர்கள் பயன் படுத்திய கல் ஆயுதங்களையும் , .சென்னை அருகே அதிரம் பட்டினம் என்ற ஊரில் கற்கால தமிழர் கள் வாழ்ந்த குகையையும் ஆங்கிலேயர்கள் கண்டு பிடித்து ஆவணப் படுத்தியுள்ளனர் .என்றும் அவ்வூர் மக்கள் அக்குகையை இன்றும் காளி கோயிலாக வழி படுகின்றனர் . அக் குகையின் உட்புறம் சிறு உருண்டை வடிவிலான பாறை உருகிய நிலையில் ஆங்காங்கே காட்சி அளிக்கிறது .

அறிவியல் ஆய்வாளர்கள், எரிமலை வெடிப்பின் போது உருகி வரும் பாறை குழம்புகளால் இந்த குகை உருவாகி யிருக்கும் என்றும் அப்பொழுது பெய்த கடும் மழையால் உருகிய பாறை குழம்பு குளிர்ந்து பந்து வடிவில் அங்க ங்கே குகையின் உட்புறத்திலேயே பாறையாக உருமாறி இருக்கிறது .இந்த குகையில் சில லட்சம் ஆண்டுகளு க்கு முன் கற்கால தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று இதை கண்டு பிடித்த ஆங்கிலேய ஆய்வாளர் 1850 ஆண்டுகளின் இடை பகுதியில் தான் எழுதிய புத்தகத் தில் குறிப்பிட்டுள்ளார் .

தமிழர் நாட்டில் கிடைத்த மேற்கண்ட சான்றுகளை சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நீங்கள் காணலாம் .

மேற்கண்ட சான்றுகள் நம் மண்ணின் தொன்மையை யும் , அப்போது வாழ்ந்து வந்த டைனசோர் போன்ற மிருகங்களின் அழிந்த எச்சங்கள் இங்கு கிடைப்பதை கொண்டும் , அதற்கு பிறகு மனிதன்(தமிழன்) தோன்றி, பல லட்சம் ஆண்டுகளாக இங்கு தொடர்ந்து வாழ்ந்து வந்த வரலாற்று சான்றுகளை கொண்டு , நம் இனத்தின் தொன்மையையும் அவர்கள் ஊடாடும் மொழியான தமிழின் தொன்மையையும் அறிந்து கொள்ளலாம் .

இதன் தொடர்ச்சியாக இன்றும் பல கோடி தமிழ் மக்கள் தமிழ் மொழி யுடன் வாழ்ந்து வருகிறோம். நம் மொழிக் கும் இனத்திற்கும் தொன்மை வரலாறு உண்டு சான்று கள் உண்டு .சில தொல் பொருள் ஆய்வுகள் மூலம் கிடைத்த வரலாறுகளே தமிழனின் பெருமையை, உலகையே வியக்க செய்கிறது

No comments:

Post a Comment