Thursday, March 12, 2015

அரச மரம்


அதிகாலையில் அரசமரத்தை சுற்றும் குழந்தை இல்லாத பெண்கள் அனைவரும்
அங்கு வெளிப்படும் வாயுவை சுவாசிப்பதோடு மட்டுமில்லாமல் மனித செல்லினுள் காணப்படும் DNA வின் பின்னிய ரிப்பன் வடிவத்தை
(double helix) மனதில் கற்பனைசெய்துகொண்டால் முழுமையான கற்பதிற்கான சாத்திய கூறுகள் அதிகரிக்க கூடும்.
இதை கருத்தில் கொண்டு தான் நம் முன்னோர்கள் அந்த நாக தேவதை கற்சிலையை அரசமரத்தின் அடியில் வைத்துள்ளார்கள் 'போல'.ஒவ்வொரு சுற்றிலும் அந்த சிலையை தொட்டு வணங்கும்
பொழுது DNAவின் வடிவம் அவர்களின் மனதை ஆட்கொள்ளும் அல்லவா.
இது பல தலைமுறைகள் தாண்டிய நம் முன்னோர்களின் ஆச்சரிய பட வைக்கும் அறிவியல் சார்ந்த அனுமானம்.
இந்த கற்சிலையில் காணப்படும் வடிவமானது, போலந்தை சேர்ந்த அறிவியல் விஞ்ஞானிகள் வாட்சன் மற்றும் கிரிக் கண்டறிந்த DNA வின் இரட்டை வலை பின்னல்(double helix) வடிவத்திற்கு முழுவதுமாக ஒத்து
போகிறது. இந்த நூற்றாண்டின் ஒரு மிகபெரிய கண்டுபிடிப்பிற்காக அவர்களுக்கு நோபெல் பரிசும் வழங்க பட்டுள்ளது.
இதற்கு மற்றும் ஓர் விளக்கம் உண்டு...சித்தர்கள் வழி பாட்டு முறையில் இடகலை பிங்கலை மற்றும் இவை இணைந்து பிணைந்து கபாலத்தில் விரிவதை...(அவ்வைப் பாட்டியின் வினயாகர் அகவலில் கூறியது போன்று - சுழு முனை மார்க்கம் ) என்பதை விளக்குவதே இந்த வழிபாட்டின் அர்த்தம்...நம் உடலில் உள்ள இவைகளை அடக்கி ஆள தெரிந்தாலே எல்லா நோய்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும்

No comments:

Post a Comment