Saturday, September 5, 2015

தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்வோம்...!

“ நான் அடுத்த பிறவியில்
தமிழனாகப் பிறக்க வேண்டும் ”
இப்படி சொன்னவர் யார்
தெரியுமா...? நம் நாட்டுத்
தந்தை காந்தியடிகள்...!
மகாத்மா காந்தியடிகள், உலகப்
புகழ்பெற்ற எழுத்தாளர்
லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம்
எழுதினார். அக்கடிதத்தில் 'தம்மைத்
துன்புறுத்துவோரையும்
தண்டிக்காது மன்னிக்கும் குணம்
பற்றித் தாங்கள் கூறியிருக்கும்
செய்தி, என்னை மிகவும்
கவர்ந்தது' என்று குறிப்பிட்டார்.
கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய்
மிகுந்த தன்னடக்கத்தோடு, 'இந்தப்
பெருமையும், புகழும்
எனக்கு உகந்ததல்ல. உங்கள்
தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து,
திருக்குறள் எனும் அற்புத நூலைப்
படைத்த திருவள்ளுவரையே சாரும்.
இதோ,
அப்பொருள் உணர்த்தும்
குறள்' என்று ஆங்கிலத்தில்
மொழி பெயர்க்கப்பட்ட
திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் குறள்...
இன்னா செய்தாரை ஒறுத்தல்
அவர்
நாண நன்னயம்
செய்து விடல்.
இந்நிகழ்வுக்குப் பின், ஆங்கிலத்தில்
மொழி பெயர்க்கப்பட்ட
திருக்குறளை காந்தி படித்தார். பின்,
'நான் அடுத்த பிறவியில்
தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன்
தெரியுமா? ஆங்கிலத்தில்
படிக்கும்போதே... இத்தனை சுவையாக
இருக்கிற திருக்குறளின்
மூலநூலை தமிழ்மொழியில்
படிக்க வேண்டும். அதற்காகவே,
நான் ஒரு தமிழனாகப் பிறக்க
வேண்டும்' என்றார்.
தமிழனாய் பிறந்ததில் கர்வம்
கொள்வோம்...!

No comments:

Post a Comment