Saturday, September 26, 2015

உணவுகளின் தமிழ்ப் பெயர்கள் !!!

புரட்டிப்போட்டால் புரோட்டா ; 
சப்பையாய் இருந்தால் சப்பாத்தி ; 
பூரிப்பதால் பூரி ; உபரி,உப்புவதால் உப்புமா மற்றும் உப்பம் [ பஜ்ஜி ],
இட்டு அவிப்பதால் = இட்டவி;
அதையே சாப்பிட அளிப்பதால்,இட்டளி = இட்லி
இன்றைய தமிழகத்தின் தேசிய உணவு என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறது புரோட்டா.
புரோட்டா என்ற பெயர் ஒரு தமிழ்ச் சொல்லாகும்!!
புரட்டு -----> திருப்பிப் போடு.
மைதாமாவால் ஆன மாவு உருண்டையை, தட்டை ஆக்கியபின் அதனை ஒரு புரட்டு புரட்டி எண்ணையைவிட்டு சமைப்பதால் புரோட்டா என்ற பெயர் வந்தது.
சில ஊர்களில் பரோட்டா என்று தவறாக உச்சரித்தாலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் புரோட்டா என்று சரியாகப் பேசுகின்றனர்.
இந்த உணவின் பிறப்பிடம் இன்றைய பஞ்சாப் பகுதி என்றுதான் அனைவரும் கூறி வருகின்றனர்!!
ஆனால் பஞ்சாபி மொழியிலோ உருது/இந்தி மொழியிலோ புரோட்டாவிற்கு வேர்ச்சொல் இல்லை!!!
இது மட்டும் அல்ல...இன்று வட இந்தியர்கள் விரும்பி உண்ணும் சப்பாத்தி,பூரி,ரோட்டி ஆகிய உணவின் வேர்ச்சொற்களும் தமிழ் மொழியிலேயே உள்ளன!!!
சப்பையாக இருப்பதால் சப்பாத்தி என்ற பெயர் வந்தது.(நம் ஊரில் சப்பையாக உள்ள ஒருவகையான கள்ளிச் செடிக்கு சப்பாத்திக் கள்ளி என்ற பெயர் உள்ளது).
எண்ணையில் போட்டவுடன் உப்பி, பூரிப்பதால் பூரி என்ற பெயர் வந்தது.
கோதுமை மாவை உருட்டி, தட்டையாகிய பின் சமைப்பதால் ரோட்டி(உருட்டி— >ருட்டி ->ரோட்டி ) என்ற பெயர் வந்தது.
அக்கால சிந்து சமவெளி மக்கள் வாழ்ந்த பகுதியில் தான் இன்றய சீக்கியர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.அவர்கள் தமிழர்களின் குருதி உறவுகள் ஆவர்!!
சமசுகிருதத்தில் இருந்து தான் அனைத்து மொழிகளும் பிறந்தன என்பது பிராமணர்கள் செய்யும் அயோக்கியத்தனம் ஆகும்.
-தமிழன் வருவான்

No comments:

Post a Comment