Monday, February 23, 2015

வேண்டும் விடாமுயற்சி

வேண்டும் விடாமுயற்சி
எண்ணங்களில் positive வா இருந்தா மட்டும் போதுமா !.எல்லாம் நல்லபடியாய் முடிந்து விடுமா என்ன ?போதாது ....எண்ணம் நேர்மறையாக இருந்தால் மட்டும் போதாது .தொடர்ந்து செயல் செய்ய வேண்டும் . மீண்டும் மீண்டும் விடாமுயற்சி யுடன் தொடர்ந்து செயல் புரிந்தால் மட்டுமே நமது கனவு நிறைவேறும் .

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜன் பெரிய கோவில் கட்டினான் .இன்று அவனுக்கு இருந்ததை விட ஆயிரம் வசதிகள் நமக்கு உள்ளது .இருந்தும் என்ன! ஒரு சின்ன ரயில்வே மேம்பாலம் கட்ட நமக்கு ஐந்து வருடத்துக்கு மேல் ஆகிறது .அதுவும் எத்தனை நாள் வலுவோடு இருக்கும் என்பது சந்தேகம் !

ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் கட்டிய கோயில் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது .ராஜேந்திரன் கங்கையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்தான் கங்கை கொண்ட சோழீச்வரத் திற்கு .நமக்கு பக்கத்து கர்நாடகத்தில் இருந்து காவிரியை கொண்டு வர முடியவில்லை .

இலங்கை மன்னனை சிறை பிடித்து அவன் காட்டை அலசி பாண்டியனின் மணிமுடியை கொண்டு வந்தான் ராஜேந்திரன் அன்று. இன்று ஒரு ஐந்து மீனவர்களை காப்பாற்றி கூட்டு வர எத்தனை அக்கப்போர் .கங்கை கொண்டான் ,கடாரம் வென்றான் என்று தன் கடற் படையால் உலகை வெற்றி வாகை சூடி சுற்றி வந்தான் சோழன் .இன்று கட்ச தீவுக்கு கூட போக முடியவில்லை .

எங்கே போனது தமிழனின் வீரம் .இன்று உலக தமிழர்களுக்காக தமிழகத்தில் இருநது கொண்டே சும்மா கத்தும் வாய் சொல் வீரர்கள் தான் இருக்கிறார்கள் .

அன்று கனவு கள் நிறைவேற தொடர்ந்து செயல் செய்தார்கள் தமிழர்கள். இன்று வெறும் கூச்சல் மட்டுமே இருக்கிறது.செயல் இல்லை.

உங்கள் கனவை நிறைவேற்ற நீங்கள் நேர்மறையாக சிநதித்தால் மட்டும் போதாது.செயல் புரிய வேண்டும்.அதுவும் தொடர்ந்து. தடைகள் பல வரலாம். கண்டிப்பாக வரும். இருந்தாலும் விடாமுயற்சி யுடன் தொடர்ந்து செயல் செய்ய வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment