Wednesday, September 14, 2016

Tamilan

அணுக்களின் கூட்டமைப்பே பஞ்ச பூதங்களாகியது. 
==========================
முதல் பூதம் விண் என்பது. இது நாம் கண்டுகொண்ட அணுமூலமேதான் (Electron, Ptoron, Neutron - ie Sub Atomic Particle). இதைஆகாசம் என்ற பெயராலும் அழைக்கின்றனர்.இரண்டாவது பூதம் காற்றுஅல்லது வாயு. இந்த அணுமூலங்களில் ஏற்படக்கூடிய மிக எளிய கூட்டமைப்பு இரண்டு அணுமூலங்கள் கூடி ஒன்று மற்றொன்றை மையமாகக் கொண்டு சுற்றி இயங்குவது. (ie. One electron and one proton). இதுதான் ஹைட்ரஜன் என்கிற, இருப்பதிலேயே மிகவும் இலேசான வாயுவாகும். இதுதான் இந்த பிரபஞ்சம் முழுவதும் அனேக அண்டங்களிலும் (Celestial bodies), மேகக்கூட்டஙகளிலும் (Nebulla), விண்மீன்களிலும்(Stars) அதிக அளவு காணப்படும் வாயுவாகும். விண்மீன்களின் எரிபொருளாக இருப்பதும் இதுதான். இதே போல மற்ற வாயுக்களும் உண்டாகியது.மூன்றாவது பூதம் நெருப்புஅல்லது தேயு. இரண்டு கைகளையும் அழுத்தித் தேயுங்கள். சூடு உண்டாகிறது. நெருப்பை உண்டாக்கவும் பண்டைக்காலங்களில் கற்களை அழுத்தி உரசி நெருப்பை உண்டாக்கினர். காற்றே அதிகமான அழுத்தம் பெற்று அழுத்தக் காற்று ஆகும் போது உஷ்ணம் அல்லது சூடு அல்லது நெருப்பு என்பது உண்டாகிறது.நான்காவது பூதம் நீர்அல்லது அப்பு ஆகும். இங்கே நீர் என்பது நீரை மட்டுமல்லாமல் நீர்ம வடிவிலுள்ள எல்லா வகையான நீர்மப் பொருட்களையும் குறிக்கின்றது. அதிக அழுத்தத்தினால் நெருங்கி இயங்கக்கூடிய இரண்டு வகையான காற்று அணுக்கள் (Hydrogen and Oxygen) குளிர்ச்சியடைந்து ஒன்றுகூடி நீராக மாற்றமடைகின்றது.ஐந்தாவது பூதம் நிலம்அல்லது ப்ருத்வி. எல்லா கெட்டிப்பொருட்களும் இந்த வகையைச் சேர்ந்ததே. நீர்மப்பொருட்கள் குளிர்ச்சியடைந்து கெட்டிப் பொருளாகி நிலமாக மாறியது. இந்த ஐந்து பூதங்களும் ஒன்றோடொன்று கூடி, கனமானது மையத்திலும், இலேசானது வெளிப்புறத்திலும் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் அழுத்தப்பட்டு, நாம் காணும் பல்வேறு அண்டங்களாகவும் (Celestial bodies), விண்மீண்களாகவும் (Stars) உருவாகியது. இந்த ஐந்து பூதங்களும் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலக்கும்போது அதுவே உயிர்களாக, ஓரறிவுள்ள தாவர இனமாகியது. பின்னர் பரிணாம வளர்ச்சிப்படி ஈரறிவு முதல் ஆறறிவு பெற்ற மனித இனம் வரை உண்டாகியது. இந்த ஆறு அறிவு என்பது எவையெல்லாம்? தொடு உணர்ச்சியாகிய அழுத்தத்தை உணரும் அறிவு, வாசனையை உணரும் அறிவு, சுவையை உணரும் அறிவு, ஒலியை உணரும் அறிவு, ஒளியை உணரும் அறிவு மற்றும் ஆறாவதாக - எந்த ஒன்று இந்த ஐந்து உணர்வுகளையும் அறிகிறதோ அந்தஅறிவை அறியும் அறிவு.
இப்போது இந்தப் பரிணாமச் சரித்திரத்தைச் சுருக்கமாக மீண்டும் ஒரு முறை காண்போம்.
வெளி (Space)
|
V
சுழல் அலை (இறைத்துகள்/ Formative Dust/காந்தம்) 
|
V
அணுமூலம் (Sub atomic particles such as electron, proton, neutron) 
|
V
அணு (Various atoms in the periodic table) 
|
V
பஞ்ச பூதங்கள் ( இதற்கு முந்தைய நிலைகளான அணுமூலம் மற்றும் அணு என்கிற நிலைகளும் இதில் அடங்கும்)
|
V
அண்டங்கள், விண்மீண்கள், விண்மீன் திரள்கள் (Celestial bodies, stars, galaxies)
|
V
உயிர்கள் - தாவரம் - ஓரறிவு
|
V
ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன, நீர்நில வாழ்வன, விலங்குகள் - ஈரறிவு முதல் ஐந்தறிவு வரை
|
V
மனிதன் - ஆறறிவு.
பொருள் (Any physical substance)
|
V
அணு (Atom)
|
V
அணு மூலங்கள் (Sub atomic particles like electron/proton/neutron)
|
V
வெளி (Space)
அதாவது எந்த ஒரு பொருளைப் பகுத்துக் கொண்டே போனாலும் அணுக்களும், அணுக்களைப் பகுத்துக் கொண்டே போனால் அணுமூலங்களும், அணுமூலங்களைப் பகுத்துக் கொண்டே போனால் இறுதியில் வெளியும் (Space) எஞ்சுகிறது என்றும் கண்டோம். இந்த மாதிரியில்(Model) சில குறைபாடுகள் இருந்தன. அதாவது காந்தம்(Magnet) என்பது என்ன - என்பது குறித்தோ, ஈர்ப்பு விசை (Gravity) என்பது என்ன - என்பது குறித்தோ போதுமான மற்றும் அறிவுக்குப் பொருத்தமான விளக்கத்தை மேற்குறிப்பிட்ட மாதிரி (Model)யிலிருந்து பெற இயலவில்லை.
இது குறித்து சிந்தித்த அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் தமது ஆழ்ந்த சிந்தனை மற்றும் ஆராய்ச்சி அறிவின் பயனாக பின்வரும் கருத்துக்களை வழங்கினார்கள். இதை அவருடைய பெயரால் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய பிரபஞ்ச மாதிரி (Vethathrian Model of the Universe) என்று அழைக்கிறோம்.
வெளி (Space) யானது ஏதுமற்ற சூனியம் (ஒன்றுமில்லாதது) என்று எண்ணிக்கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள். ஆதலால் அதனைக் குறிக்க 'பாழ்' என்ற சொல்லைக் கூடப் பயன்படுத்தினர். ஆனால் வெளி(Space)யானது ஏதுமற்ற சூனியம் அல்ல என்பதை நாம் ஏற்கனவே இதற்கு முந்தைய இடுகையான 'இறைநிலை' என்ற இடுகையில் கண்டோம். அதாவது அதற்கு பேராற்றல், பேரறிவு, (அளவிலே குறைவு படாததால்) வற்றாத இருப்பு மற்றும் காலம் ஆகிய பண்புகள் அமைந்திருக்கின்றன என்று பார்த்தோம். இப்படிப்பட்ட நான்கு முக்கிய வளங்களையும் உடைய வெளி (Space) யானது ஏதுமற்ற சூனியமாக எப்படி இருக்க இயலும்? இது குறித்துச் சிந்தித்த அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் அதற்கு மேலும் ஒரு மிக முக்கியமான பண்பு உண்டென்று கண்டறிந்தார்கள்.
வெளி (Space)யில் இரண்டு அண்டங்கள் (celestial bodies) இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவ்விரண்டு அண்டங்களுக்கும் நடுவே ஈர்ப்பு விசை (Gravitational Force) உண்டென்றும் அதன் காரணமாக ஒன்று இன்னொன்றைத் தன்னை நோக்கி இழுப்பதாகவும் விஞ்ஞானத்தின் வாயிலாக அறிகிறோம். இரண்டு அண்டங்கள் ஒன்றை நோக்கி ஒன்று நெருங்கி வருவதற்கு, இரண்டு சாத்தியக்கூறுகள் இருக்கலாம்.
இரண்டும் ஒன்றை ஒன்று இழுக்க வேண்டும்.
இரண்டு அண்டங்களையும் வேறு ஏதோ-மூன்றாவதாக உள்ள ஒன்று, நெருங்கி வரும்படி அழுத்தித் தள்ள வேண்டும்.
இந்த இரண்டாவது சாத்தியத்தைப் பற்றித்தான் மகரிஷி அவர்கள் சிந்தித்தார்கள். இரண்டு அண்டங்களுக்கும் இடமாக இருக்கின்ற இந்த வெளி(Space)யானது இவ்விரண்டையும் நெருங்கும் படிக்குச் சூழ்ந்து அழுத்துவதாகக் கண்டறிந்தார்கள். இவ்வாறு வெளி (Space)யானது இதிலுள்ள பொருட்களை மட்டுமல்லாமல் தன்னைத் தானேயும் சூழ்ந்து அழுத்தி இறுக்கிக் கொள்வதாகவும் அறிந்த மகரிஷி அவர்கள், வெளி (Space)யானது தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் பேராற்றல் (Self compressive surrounding pressure force) என்ற மிகவும் முக்கியமான பண்பினை உடையது என்றும் கண்டறிந்தார்கள். அதோடு இந்த சூழ்ந்தழுத்தமானது மிக நுண்ணிய அதிர்வுடன் (Quivering motion) கூடிய ஒன்றாக இருப்பதையும் ஆராய்ந்தறிந்தார்கள்.

இந்த வெளி(Space)யானது தன்னைத்தானே சூழ்ந்தழுத்துவதால் எண்ணிறந்த சிறு சிறு சுழல் அலைகளாக (formative dust) மாற்றம் பெற்றது என்று எண்ணினார்கள். எப்படி எனில், எவ்வாறு காற்றிலே அழுத்த வேறுபாடு உண்டாகும் போது சுழல்காற்றும், நீரிலே அழுத்த வேறுபாடு உண்டாகும் போது நீர்ச்சுழியும் உண்டாகிறதோ, அதே போல வெளி(Space)யானது நுண்ணிய அதிர்வுடன் சூழ்ந்தழுத்துவதால் அதுவே சிறு சிறு சுழல் அலைகளாக (formative dust) மாற்றம் பெற்றது என்று கண்டார்கள். இதை இறைத்துகள் என்றும் அழைத்தார்கள்.

இந்தச் சுழல் அலைகளானது தங்களுடைய சுழற்சியின் காரணமாக ஒன்று மற்றொன்றை விலக்கித் தள்ளும் 'விலக்கும் ஆற்றல்' கொண்டிருப்பதை உணர்ந்தார்கள். காலப்போக்கில் இந்தச் சுழல் வேகம் குறையும் போது இவை தத்தம் விலக்கும் ஆற்றலில் குறைவுபட்டு ஒன்றோடு ஒன்று நெருங்கி ஒரு தொகுப்பாக இயங்குவதாகவும் இந்தத் தொகுப்பே அணுமூலங்கள் (Sub atomic particles - Electron,Proton & Neutron) என்றும் கண்டறிந்தார்கள். இந்த அணுமூலங்கள் உண்டாகக் காரணமான சுழல் அலைகளானது தற்சுழற்சி உடையதாக இருப்பதால், அணுமூலங்களும் இவற்றின் தொகுபயனான தற்சுழற்சியைப்(Net spin moment) பெற்றுச் சுழல்கின்றன. இவற்றில், சுழல் வேகம் குறைவு பட்ட அணுமூலம் அணுவின் மையத்திலும், அதிகமாகவுள்ளது அதன் வெளியிலும் சுற்றி இயங்கியது.

அது எப்படி? அணுமூலங்களானது கோடிக்கணக்கான சுழல் அலை(Formative dust)களின் தொகுப்பாக இருக்கிறது. அது தன்னுடைய தற்சுழற்சியின் போது அதற்கு இடமாக உள்ள வெளி(Space)யை உரசி இயங்குவதால் அணுமூலங்களிலிருந்து எப்போதும் ஏராளமான சுழல் அலை(Formative dust)கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறு வெளியேறும் இந்தச் சுழல் அலையே (Formative dust), காந்தம்(Magnetism) என்று அழைக்கப்படுகிறது. (குறிப்பு: இந்த காந்த அலையே (Formative dust) இந்தப் பிரபஞ்சம் முழுவதும் எல்லா அண்டங்களுக்கும் இடையேயும் நிரம்பி இருக்கிறது. இது ஒரு பெரிய வலை - Mega net போல இந்தப் பிரபஞ்சம் முழுவதும் விரிந்து இருப்பதால் இதனை Magnet என்றே அழைத்தனர்) இவ்வாறு வெளியேறும் இந்த சுழல் அலை(Formative dust) அது வெளியேறக்கூடிய அணுமூலத்திற்கு ஒரு விலக்கு ஆற்றலைத் தருகிறது. இதன் காரணமாக அணுமூலங்கள் ஒன்றை ஒன்று விலக்கித், தள்ளி நிறுத்த முற்படுகின்றன. ஆனால் வெளி(Space)யோ தன்னுடைய தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் பண்பினால் இந்த அணுமூலங்களை ஒன்றோடொன்று சேர்த்து அழுத்துகின்றது. எந்த இடைவெளி (distance)யில் இந்த இரண்டு ஆற்றலும் (சூழ்ந்தழுத்தும் ஆற்றலும் விலக்கும் ஆற்றலும்) சமமாகிறதோ அந்த இடைவெளியில் இந்த அணுமூலங்கள் ஒன்றையொன்று தள்ளி நிறுத்துகின்றன.

சுழற்சிவேகம் குறைந்த அணுமூலங்கள், தமது விலக்கும் ஆற்றலில் குறைவு ஏற்பட்டு நெருங்கி இயங்கி அதுவே அணுவின் கருப்பகுதி (Nucleus of an Atom) ஆகியது. சுழற்சி வேகம் அதிகமாக இருந்த அணுமூலங்கள், இந்த அணுக்கருவை, அதற்கென அமையப்பெற்ற இடைவெளியில் (distance) சுற்றலாயின. இவ்வாறு அணுமூலங்களிலிருந்து அணுக்கருவும் அணுவும் உண்டாகியது. இந்த அணுமூலங்களின் பல்வேறுபட்ட விகிதாச்சாரத்திலமைந்த கூட்டமைப்பே இன்று தனிம ஆவர்த்தன அட்டவணை (Periodic table) யில் நாம் காணும் பல்வேறு அணுக்களாக (Elements) அமைந்தன.

No comments:

Post a Comment