Thursday, August 25, 2016

Thokapiyam?

குறிஞ்சி, முல்லை கடவுள்களான சேயோனையும் (முருகன்) மாயோனையும் (விஷ்ணு) போற்றும் நீங்கள் மருதம்,நெய்தல் கடவுள்களான
இந்திரன்,வருணன் ஆகியவர்களை மறந்தது ஏன்?
தமிழின் மிகத் தொன்மையான இலக்கண நூலான
#தொல்காப்பியம் பாடல் இது
#மாயோன் மேயக் #காடுறை உலகமும்
#சேயோன் மேய #மைவரை உலகமும்
#வேந்தன் மேயத் #தீம்புனல் உலகமும்
#வருணன் மேயப் #பெருமணல் உலகமும்
(
பொருளதிகாரம்-5)
பொருள்;
தொல்காப்பியம் திருமால்(விஷ்ணு),முருகன், இந்திரன், வருணன் என்னும் தெய்வங்களை நான்கு நில தெய்வங்களாகக் காட்டுகிறது;
"#குறிஞ்சி(மைவரை)கடவுள் #முருகன்(சேயோன்)
#முல்லை(காடுறை) கடவுள் #திருமால்(விஷ்ணு)(மாயோன்)
#மருதம் (தீம்புனல்) கடவுள் #இந்திரன் (வேந்தன்)
#நெய்தல் (பெருமணல்) கடவுள் #வருணன் "
என்று #தொல்காப்பியம்
கூறுகிறது.

உலகின் மிகத்தொன்மையான #இந்து வேதமான#ரிக்வேதத்தில் குறிப்பிடும் வருணன், இந்திரன் ஆகிய கடவுள்களை பண்டைய #தமிழர்கள்வணங்கியுள்ளனர்.என்பதற்கு இந்தப் பாடல் ஆதாரமாகும்.

No comments:

Post a Comment