Thursday, July 9, 2020

தமிழ் இந்து மத நூல்களை திருடிய கிறிஸ்தவ மிஷனரிகள்

தமிழ் இந்து மத நூல்களை திருடிய கிறிஸ்தவ மிஷனரிகள்
#சுந்தா்ஜீ


தோலுரிப்பு தொடங்குகிறது...

"விரிவிலா வறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனு மெம்பிராற் கேற்ற தாகும்
பரிவினாற் பெரியோ ரேத்தும் பெருவேளூர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி யுய்யும் வகையது நினைக்கின் றேனே"

என்று பெருவேளூர் இறைவனைப் பாடுகிறார் திருநாவுக்கரசு சுவாமிகள். இப்பாடலின் பொருளை கீழே விளக்கி இருக்கிறோம்.

சிற்றறிவு கொண்டவர்கள் புதிய மதத்தை உண்டாகுவார்கள். பிறகு வயிற்றெரிச்சலால் அந்த மதத்தை பிரச்சாரம் செய்வார்கள். அந்த மதம் பொய்யான மதம் என்றாலும் இதனை சிவபெருமான் பொறுத்துக் கொள்கிறார். ஆனால் பெரியோர்கள் அன்போடு வழிபடும் பெருவேளூர்ப் பெருமானை வணங்கி பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுபடும் வழியை விருப்புற்று நினைக்கின்றேன் நான்.

அவரவர்களுடைய சிற்றறிவுக்குத் தகுந்த சமயத்தை உருவாக்கிக் கொள்ளவும் இறைவன் அனுமதிக்கிறான். சிற்றறிவு படிப்படியாக விரியும் போது அதற்கேற்பச் சமயங்களும் படிமுறையில் அமைகின்றன. முற்ற விரிவடைந்த அறிவுடையோர்க்கே உண்மையை உள்ளவாறு உணர்த்த இயலும். உண்மை உணர்த்தும் அச்சமயத்தை இறுதியாக அடையத்தக்கதாக வைத்தான் இறைவன்.

மற்ற சமயங்கள் யாவும் பதி, பசு, பாசம் என்ற முப்பொருள் இயல்புகளை விவாதித்துக் கொண்டிருக்கின்ற பூர்வ பக்கச் சமயங்கள் என்றும், அந்த முப்பொருள் இயல்புகள் இவையே என்று விவாதித்து முடித்து முடிந்த முடிவாகச் சொல்லும் சமயம் சித்தாந்தம் என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே சித்தாந்தம் என்பது காரண இடுகுறியாய்ச் சைவ சித்தாந்தத்திற்கே வழங்கப்படுகிறது.

இதனால் எல்லாச் சமயங்களும் இறைவனால் வகுக்கப்பட்டன என்றே சைவசித்தாந்தம் கொள்ளும். கொள்வதால் யாரிடமும் வம்புச் சண்டைக்குப் போவது இல்லை.

அதேசமயம் இதைச் சாதகமாக வைத்துக் கொண்டு சமயாதீதமாக விளங்கும் சைவசித்தாந்தத்தையும் சிவபரம்பொருளையும் இகழ்ந்து வம்புச் சண்டைக்கு வருவோரை விட்டு வைப்பதும் இல்லை. அது வைதீகப் புறச்சமயத்தார் ஆயினும், அவைதீகப் புறச்சமயத்தார் ஆயினும், சைவம் தன் கண்டனங்களையும் மறுப்புகளையும் தந்து கொண்டே இருந்தது.

இன்று வைதீகப் புறச்சமயத்தாரைக் காட்டிலும் பெரும்பாலும் அவைதீகப் புறச்சமயத்தாரே தொடர்ந்து சிவநிந்தனை செய்து வருகின்றனர்.

அவ்வகையில் கிறிஸ்தவ மிஷனரியான வீரமாமுனிவர் பதினேழாம் நூற்றாண்டில் சிவநிந்தனை செய்து தம் மதத்தைப் பிரச்சாரம் செய்து வந்தார். அவரைக் கண்டித்து வீரசைவ மரபில் வந்த "கற்பனைக் களஞ்சியம்" துறைமங்கலம் சிவப்பிரகாசர் "ஏசு மத நிராகரணம்" என்ற நூலை எழுதினார். அந்தச் சுவடிகள் எங்கெங்கு இருந்தனவோ எல்லாவற்றையும் வாங்கி அழித்தார்கள் வீரமாமுனிவரின் ஆட்கள். இன்று மூன்றே பாடல்கள் மட்டும் கிடைக்கின்றன. பிறகு தமிழகத்தில் பெரிதாக எந்த மோதல்களும் இல்லாமலேயே இருந்தது.

பதினாறாம் நூற்றாண்டில் இலங்கையில் போர்த்துக்கேயரின் ஆட்சியில் அநேக அத்துமீறல்கள் நடந்து கொண்ட  இருந்தன. இதேநிலை அவர்களுக்குப் பின்னரும் டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர் என்று தொடர்ந்தது.

கோயில்கள் இடிக்கப்பட்டன; வழக்கு, தண்டனை என்று அச்சுறுத்திச் சைவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டார்கள்; உத்தியோகம், பணம் ஆகியவற்றாலும் மதமாற்றம் செய்யப்பட்டார்கள்; சைவ நூல்களைக் கற்றுத் தம் சமயமே சிறந்தது என்ற உறுதியுடைய சைவர்கள் உள்ளே சைவராகவும் வெளியே கிறித்தவராகவும் இருந்து வந்தார்கள் (இவர்கள் பஞ்சாட்சரக் கிறித்தவர்கள் என்று சொல்லப்பட்டார்கள்); யாழ்ப்பாணத்து ஞானப்பிரகாசர் பசுக்கொலைக்கு அஞ்சித் தமிழகத்திற்கு வர நேர்ந்தது.

இவ்வளவு துன்பங்கள் நேர்ந்தாலும் சைவ சித்தாந்தம் அங்கே உயிர்ப்போடு இருந்தது. அதற்குக் காரணம் என்னவென்று "யாழ்ப்பாணச் சரித்திரம்" என்னும் நூலில், முத்துத் தம்பிப் பிள்ளை கூறுகிறார் பாருங்கள்.

"பறங்கிக்காரரும் ஒல்லாந்தரும் அரசு செய்த இருநூறு வருஷ காலமும் தமது சமயத்தில் பிரவேசிக்கும்படி பெருந்துன்பங்கள் செய்து குடிகளை வருத்தினர். அதற்காற்றாது அச்சமயத்தைக் (கிறிஸ்தவம்) கைக்கொண்டார் போலப் புறத்தே நடித்தும் அகத்தே சைவசமயிகளாயே இருந்தார்கள். பறங்கிக்காரரும் ஒல்லாந்தரும் தமது சமயத்தின் மேற்கொண்ட பேரபிமானம் பற்றி மற்றைச் சமய ஆலயங்களையும் சமய நூல்களையும் கல்வி நூல்களையும் எரியூட்டி அழித்தார்கள். அழித்தும் நம் முன்னோர்கள் சைவத்திலும் சமய நூல்களிலும் கல்வி நூல்களிலும் வைத்த அசையாப் பேரன்பினாலே அவற்றை இரகசியத்திற் பாதுகாத்து வந்தனர். அங்ஙனம் அவர்கள் பாதுகாத்து வையாதிருப்பரேல் யாழ்ப்பாணம் சைவமணமும் தமிழ்க்கல்வியும் சிறிதுமில்லாத நாடாயிருக்கும்."

இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்து மதத்தைக் காப்பாற்றுவேன் பேர்வழி என்று சமய நூல்களில் போதிய அறிவில்லாமல் வெறுமனே மாற்று மதத்தினரிடம் சண்டை போட்டுக் கொண்டு அவர்களைக் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டு இருப்பவரால் தம் மதத்தை எள்ளளவும் காப்பாற்ற முடியாது என்பது உறுதியாகிறது.

ஆனால் இக்காலத்தில் நம் சைவ நூல்களைப் பயிலுங்கள் என்று தலைப்பாடாக அடித்துக் கொண்டாலும் யாரும் கேட்க மாட்டார்கள்; அடுத்தவரை வசைபாட மட்டும் பயில்வார்கள்.

இனி யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களை நினைவு கூர்வோம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்கள் கிறித்தவர்களின் மதமாற்றத்தைக் கண்டிக்கும் விதமாக முத்துக்குமார கவிராசர் இயற்றிய ஞானக்கும்மி, யேசுமத பரிகாரம் ஆகிய நூல்களைப் பதிப்பித்தார்.

பெர்சிவல் பாதிரியாருக்குப் பண்டிதராய் இருந்து தமிழ் கற்பித்த காலத்தில் பைபிள் மொழிபெயர்ப்புப் பணியைச் செய்திருந்ததால் அந்நூலில் உள்ள குற்றங்கள் யாவும் கிறித்தவர்களைக் காட்டிலும் ஆறுமுக நாவலருக்கு அத்துப்படி. ஆகவே தொடர்ந்து சிவநிந்தனைகளை எழுதி வந்த கிறித்தவருக்கு நாவலர் அவர்களும் நாகரிகமான முறையில் கண்டனங்களை எழுதியுள்ளார். சைவ தூஷண பரிகாரம், யாழ்ப்பாணச் சமய நிலை, சுப்பிர போதம் போன்ற நூல்கள் அவ்வாறு வெளிவந்தன.

பிறகு கிறித்தவர் தமிழ்நாட்டில் இருந்து ஒருவரை அழைத்து வந்து சைவ நிந்தனை செய்வித்தார்கள். நாவலர் அவர்கள் அந்தக் கிறித்தவரோடு வாதம் செய்யும் பொறுப்பை காசிவாசி செந்திநாதையர் அவர்களிடம் ஒப்படைத்தார்கள். கிறித்தவர்களின் சைவ நிந்தனைக் கட்டுரைகளைக் கண்டித்து எழுதித் தர்க்க ரீதியாகத் தகர்த்தார் செந்திநாதையர் அவர்கள். அதோடு நில்லாமல் பொது மேடையில் சமய வாதம் செய்யவும் ஆயத்தமானார்கள்.

இலங்கை நேசன் பத்திரிகையில் விளம்பரம் செய்து தம்முடன் வாதம் செய்ய வருமாறு கிறித்தவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். தாம் தோற்றால் எவ்விதக் கைம்மாறும் கருதாமல் கிறித்தவ சமய பிரச்சாரம் செய்வதாக அறிவித்தார்கள். செந்திநாதையரோடு வாதம் செய்ய எவரும் முன்வரவில்லை. ஆனால் தம் பத்திரிகை ஒன்றில் யாரோ ஒருவரைக் கொண்டு ஐயரைக் குறைகூறி "இழிமொழித் திமிர தீபிகை" என்று எழுதினார்கள். அதற்கு நாவலர் அவர்கள் இலங்கை நேசன் பத்திரிகையில், காசிவாசி செந்திநாதையர் அவர்களின் படிப்பாற்றலையும், தருக்க ரீதியில் வாதம் செய்யும் திறமையையும் குறிப்பிட்டு எழுதி அவர்களைக் கண்டித்தார்கள்.

(தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் புலமை வாய்ந்த செந்திநாதையர் அவர்கள் காசியில் பத்தாண்டுகள் தங்கி வடமொழிச் சாத்திர நூல்களைக் கற்றுக் காசிவாசி என்று சிறப்படைந்தவர்கள்.)

கிறித்தவர் சிலர் "சிவனும் தேவனா?" என்றொரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டார்கள். அதற்கு காசிவாசி செந்திநாதையர் "சிவனும் தேவனா என்னும் தீய நாவுக்கு ஆப்பு" என்றொரு நூல் செய்து வெளியிட்டார்கள். மேலும் ஒரு கண்டன நூலாக "வஜ்ரடங்கம்" (வைரக் கோடாரி) என்ற நூலை வெளியிட்டார்கள். அதோடு கிறித்தவ நூலாகிய விவிலியத்தில் குறைகளைச் சுட்டி "விவிலிய குற்சிதம்" (குற்சிதம் - அசுத்தம்) என்ற நூலை வெளியிட்டார்கள்.

யாழ்ப்பாணத்து வடகோவைச் சபாபதி நாவலர் அவர்கள், "யேசு மத சங்கற்ப நிராகரணம்" போன்ற நூல்கள் எழுதிக் கிறித்தவரைக் கண்டித்து வந்தார்கள்.

இன்னும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. இங்கே முக்கியமான சிலவற்றை மட்டும் குறிப்பிட்டோம். இவற்றில் சில நூல்கள் இன்று கிடைப்பதும் இல்லை. யாராவது அச்சிட்டு வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

இதுகாறும் சொல்லப்பட்ட கிறித்தவர்களை ஒரு கணக்கில் சேர்க்கலாம். அவர்கள் நேரடியாக மோதினார்கள். மறைமுகமாகக் கிறித்தவத்தைத் திணிக்கும் கும்பல் ஒன்று இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இன்று வரை உள்ளது. அவர்களிடமே மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இந்த மறைமுகத் திணிப்பைத் தொடங்கி வைத்து வழிநடத்துபவர் தெய்வநாயகம் என்பவர் ஆவார்.

இனி அதுபற்றிக் காண்போம்...

அன்புடன்,
"சிவஞானதாசன்"
பரணிதரன்.

படங்கள் :
1. துறைமங்கலம் சிவப்பிரகாசர்

2. ஸ்ரீ காசிவாசி செந்திநாதையர்

3. ஆறுமுக நாவலர்

Wednesday, July 8, 2020

தமிழர் வரலாறு


#தமிழர் வரலாறு


#Sundarji.....
9842741451
https://ourdream-s.blogspot.com


தமிழரின் தொன்மையும் மேன்மையையும் அறிவது தமிழர்க்கு மட்டுமன்று, எல்லா மனிதருக்கும் ஒரு கண்ணோட்டக் கண்ணாடியாக விளங்கும் - உதவும். மொழியும் இனமும் இணை
ந்ததொரு பரிணாமபடப்பிடிப்பு, காலத்திரையில் தமிழனின் கால்பதிப்பு, தமிழன் விழுந்ததும் எழுந்ததும், இணைந்ததும் பிரிந்ததும், வாழ்ந்ததுமான வரலாற்றின் பகுப்புத் தொகுப்பு.

கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.
http://namennangal.blogspot.com

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000

#தமிழர் வரலாறு


Tamilan
நியாண்டெர்தல்
மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000

கடைசி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

#தமிழர் வரலாறு

கி.மு. 35000 - 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

http://namennangal.blogspot.com



Monday, July 6, 2020

இப்போது நோய்களின் பிறப்பிடமான சீனா

பசிபிக் கடல் நிலநடுக்கத்தின் தாய் என அழைக்கபடும், அங்கு அன்றாடம் நிலநடுக்கம் நடக்கும், 
#Sundarji
#Arunagiri

வெகு சில பெரிய நிலநடுக்கமே சுனாமியினை ஏற்படுத்தும்

அப்படி கொரோனா எனும் சுனாமியினை மட்டும் நமக்கு தெரியும், அன்றாடம் சீனாவில் பரவு ஏராளமான நோய் பற்றி நமக்கு தெரியாது

இப்போது நோய்களின் பிறப்பிடமான சீனா இப்பொழுது புதியவகை நோய் எச்சரிக்கையினை விடுகின்றது

அதாவது கண்டதையும் உண்ணும் அச்சமூகம், ஒவ்வொரு மிருகத்தில் இருந்தும் ஒரு நோயினை உருவாக்குவதை வழமையாக கொண்டிருக்கின்றது

விலங்குகளில் உண்ணதக்கன தகாதன என சில வகை உண்டு. 

இந்து தர்மம் மொத்தமாக புலால் மறுத்தல் என மாமிசத்தால் ஏற்படும் நோய்களை விரட்ட வழி சொன்னது.

மேற்காசிய மதங்கள் சிலவற்றுக்கு விலக்கு அளித்தன, அந்த சிலவற்றிலும் சில உடல் பாகங்களை உண்ணாமல் இருக்க சொன்னது

யூத மதம் பன்றி, காலில் குளம்பு இல்லா மிருகம் (முயல், பூனை, நாய்) போன்றவை செதில் இல்லா நீர்வாழ் உயிரினம் (இறால், நண்டு, வஞ்சிரம் மீன் வகையறா) போன்றவை தடை செய்யபட்ட மாமிசம் என்றது

பறவைகளில் கூட பல பறவைகள் உண்ணதகாதவை என அது வரையறுத்தது. 

இதில் உண்மையும் உண்டு, நண்டு வஞ்சிரம் இறால் போன்றவை உஷ்ணத்தை ஏற்படுத்தும் விஷயங்கள், 

சில உடல் உபாதைகளையும் ரத்த சிக்கல்களையும் அவை கொடுக்கும், அவை தவிர்க்கபடத்தான் வேண்டும் 

ஆனால் அதை எல்லாம் சொல்லமுடியாது, யார் கேட்பார்கள்?

(மிருகங்களிலும் பன்றி, பூனை, நாய், நரி போன்றவையின் மாமிசம் மிகபெரும் நோய்களை கொண்டுவரும், அல்லது ரத்தத்தில் சில மாறுதல்களை செய்து மந்த புத்தியினை கொண்டுவரும்)

அனுமதிக்கபட மாமிசமான ஆடு மாடில் கூட இரத்தம் ,குடல் இன்னபிற பாகங்களை உண்ண வேண்டாம் என்றது யூதமதம்.

(அவற்றில் கிருமி இருக்கும் என்பது இன்று ஆய்வில் சொல்லபட்ட உண்மை)

இதையே யூதரில் இருந்து இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் பின்பற்றினர். உண்மையில் கிறிஸ்தவர்களுக்கும் பன்றி, நண்டு, இறால், முயல் எல்லாம் விலக்கபட்டது, ரத்தமும், குடலும் விலக்கபட்டது, உண்ண கூடாது.

ஆனால் அவர்களோ அதெல்லாம் பழைய ஏற்பாடு என நழுவுவார்கள், சரி பத்து கட்டளையும் பத்தில் ஒரு பங்கு காணிக்கையும் பழைய ஏற்பாடுதானே? அதை ஏன் பின்பற்றுகின்றீர்கள் என்றால் "அப்பாலே போ சாத்தானே" என்பார்கள் , இப்போது "அப்பாலே போ சங்கி" என்பார்கள்

ஆம், மாமிசங்களில் பல வகை நோய்பரவும் என்பது அன்றே சொல்லபட்ட உண்மை. கண்ணுக்கு தெரியா கிருமி அதில் கலந்திருக்கும், அதை தொட்டாலோ அருகில் சென்று முகர்ந்தாலோ கண்ணுக்கு தெரியா கிருமி பரவும் என்பதை அறிவுடை சமூகம் அறிந்திருந்தது

இன்னும் வேக வைத்தாலும் சில நுண் உயிர்களை கொல்லமுடியாது என்பது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்த இனம் பல விதிகளை வகுத்தது

இந்துமதம் இதில் மகா அபாரமாக விதிகளை சொன்னது, புலால் மறுத்தல் என சொன்ன மதம் மேற்கொண்டும் ஏகபட்ட விஷயங்களை போதித்தது

ஒருவேளை தின்று தீர்ப்பேன் என்பவனுக்கு கூட மஞ்சள், மிளகு இன்னும் ஏகபட்ட மருத்துவ குணம் கொண்ட பொருட்களோடு சமைத்து உண்ண சொன்னது. அதாவது மாமிசத்தின் கிருமியினை அழித்துவிட்டு உண்ண சொன்னது

உண்ணாதே என்ற இந்துமதம் அவன் உண்டே தீருவேன் என சொன்னபொழுது பல பாதுகாப்பான வழிகளை சொன்னது

ஆம், கிராமங்களில் ஆடுவெட்டும் பொழுது ரத்தம் எனக்கு வேண்டும் என்றது சாமி, உண்மையில் சாமிக்கு ரத்தம் தேவையா என்றால் இல்லை 

ஆனால் எதற்கு சொன்னது என்றால் "ரத்தம் உண்பது ஆபத்து, விஷத்தை எனக்கு கொடுத்துவிட்டு கறியினை நீ உண்டுகொள்"

ஆடு வெட்டி ரத்தம் தெளிக்கும் விஷயம் இதுதான், அதை மக்கள் உண்ண கூடாது என்பதே

முன்பு கொழுப்பையும் சாமிக்கு படைக்கும் வழக்கம் இருந்ததாம், ஆம் கொழுப்பு மனிதர் உண்ண கூடாதது என்பது விஷயம்

இதுபோக இன்னும் ஏராளமான பாதுகாப்பு வழிகளை சொன்னது, கோவிலில் வெட்டபடும் ஆடு பழதற்று இருக்க வேண்டும், நோயுற்றதாக காயம்பட்டதாக  இருக்க கூடாது என அது சொல்லி வைத்தது

ஏன்? ஆட்டில் காயம் இருந்தால் அதில் கிருமி இருக்கும்., ஆட்டுக்கு நோய் இருந்தால் உள்ளே கிருமி இருக்கும் அதை உண்ணும் மக்கள் நோயுற்று வீழ்வர்

இதை தடுக்கவே கோவிலுக்கு வரும் ஆடு தரமானதாக இருக்க வேண்டும் என சொல்லிற்று அந்நாளைய அறிவுடை சமூகம்

இது போக புவிஈர்ப்பு அதிகபடும் சில நாட்களில், கிரகபலன் அதிகபடும் சில நாட்களில் மாமிசத்துக்கு அது தடை விதித்தது

மாமிச படையலுக்கு முன்னும் பின்னும் பல நாட்கள் விரதம் இருக்க சொன்னது அதில் உடலில் சமநிலை வந்தது, கொழுப்பு ஏறாமல் பார்க்க சொன்னது

சீனாவில் அப்படி அல்ல, அவர்களுக்கு மதமுமில்லை கலாச்சாரமுமில்லை புத்த கொள்கைகளை எல்லாம் கடமைக்கு துடைத்து அழகுக்கு வைத்தாயிற்று, 

கம்யூனிசம் வந்தபின் அதுவுமில்லை
இதனால் வவ்வால், தவளை, எலி, பன்றி இன்னும் எதெல்லாம் உயிருடையதோ அதை எல்லாம் உண்டார்கள்

கோழி பண்ணையில் இருந்து பறவை காய்ச்சல் வந்தது,வாத்து பண்ணையில் இருந்து சார்ஸ் வந்தது, 

வவ்வாலில் இருந்து கொரோனா வந்தது, பன்றியில் இருந்து அடிக்கடி ஒரு காய்ச்சல் வரும்

இப்பொழுது மங்கோலியா பக்கம் ஒரு மர்ம காய்ச்சல் பரவுவதாக சீனா அலறுகின்றது, அது எலி மூலம் பரவும் காய்ச்சல், இதற்கு இருவர் பலியாகிவிட்டார்கள்

இந்த பகுதி ரஷ்ய எல்லைபக்கம் வருவதால், அதாவது சீனா கட்டுபடுத்தி சுயாட்சி வழங்கியிருக்கும் 

மங்கோலியா பக்கம் வருவதால் ரஷ்யா கடும் எச்சரிக்கையில் இருக்கின்றது

ஆக கோழி, வாத்து, பன்றி, வவ்வால் வரிசையில் எலியும் சேர்ந்தாயிற்று

இவ்வளவுதான் விஷயமா என்றால் இல்லை, 

அவர்களின் உணவு வரிசையில் நாய், பூனை, பாம்பு, தேள், கரப்பான் பூச்சி, முதலை, குரங்கு, நரி என ஏகபட்ட வரிசை உண்டு என்பதால் இனி ஒவ்வொரு அம்மாவாசைக்கும் ஒரு நோய் பரவலாம்...
சுந்தா் ஜீ

Saturday, July 4, 2020

உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை

*உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை*
#Sundarji 
#Arunagiri 

_திடக்கழிவு,_
_திரவக்கழிவு,_
_வாயுக்கழிவு,_ 
_சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் *மருத்துவக்கழிவு,*_

     இவைகளை வாழ்நாள் முழுவதும், சிரமமில்லாமல் நீக்கும், எளிமையான,
சுவையான முறை.

      *வெந்நீர்*
              +
*எலுமிச்சை சாரு*
             +
       *தேன்*

செய்முறை 

   ஒரு டம்ளர் நீரை குறைந்த தனலில் வைக்கவும் !
கொதிக்க வேண்டியதில்லை !
நாம் தாங்கும் சூடு இருந்தால் போதும் !

ஒரு காலி டம்ளரில் 1/2 எலுமிச்சை, சிறியதாயிருந்தால் ஒரு எலுமிச்சை பிழிந்துக்கொள்ளவும் !

3 ஸ்பூன் தேன் சேர்த்து, வெந்நீர் கலந்து, ஸ்பூனில் சிறிது சிறிதாக, அனுபவித்து, உமிழ் நீருடன் நன்றாக உறவாடி, பின் அருந்தவும் !

   காலையில் முதல் உணவாக, வெறும் வயிற்றில் அருந்தவும் !

எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான 
உடனடி குளுக்கோஸ், தரமான உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும் கிடைக்கும் !

*வாழ்நாள் முழுதும் "கேன்சர்" என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும் !*

   வயது வித்தியாசமின்றி உட்கொள்ளலாம் !

*உணவாகவும்,*
*மருந்தாகவும்,* செயல்புரியும் உன்னத இயற்கை பானம் !

குறிப்பு :......

     சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் அருந்தலாம் !

சிறிது சிறிதாக, உமிழ் நீர் சேர்த்து, சுவைத்து உட்கொள்வதால், தேனில் உள்ள குளுக்கோஸ் தரமான குளுக்கோஸாக மாற்றமடைந்து நன்மை மட்டுமே செய்யும் !

   மேலும், "தேன்" நாக்கிற்கு இனிப்பு, உடல் உறுப்புகளுக்கு கசப்பு !

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாதென்பது வடிகட்டிய "மூட நம்பிக்கை"!

தொடர்ந்து அருந்துவதால் "அல்சர்" எனும் மருத்துவத்தால் தூண்டப்படும் உபாதை, சொல்லாமல் ஓடிப்போகும்.......!

உடலின் மொழி

1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி

2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம்

3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி

4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.

5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்

6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -  வாய் கசப்பு மற்றும் பசியின்மை 

7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி

8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி

9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை

11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்

       எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

      நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.

       நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.

Friday, June 26, 2020

நாகரீகவளர்ச்சி ஆரோக்கியமானதா?

நாகரீகவளர்ச்சி ஆரோக்கியமானதா???

💥#அரிசி_சோறு சாப்பிட்டா #சர்க்கரை ஏறும்னு சொல்லி சப்பாத்தி சாப்பிட சொன்னாங்க.😳

💥அப்புறம் அரிசியும் கோதுமையும் ஒண்ணுதான் , பழம் காய்கறி நிறைய சாப்பிடுங்க ன்னு சொன்னாங்க.

சரின்னு காய்கறி சாப்பிட ஆரம்பிச்சா #பூச்சி_மருந்து தெளிக்கறாங்க #ஆர்கானிக் காய் சாப்பிடுங்கன்னு கூவினாங்க.😳

💥போய் பாத்தா ஆனை விலை ,குதிரை விலை.இருந்தாலும் ஆரோக்கியம் பெரிசுன்னு கேட்ட காச கொடுத்தோம்.😳

💥இப்ப என்னன்னா ஆர்கானிக் எல்லாம் டுபாக்கூர் ,வாடின, வதங்கிய காய் தான் #ஓர்கானிக்ன்னு ஏமாத்துறாங்கன்னு துப்பு சொல்றாங்க.😡

💥#உப்பையும்_சாம்பலையும் #வேப்பங்குச்சியையும் வச்சு பல் விளக்கினோம். 😏

💥இல்ல இல்ல அப்படி பல் விளக்கினா எனாமல் தேஞ்சி போயிடும் பல் கூச்சம் வரும்.அதனால #பேஸ்ட் தான் நல்லதுனு சொன்னாங்க. 😨

💥அதையும் நம்பி பேஸ்ட் யூஸ் பண்ணுனா அவங்க சொன்ன எல்லாமே இப்ப வந்துடுச்சி....!!

கேட்டா உங்க பேஸ்ட்டுல உப்பு இருக்கா? கரி இருக்கா? வேம்பு மற்றும் இலவங்க எண்ணெயின் ஆற்றல் இருக்கானு கேக்குறான்.😡

💥ஏனுங்க பல் கூச்சம் வர வைக்கிறதும் நீங்க தான். அதுக்கு பேஸ்ட் விக்கிறதும் நீங்கதான?😡

💥அதைவிட கொடுமை ஒண்ணு இருக்கு...

#நாட்டு_சக்கரையை/வெல்லத்தை/#கருப்பட்டியை விட #சீனி(அஸ்கா) தான் சுத்தமானது சுவையானதுனு சொன்னீங்க... 😳

💥இப்ப அதுல ஊர்ல இருக்குற எல்லா கெமிக்கலும் இருக்கு. இப்ப அந்த சீனி மாதிரி விஷம் எதுவும் இல்லைனு சொல்லுறீங்க. 😡

💥என்னடா இது அக்கப்போருன்னு வெறும் #பச்ச_தண்ணி குடிக்கலாம்னா , அது ஆபத்து ..R .O டெக்னாலஜி ல சுத்தம் பண்ணின தண்ணி குடிங்கன்னு சொன்னாங்க. ஒரு மெசினை வாங்கி மாட்டினோம் உடனே அதல சத்து இல்ல , எலும்பெல்லாம் உடைஞ்சு போகும்னு இன்னொரு குரூப் பயம் காட்டுது. 😳

💥மறுபடியும் பச்ச தண்ணிய அப்படியே குடிக்க சொல்றீங்க.😏

💥மனசு நொந்து போய் உட்காந்தா வந்தது இன்னொரு குரூப் வந்து

மாடில தோட்டம் போட்டு நாட்டு காய்கறி விதைகளை போடு, பொடக்காலியில செடி நடு, ஆபிஸ்(ஹைபிரிட்) விதைகள் வேண்டாம், மரபு மாற்றப்பட்ட விதைகள் வேண்டாம்...உனக்கு தேவையான காய்களை நீயே வளர்த்து சாப்பிடு,நாட்டு கோழிவளர்த்தா முட்டையும்சிக்கனும் கிடைக்கும... தண்ணிய கொதிக்க வச்சு செப்பு அண்டாவுல ஊத்தி குடி ,ஒரு நோயும் வராதுன்னு சொல்றாங்க.... 

💥அடப்பாவிகளா முப்பது வருசத்துக்கு முன்னாடி இப்படி தானடா நாங்கள் எல்லோரும் வாழ்ந்தோம்..!!!

💥#பட்டணத்துக்கு வா பவிஷா வாழலாம் ன்னு சொல்லி வர வச்சுட்டு , பொய்யான தகவல்களை சொல்லி இப்ப திருப்பி எங்க முன்னொர்கள் சொன்னது எல்லாம் சரி, அவங்க செஞ்சது எல்லாம் சரினு சொல்றீங்களேங்க?????

#வயலும்வரப்பும்...

Thursday, June 25, 2020

நீர்_மேலாண்மை

#நீர்_மேலாண்மை! 

தமிழர் வாழ்வியலில் பின்னிப் பிணைந்த மிகப் பெரிய நீர் சமூகம் ஒன்று இருந்தது. இவர்கள்தான் நீர் மேலாண்மையை நிர்வகித்தவர்கள். நதியில் ஓடும் நீரை ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்த்து, அதை சேமித்து வைத்து, விளைநிலங்கள் வரை கொண்டு சேர்ப்பதுதான் இவர்களது வேலை!

பெருக்கெடுத்து ஓடும் நதியின் நீரை கால்வாய் வழியாக ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்ப்பது சாதாரண காரியமில்லை! 
அதற்கு நிறைய தொழில்நுட்பம் தேவை. அது இவர்களிடம் மண்டிக்கிடந்தது. ஆற்றில் நீர் குறைவாக போகும் போதும் அந்த நீரை ஏரிக்கு கொண்டு வருவது எப்படி? என்ற நுணுக்கம் கற்றிருந்தார்கள்!

ஆற்று நீரை முழுவதுமாக தடுத்து தமது ஏரியை மட்டும் நிரப்பிக் கொள்ளாமல் தமக்கு அடுத்ததடுத்து இருக்கும் நீர்நிலைகளுக்கு ஆற்றுநீரை எப்படி பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்? என்ற கணக்கெல்லாம் தெரிந்து வைத்திருந்தவர்கள் இவர்கள்.  இந்த நீர் சமூகத்தின் அந்த பிரிவினருக்கு நீராணிக்கர்கள் என பெயர்!  ஆற்று நீரை நீர்நிலைகளுக்கு கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பு இவர்களுடையது!

நீரைக் கொண்டு வந்து சேர்த்தால் கடமை முடிந்ததா? அந்த நீரை கட்டிவைத்து காக்க வேண்டுமல்லவா?

அவர்களுக்கு நீர்க்கட்டியார் என்று பெயர். இவர்கள்தான் அந்த ஏரிக்கான முழுப்பொறுப்பு கொண்டவர்கள்!  ஏரியில் மீன்பிடிப்பது, பரிசல் இயக்குவது, நீர் குறைவாக உள்ள காலங்களில் ஏரி நிலத்தில் விவசாயம் செய்வது போன்ற ஏரிக்குள் நடக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் நீர்க்கட்டியார் அனுமதி வேண்டும்!
ஒரு ஏரியின் உயிர் அதன் கரையில் தான் இருக்கிறது. அந்தக் கரை உடைப்பு எடுத்தால் அது தானும் அழிந்து, தன்னை நம்பி வாழ்ந்த மக்களையும் அழித்துவிடும்!

அதனால்தான் ஏரியின் கரை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது அப்படிப்பட்ட கரையை எப்போதும் வலுவாக வைத்திருக்க வேண்டும்!

அந்த வேலையைப் பார்ப்பவர்களுக்கு கரையார் என்று பெயர். இவர்கள்தான் ஏரிகரைக்கு முழுப்பொறுப்பு!

என்னதான் கரையை வலுப்படுத்தினாலும் எதிரிகளால் எப்போதும் ஏரிகளுக்கு ஆபத்து இருந்து கொண்டேதான் இருந்தது. ஒரு ஏரியை உடைத்தால் சுலபமாக ஒரு நாட்டின் பொருளாதரத்தை ஆட்டம் காண வைத்துவிட முடியும்.

ஏரிகளை உடைப்பது மிகப் பெரிய பாவம் என்று சங்ககால பாடல்கள் சொன்னாலும் இதை மதிக்காத ஒன்றிரண்டு மன்னர்கள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள். நேர்மையான முறையில் போரிட்டு வெல்லமுடியாத எதிரிகள் இப்படி நீர்நிலைகளை அழித்தொழிப்பதும் உண்டு!
அந்த ஏரியை பாதுகாக்க நியமிக்கப்பட்டவர்களே குளத்துக்காப்பாளர்கள்!

இவர்கள் ஏரிக்குள் அத்துமீறி நுழைபவர்களையும் விரட்டியடித்தனர்.

ஒரு ஏரி என்பது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இதில் ஆடு மாடுகள் விழுந்து இறந்து போவதும், சில சமயம் மனிதர்கள் இறந்து போவதும் நடப்பதுண்டு!

அப்படி விழுந்து மாண்டவற்றை அப்புறப்படுத்த ஏரியில் தேவையின்றி வளரும் தாவரங்கள், பாசிகள் போன்றவற்றை அழித்து ஏரியை தூய்மைப் படுத்த ஏற்படுத்தப் பட்டவர்கள்தான் குளத்துப்பள்ளர்கள்’. இவர்கள்தான் ஏரியின் சுத்தத்துக்கு பொறுப்பு!
ஏரியில் இருந்து திறந்து விடும் நீரை வாய்க்கால் மூலம் வயல்களின் வாசல் வரை கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு நீர்வெட்டியார் அல்லது நீர்பாச்சி என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது!

இவர்கள் தான் வயல்களுக்கான நீரை கண்காணிப்பவர்கள்!

பாசனத்திற்காகவும் வெள்ளத்தின் போதும் நீரை திறந்து விடுவதற்காக ஏரிக்கரைகளில் மதகு, மடை, குமிழி, தூம்பு போன்ற அமைப்புகள் இருந்தன!

இந்த மடைகளை திறந்து மூடுவதற்கு ஒரு பிரிவினர் இருந்தனர் அவர்களுக்கு மடையர்கள் என்று பெயர்!

ஏரிகளின் கரைதான் ஒரு ஏரியின் உயிர். அக்கரைகளை எப்போதும் வலுவாக அமைக்கவேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருந்தவர்கள் தமிழர்கள். அக்கரைகளை அமைப்பதிலும் தமிழர்கள் கை தேர்ந்தவர்களாக இருந்தார்கள்.
உலகம் முழுவதுமே ஏரிகளை அமைக்கும்போது முதலில் களிமண்ணால் ஆனா உட்புறச்சுவர் ஒன்றை அமைப்பார்கள்
இதுதான் ஏரி நீரை கசியவிடாமல் தடுக்கும்.

இந்த சுவரை அமைத்தப் பின் அதன்மீது மற்ற மண்ணை இரண்டு பக்கமும் சேர்த்து கரையை மேலும் வலுவாக்குவார்கள். களிமண் சுவர் இல்லாமல் எரிக்கரைகளை அமைக்க முடியாது என்பது மேலை நாட்டினரின் கணிப்பு!

ஆனால், தமிழர்கள் வடிவமைத்த ஏரிக்கரைகள் பலவற்றில் களிமண் பயன்படுத்தப்படவில்லை. அருகில் கிடைக்கும் மண்ணைக் கொண்டே ஏரிக்கரையை அமைத்திருக்கிறார்கள்.
மண்ணோடு மண்ணை இறுக்கும் பசைப் போன்ற ஒன்றை பயன்படுத்தி இந்த சுவர்களை அமைத்திருக்கிறார்கள். அதில் ஒரு சொட்டு நீர் கசிவதில்லை!
சமீபத்தில் வீராணம் ஏரியில் புதிதாக ஒரு மதகை அமைப்பதற்காக ஏரிக்கரையை கொஞ்சம் உடைக்க வேண்டியிருந்தது. இன்றைய நவீன இயந்திரங்களை கொண்டு கூட அந்தக் கரையை உடைக்க முடியவில்லை. பாறைப் போன்று கரை இறுகியிருந்தது!
களிமண் இல்லாமல் கரை அமைக்க எப்படி முடியும்? என்று அகலத் திறந்த கண்களை வெளிநாட்டினர் இன்னமும் மூடவில்லை!

இன்னுமொரு வியக்க வைக்கும் தொழில்நுட்பமும் நம்மிடம் இருந்தது. அது ஏரியின் தரைப் பகுதியில் சேரும் சகதியை வெளியேற்றுவது!

ஏரிக்கு வரும் நீர் வெறும் நீரை மட்டும் கொண்டு வருவதில்லை. கூடவே வண்டல் மண்ணையும் சேறு சகதியையும் சேர்த்தே கொண்டு வந்துவிடும்.
இவைகள் அதிகம் சேர்ந்தால் ஏரி தூர்ந்து போய்விடும். மதகுகள் அடைத்துக் கொள்ளும். அதனால் இவற்றை ஏரியில் சேரவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள்!
இந்த வண்டல் மண்ணையும் சேறையும் ஏரியில் இருந்து வெளியேற்ற ஒரு தொழில்நுட்பத்தை வைத்திருந்தார்கள் நம்மவர்கள். அதற்குப் பெயர் குமிழி!

இதுவும் ஏரி நீரை வெளியேற்றும் ஒரு அமைப்புதான். இது ஏரியின் தரைத் தளத்தில் மதகுகளில் இருந்து 300 அடி தொலைவில் ஏரியின் உட்புறமாக அமைத்திருப்பார்கள்!

ஒரு மதகுக்கு ஒன்று என்ற அடிப்படையில் குமிழி இருக்கும்.

இந்த குமிழி பெரிய தொட்டிப் போன்ற அமைப்பில் இயங்கும். பெரிய நகரங்களில் சாலைகளைக் கடக்க நாம் பயன்படுத்தும் சுரங்கப்பாதை போல் இருக்கும். இதன் நுழைவு வாயில் ஏரிக்குள்ளும் வெளிவாயில் ஏரிக்கு வெளியே பாசனக் கால்வாயிலும் இருக்கும்!

ஏரியில் அதிகமான வண்டலும் சகதியும் சேரும்போது இந்த குமிழியை திறந்து விடுவார்கள்.

சேறோடித்துளை மூலம் தரையில் இருக்கும் வண்டல் மண்ணையும் சேற்றையும் இந்த முறையில் சுத்தமாக வெளியேற்ற முடியும். அது வெளியேறி ஏரிக்கு வெளியே உள்ள பாசனக் கால்வாயில் சேர்ந்து விடும்!

வண்டல் மண் பயிர்களுக்கு நல்ல உரம் என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு. இதனால் ஏரியின் தளத்தில் சகதி சேருவது வெளியேற்றப்பட்டது. இது தமிழர்கள் பயன்படுத்திய அற்புதமான தூர்வாரும் தொழிநுட்பம்!
ஆனால், பின்னாளில் ஆட்சிக்கு வந்த ஆங்கிலயர்கள் அதன் அருமை தெரியாமல் அவர்களது ஆட்சிகாலத்தில் குமிழி தேவையற்ற ஒன்று என்று நிறைய ஏரிகளில் இருந்து நீக்கிவிட்டார்கள்.
அதன்பின் ஏரியில் வண்டல் மண்ணும் சேறும் சேரத்தொடங்கின. மதகுகள் சகதியால் அடைத்துக் கொள்ளத் தொடங்கின!
ஏரிகளின் மரணத்திற்கு முதல் அச்சாரம் இது. இதோடு ஆங்கிலேயர்களின் நீர்நிலையை பாழ்படுத்தும் கடமை முடிந்துவிட வில்லை. இன்னும் நிறைய இருக்கிறது.

ஏரிகளின் கரையில் காலாற நடந்து போனால் மடத்து கருப்பன், மட இருளன், மட முனியன் என்ற காவல் தெய்வங்களை பார்க்கலாம்.

இந்த தெய்வங்களை எப்போதும் ஏரியின் மடைகளுக்கு அருகிலேயே அமைத்திருப்பார்கள். அந்த தெய்வங்களின் பூர்விகத்தைக் கேட்டால் அது அந்த ஏரிக்காக உயிர்விட்ட ஒருவரின் நடுகல்லாக இருக்கும். அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்!
விளைவிக்கப்பட்டிருக்கும் நிலங்களுக்கு ஏரியில் இருந்து எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்ற அளவை துல்லியமாக வைத்திருந்தார்கள் தமிழர்கள்!

அதற்கேற்ப மதகுகளை ஏரிகளில் அமைத்திருந்தனர். அவர்களின் நீர் மேலாண்மை வியக்கவைக்கிறது!

ஏரிகளை அவர்கள் ஏனோதானோவென்று உருவாக்கிவிடவில்லை. பாசனம் பெரும் விளைநிலங்களின் பரப்பளவு, மண்ணின் வகை, நிலத்தின் அமைப்பு, இருப்பிடம் இவற்றைக் கொண்டு ஏரியின் கொள்ளளவை நிர்ணயித்தார்கள். அதற்கு ஏற்ப மதகுகளை அமைப்பார்கள்!
இந்த மதகுகளில் இருந்து எவ்வளவு நீர் வெளிவரும், எல்லா மடைகளையும் திறந்தால் எவ்வளவு நீரை வெளியேற்ற முடியும் என்ற எல்லா நுட்பங்களையும் திட்டமிட்டுதான் ஒரு ஏரியை வடிவைப்பார்கள்!
இப்படி துல்லியமாக அமைக்கப்பட்ட ஏரியிலிருந்து மதகுகள் வழியாக நீரை வயல்களுக்கு அனுப்பும் வேலையை மடையர்கள் பிரிவினர் பார்த்து வந்தார்கள். ஒரு நாழிகை நேரம் மதகுகளை குறிப்பிட்ட அளவு திறந்து வைத்திருந்தால் நீர் இவ்வளவு ஆயக்கட்டுக்கு பாய்ந்திருக்கும் என கணக்கீடுகளை தெரிந்திருந்தார்கள்!
ஏரியிலிருந்து பாசனத்திற்காக வாய்க்கால்கள் மூலம் வயல்கள் வரை கொண்டு வந்து சேர்க்கும் வேலையை ‘நீர் பாச்சி’ என்பவர்கள் செய்து வந்தனர் என்பதை முன்னரே பார்த்திருந்தோம்!

இவர்களுக்கடுத்து ஒவ்வொரு வயல்களுக்கும் தேவையான நீரை பாய்ச்சுவதற்காக குமுழிப்பள்ளர்கள் இருந்தார்கள்!

இவர்கள் இப்படி பாயும் நீரை அளவிடுவதற்காக ‘முறைப் பானை’ என்ற ஒன்றை வைத்திருந்தார்கள்!

இந்த முறைப் பானையை செம்பு அல்லது தாமிரம் கொண்டு செய்திருப்பார்கள். இது 10 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் அளவில் இருக்கும். இந்தப் பானையின் அடிப்பாகத்தில் ஒரு சிறு துளையிடுவார்கள்.

இப்படி துளையிடும் ஊசி எந்த அளவு இருக்க வேண்டும் என்பது கூட சங்க கால பாடல்களில் துல்லியமாக சொல்லப்பட்டிருக்கிறது.நீர் பாய்ச்ச இருக்கும் வயல்களுக்கு அருகே மூன்று கற்களைப் பரப்பி அதன் மீது இந்த பானையை வைத்து விடுவார்கள். பானை முழுவதும் நீர் நிரப்பிவிடுவார்கள்!
அதே நேரத்தில் அந்த வயலுக்கான நீரையும் வாய்க்காலில் இருந்து பாய்ச்சத் தொடங்குவார்கள். துளையிலிருந்து நீர் வழிந்து கொண்டே இருக்கும். பானை நீர் முழுவதும் வடிந்து விட்டால் ஒரு ஏக்கர் நெல் வயலுக்கும் நீர் பாய்ந்து விட்டதாக அர்த்தம். எப்படியொரு நுட்பம் பாருங்கள்…!
நீரைப்பகிர்ந்து எல்லா வயல்களுக்கும் சமமாக கொடுப்பதில் குமுழிப்பள்ளர்களை அடித்துக் கொள்ள முடியாது!

நீரை வெளியேற்றுவதில் மதகுகளுக்கும் மடைக்கும் வித்தியாசம் இருக்கிறது. மதகுகள் வழியாக நாம் நீரை வேண்டிய அளவு வெளியேற்ற முடியும். நீரைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் மடை என்பது அப்படியல்ல அதை திறந்துவிட்டால் முழு அளவில் நீர் பீறிட்டுக்கொண்டு வெளியேறும். அதைக் கட்டுப்படுத்த முடியாது!

அதனால் தான் மடை ஏரியின் உயிர்நாடி என்றார்கள். இந்த மடைகளை பராமரிப்பவர்களுக்கு மடையர்கள் என்று பெயர் இருந்தது!
மழைநீர் பெருக்கெடுத்து ஏரி முழுவதும் நீர் நிறைந்திருக்கும் போது கரைகள் உடையக்கூடிய அபாயம் இருப்பதால், ஏரி நீரை முழுவதுமாக வெளியேற்ற வேண்டிய நிலை வரும். மதகுகள் வழியாக ஆர்ப்பரிக்கும் அவ்வளவு நீரையும் வெளியேற்ற முடியாது. அப்போது மடையை திறந்து விடவேண்டும்.
மடையை திறப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. உயிரை பணையம் வைக்கும் செயல் அது.

இந்த இக்கட்டான நிலையில் தலைமைக் கிராமம் ஏரியின் நிலைமைப் பற்றி முடிவெடுக்கும்!

ஒரு ஏரி கிட்டத்தட்ட 50 கிராமங்களுக்கு மேல் நீர்பாசனத்தை வழங்கும்!

வெள்ளம் வரும் நேரங்களில் ஏரி உடையக்கூடிய வாய்ப்பிருப்பதால். முதலில் இந்த கிராமங்களில் தண்டோராமூலம் அபாய எச்சரிக்கை கொடுத்து மக்கள் அனைவரும் கிராமங்களை விட்டு வெளியேற்றிவிடுவார்கள்!

அப்போது ஒரேயொரு மனிதருக்கு மட்டும் மாலை மரியாதையோடு பிரிவு உபச்சாரம் நடைபெறும்.

அவர்தான் அந்த ஏரியின் மடை பராமரிப்பாளர். மடையன்என்று அழைக்கப்படுபவர்!

தேசத்துக்காக உயிர்த் தியாகம் செய்யும் ஒரு ராணுவ வீரனின் தியாகத்துக்கு சற்றும் குறைந்ததல்ல இவர் செய்யும் தியாகமும்!

மனைவியும் பிள்ளைகளும் திலகமிட்டு வழியனுப்புவார்கள். அது இறுதிப் பயணம் போன்றதுதான்!

ஒரு ஈ, காக்காய் கூட இல்லாத அந்த வெற்று ஊரில் இந்த ஒரு மனிதர் மட்டும் தன்னந்தனியாக ஏரியை நோக்கிப் போவார்!

ஏரியில் தழும்பி நிற்கும் நீரைப் பார்க்கும்போதே மூச்சு முட்டும். அப்படிப்பட்ட அந்த ஏரிக்குள் மூழ்கி அடி ஆழத்தில் இருக்கும் மடையை திறப்பது சாதாரண காரியமல்ல!

ஏரியின் பிரமாண்டம் எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்!

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி, சென்னையை அன்று திணறடித்த செம்பரம்பாக்கம் ஏரி 24 அடி உயரம்.

இவ்வளவு உயரம் கொண்ட ஏரியின் அடி ஆழத்திற்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் ஆளாக செல்வது எத்தனை சிரமம்!

எவ்வளவு மூச்சை தம் கட்ட வேண்டும். அதோடு சென்று மடையை திறக்கும்போது நீரின் அழுத்தத்திலிருந்து மீண்டு வருவது மறுஜென்மம் எடுப்பது போல்!

மடையை திறக்கும்போதே ஆக்ரோஷத்தோடு வெளியேறும் நீர் மடை திறப்பவரை கொன்று விடுவதும் உண்டு!

இப்படி மடையை திறக்கப் போனவர்களில் உயிரோடு பிழைத்து வந்தவர்களும் உண்டு. உயிரை தியாகம் செய்தவர்களும் உண்டு.

உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு கிராமத்தின் சார்பாக நிலம் கொடுக்கப்படும். அவருக்காக நடுகல் நட்டு வைப்பார்கள்!

50, 60 கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காத்ததால் அவர் அந்த கிராம மக்களின் காவல் தெய்வமாக மாறுவார்!

மடையர் என்றும் மகத்தானவர்களே. அவர்களை அப்படி அழைத்ததே தவறு! 

“ஏரிகள் – குளங்கள் குடி மராமத்து”

ஒரு ஏரி எப்படி அமைய வேண்டும். ஏரியை வடிவமைக்கும் போது ஒரு மன்னன் என்னென்ன அம்சங்களை பார்க்க வேண்டும் என்ற விவரங்களை எல்லாம் சங்க கால பாடல்கள் ஏராளமாய் சொல்கின்றன!எட்டாம் நாள் பிறை வடிவில் ஏரியை அமைத்தால் ஏரியின் கரை நீளம் குறைவாக அமைக்கலாம்!
அதே வேளையில் இந்த வடிவமைப்பில் நீரின் கொள்ளளவும் அதிகம் என்று கூறுகிறார் கபிலர். எத்தகைய ஞானம் அன்றைய புலவர்களுக்கு இருந்திருக்கிறது!

ஒரு அரசன் ஏரியை அமைக்கும் போது அதில் ஐந்து விதமான அம்சங்கள் இருக்கும்படி அமைக்க வேண்டும்!

அப்படி ஒரு நீர் நிலையை அரசன் உருவாக்கினால் அவனுக்கு சொர்க்கத்தில் ஓர் இடம் காத்திருக்கும் என்கின்றன பாடல்களும், கல்வெட்டும்!

அந்த ஐந்து அம்சங்களை பொதுவாக நமது எல்லா ஏரிகளிலும் குளங்களிலும் பார்க்க முடியும். அப்படிதான் அதனை அமைத்திருக்கிறார்கள்!

சொர்க்கத்தில் ஓர் இடம் பிடிப்பதில் அன்றைய மன்னர்கள் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள்!

‘குளம் வெட்டுதல்’ என்பது முதல் அம்சம். அதில் ‘கலிங்கு அமைத்தல்’ 2வது அம்சம், எரிக்கான நீரை கொண்டு வரும் ‘வரத்துக்கால்’, மதகுகளின் அமைப்பு, அதிகமான நீரை வெளியேற்றும் ‘வாய்க்கால்’ அமைப்பு போன்ற அனைத்தும் 3வது அம்சம். ‘ஆயக்கட்டு’ பகுதிகளை உருவாக்குதல் 4வது அம்சம். ஊருக்கான ‘பொதுக்கிணறு’ அமைத்தல் 5வது அம்சம்.

பழமையான கிராமங்களில் இந்த எல்லா அம்சங்களுமே இருக்கும். இதில் பொதுக்கிணறு எதற்கென்றால் எப்படிப்பட்ட ஏரிகளும் கடுமையான வறட்சி காலத்தில் வற்றிப் போய்விடும்!

ஏரியில் குறைவாக இருக்கும் நீரை மதகுகள் வழியாக வயல்களுக்கு பாய்ச்சினால் நிறைய நீர் இழப்பு ஏற்படும். அத்தகைய காலங்களில் கிணற்றில் இருந்து நீர் எடுத்து பயன்படுத்துவது புத்திசாலித்தனம். அதைதான் அவர்களும் செய்தார்கள்!
மேலும் கால்நடைகளுக்கும் சலவை தொழில் செய்பவர்களுக்கும் வருடம் முழுவதும் அதிக நீர் வேண்டும்!

இதற்காகவே ஏரியின் மையப்பகுதியில் ஆழமாக எப்போதும் தண்ணீர் இருப்பது போன்ற அமைப்பையும் உருவாக்கியிருந்தார்கள்!

சலவைத் தொழிலாளிகள் எப்போதும் அவர்கள் பணி நிமித்தமாக எரிகளிலேயே தொடர்ந்து இருப்பதால் ஏரியை காவல் காக்கும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படைத்திருந்தனர்!

நீர் சமூகத்தில் எந்தெந்த பிரிவுக்கு என்னென்ன வேலை பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை அவர்கள் செய்தே ஆக வேண்டும்!

அதில் தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை இருந்தது.
அதானால் நீர் மேலாண்மையும் நீர் பகிர்தலும் எந்தவித தொய்வும் இல்லாமல் வெகு சிறப்பாக நடந்தது!

சரி, பயிர்களுக்கு, கால்நடைகளுக்கு, ஏன் சலவைக்குக் கூட நீர் கொடுத்தாகிவிட்டது!

அப்படியென்றால் ஊர்களில் கிராமங்களில் பெரிய நகரங்களில் வாழும் மக்களுக்கு நீர்..?

விட்டுவிடுவார்களா..!?

வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடிய மாந்தர்கள் அல்லவா அவர்கள் மனிதர்களை வாட விட்டுவிடுவார்களா..?!

பிரமாண்டமான கோட்டைகள், அரண்மனைகள் கட்டும் போது கூடவே மழைநீரை சேமித்து வைக்கும் அகழியையும் அமைத்தார்கள்!

இதை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் அரணாகவும் மாற்றிக் கொண்டார்கள்!

இதைப்போலவே பெரிய கோயில்களை கட்டும்போது அதில் விழும் மழைநீரை கோயிலுக்கான தெப்பக்குளங்களில் சேரும் விதமாக அமைத்தார்கள்!

இதுபோக குடிநீருக்கென்று குளங்கள், மற்ற நீர் தேவைகளுக்கு தனிக் குளங்கள் என்று ஊருக்குள்ளும் நிறைய நீர் சேமிப்பு மையங்களை அமைத்தார்கள்!

இதன் மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக் கொண்டார்கள்.

கோடையில் இந்தக் குளங்களும் சில சமயங்களில் வற்றிப் போகும். வருடம் முழுவதும் நிலத்தடி நீர் நல்ல நிலையில் சேமிக்கப்படுவதால் சில நாட்களுக்கு மட்டும் கிணற்று நீரை பயன்படுத்திக் கொள்வார்கள்!

இந்த குளங்களை எல்லாம் பராமரிக்கும் பொறுப்பு மக்களிடமே விடப்பட்டது. இதற்கு குடிமராமத்து எனப் பெயர். அதாவது குடிமக்கள் தாங்களாகவே குளங்களை பாதுகாத்து பரமாரித்துக்கொள்ளும் முறை.
வாரத்தில் ஒருநாள் வீட்டுக்கொருவர் என்ற கணக்கில் ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து குளங்களை சுத்தப்படுத்துவார்கள்!

இதனால் குளங்கள் தூய்மையாகவும் உயிர்ப்போடும் இருந்தன…!

இப்படி ஊர் மக்களையும் உணவளிக்கும் விவசாயத்தையும் நீர் மேலாண்மையால் கட்டிப்போட்ட தமிழர்கள் எப்படி தமிழ்நாட்டை வறட்சி காடாக மாற்றினார்கள்..?

பிரமிக்கவைக்கும் சங்கிலித் தொடர் ஏரிகள்!

“கடைசி ஏரிதான் முதலில் நிறையும். முதல் ஏரி கடைசியாக நிறையும்.”

அப்படியொரு தொழில்நுட்பத்தில் அமைந்ததுதான் சங்கிலித் தொடர் ஏரிகள்.

ஒரு மொழியின் செழுமை என்பது அதன் சொற்களில் இருக்கிறது. தமிழ் சொற்களுக்கு பஞ்சம் இல்லாத ஒரு மொழி!

மனிதன் உருவாக்கிய நீர்நிலை கட்டுமானங்களுக்கு அவன் ஏகப்பட்ட பெயர் வைத்திருக்கிறான்!

இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி, மலங்கன், மடு, ஓடை, வாவி, சலந்தரம், வட்டம், தடாகம், நளினி, பொய்கை, குட்டம், கிடங்கு, குளம், கண்மாய்…

அப்பாடி..! சொல்லிமுடிக்கவே மூச்சு முட்டுகிறது…!

இத்தனை பெயர்களையும் அதன் பயன்பாட்டைப் பொறுத்து அந்தந்த நீர்நிலைகளுக்கு வைத்திருந்தார்கள்!

இயற்கையான நீர் ஊற்றுகள் உள்ள இடங்களில் அமைந்த நீர்நிலைகளுக்கு பொய்கை, ஊற்று என்று பெயர்.

தானாகவே நீர் கசிந்து சிறிய அளவில் தோன்றும் நீர் நிலைகளுக்கு சுனை, கயம் என்று பெயர்!

ஊற்றுகள் எதுவும் இல்லாமல் மழைநீர் மட்டும் தேங்கி இருக்கும் சிறு நீர் தேக்கத்திற்கு குட்டை என்று பெயர்!

இன்றைக்கு இந்த சொல் சாக்கடை நீர் தேங்கும் இடத்தை குறிப்பதாக மாறிவிட்டது!

மக்கள் குளிப்பதற்காக உருவாக்கப்பட்ட நீர் நிலைகளுக்கு குளம் என்று பெயர்!

அழுக்கு போகக்குளிப்பது இன்றைய வழக்கம். ஆனால் அன்றைய குளித்தலின் அர்த்தம் வேறு!

பகல் முழுதும் வயலில்வெயிலில் வேலைசெய்து வெப்பமான உடலை குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நடைமுறையே குளிர்த்தல்.

இதுவே காலப்போக்கில் குளி(ர்)த்தல் என்று மாறியது.