Friday, February 28, 2020

இன்று – கம்பூசியா நேற்று – கம்போடியா


காம்போஜம்…!!!
#இன்று – #கம்பூசியா
 #நேற்று – #கம்போடியா
 அதற்கு முன்னால் – காம்போஜம்..!
– 9ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு வரை
 காம்போஜம் என்று பெயர் பெற்றிருந்த இந்த கம்போடியா
 நாட்டை ஆண்டு கொண்டிருந்தவர்கள் –
ஜயவர்மன்,
 #இந்திரவர்மன்,
 #யசோவர்மன்,
 #சூர்யவர்மன்,
 #ஜயவர்மன் -2,
 #ஜயவர்மன் -3,
 #ஜயவர்மன் -4,
 #ஜயவர்மன் -5,
 ஜயவர்மன் -6, மற்றும்
 #ஜயவர்மன் -7
என்று அத்தனை பேரும் தமிழ் மன்னர்கள்.
இன்றைய கம்போடியாவில் இன்னமும் உள்ள இந்த #மன்னர்கள் காலத்திய தமிழ் கல்வெட்டு ஒன்று இங்கு காண்போம்.
#உலகம் தட்டையா – உருண்டையா ?
– என்றே தெரியாமல் மேற்கத்திய நாடுகள்
 விழித்துக் கொண்டிருந்த வேளையில்
 #தமிழன் கிழக்கே வெற்றிகளைக்
 குவித்துக்கொண்டிருந்தான் !
#தமிழ் நாடு எங்கே – கம்போடியா எங்கே ?
 கடல் வழியே போனால் கிட்டத்தட்ட 3000 கிலோமீட்டர்கள் !
எத்தகைய வலிவும், துணிவும், அறிவும், வீரமும் இருந்தால் இவ்வளவு தூரம் படையெடுத்துச்சென்று வெற்றி பெற்று அரசாட்சியை நிலை நிறுத்த முடியும் ?
#பல்லவ, #சோழ மன்னர்கள் காம்போஜம் வரை சென்று தங்கள் வலிமையை நிரூபித்த பிறகு தங்கள் படைத்தளபதிகளையே அங்கே அரசராக நியமித்து விட்டு வந்தார்கள்.
அவர்களின் வழி வந்தவர்கள் தான் மேற்கூறிய காம்போஜத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள் !
ஒன்பதாவது நூற்றாண்டில் தமிழ் மன்னன் ஜெயவர்மனுடன் துவங்கிய இந்த வம்சம் காம்போஜத்தை அந்த நாட்களில் தெற்காசிய நாடுகளில் மிக வலுவானதொரு ஆட்சியாகஉருவாக்கியது. தொடர்ந்து சுமார் 500-600 ஆண்டுகளுக்கு, தமிழ் மன்னர்களின் ஆட்சியில் இருந்த காம்போஜம், கொஞ்சம் கொஞ்சமாகத்
 தாய்த் தமிழ்நாட்டுடன் இருந்த தொடர்பை இழந்தது. படையெடுப்பின்போது போய்க்குடியேறிய தமிழர்களைத்தவிர பிற்காலங்களில் அதிகம் பேர் தமிழ் நாட்டிலிருந்து இங்கு குடிபெயரவில்ல என்பதே இதன் முக்கிய காரணம்.
சுற்றிலுமிருந்த #லாவோஸ், #வியட்னாம், #தாய்லாந்து ஆகிய நாடுகளின் ஆதிக்கத்தில் சிறிது சிறிதாக தமிழ் மணத்தையும், இந்து மதப் பழக்க வழக்கங்களையும்
 இழந்தது. சுற்றிலுமிருந்த நாடுகள் அனைத்திலும் பரவிய பௌத்த கலாச்சாரம் இங்கும் பரவியது.
15வது நூற்றாண்டுக்குப் பிறகு, சுமார் 500 ஆண்டுகளுக்கு இங்கு ஒரு இருண்ட நிலையே நிலவியது. காம்போஜம் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு பல படையெடுப்புகள் – காலனி நிலை..!
1993க்குப் பிறகு தான் காம்போஜம் என்கிற #கம்போடியா என்கிற இன்றைய கம்பூச்சியா நிலைத்து நிற்க ஆரம்பித்தது. இன்றைய கம்பூச்சியாவில் குறிப்பிடத்தக்க அளவில் #தமிழர்கள் இல்லையென்றாலும்...
பண்டைத் தமிழர்களின் #பண்பாடு, #கலாச்சாரம், தமிழ்ப் பெயர்கள் ஆகியவை இந்த மக்களின் ரத்தத்தில் கலந்தே வந்திருக்கிறது. #‘ராமாயணம்’ இவர்களுக்கே உரிய
 முறையில் உருமாற்றம் பெற்று இப்போதும் நடன, நாடக உருவத்தில் உலா வருகிறது.
உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான #யாத்ரிகர்கள் இன்று வந்து ஆச்சரியத்தோடு காணும் ‘அங்கோர் வாட்’ கோயில்கள்தான் தமிழர்கள் இங்கு வாழ்ந்த வளமான வாழ்க்கைக்கும், கலைச்செழுமை மிக்க தமிழ்ப்பண்பாட்டிற்குமான எஞ்சியிருக்கும் சாட்சி.
இங்கிருந்த மக்கள் பருவக்காற்றையும், மழையையும் மட்டுமே நம்பி விவசாயம் செய்து வந்த நிலையில், முதல் முதலாக கிழக்கு பராய் என்கிற மிகப்பெரிய
 நீர்த்தேக்கத்தை உருவாக்கி பஞ்சமில்லாத நாட்டை உருவாக்கினான் தமிழ் மன்னன் யசோவர்மன். அவன் 10 நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கிய நீர்த்தேக்கம் இன்றும் உள்ளது.
உலகப்புகழ் வாய்ந்த ”அங்கோர் வாட்” கோவில்களின் மனதை மயக்கும் காட்சிகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
துவக்கத்தில் –விஷ்ணு, இந்திரன், சிவன் ஆகியோர்களுக்கான கோவில்களையும், பிற்காலத்தில் புத்தமதத்தின் செல்வாக்கு தழைத்தோங்கிய கடைசி தமிழ் மன்னன் ஜயவர்மன்-7 காலத்தில், போதிசத்வரின் 216 முகங்கள் அடங்கிய புத்தருக்கான திருக்கோயில் ஒன்றும் கட்டப்பட்டன !
#வாழ்க தமிழ்...!



Sunday, January 26, 2020

Ourdreams


                                                          Our dreams




Monday, January 20, 2020

தேனும்.. லவங்கப்பட்டையும்.உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான்!

                                #தேனும் #லவங்கப்பட்டையும்.



உலகத்தில் கெட்டு போகாத ஒரே  உணவு #தேன் தான்! அதிகபட்ச மாற்றம் எதுவென்றால்,  தேன் உறைந்து கிறிஸ்டல்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும். இனி தேனும் லவங்கப் பட்டையும் குணப்படுத்தும் நோய்கள் பற்றி பார்ப்போம். 
#இதய நோயால் மாரடைப்பு வராமல் தடுக்க.இதயத்தின் ரத்தக் குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, போதிய ரத்தம் இல்லாமல்  இருதயம் செயல் இழந்து மாரடைப்பு ஏற்படுகிறது இதற்கு.அற்புத மருந்து இதோ! தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியைதேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். இதய நோய் உங்களை என்றுமே அணுகாது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு
வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது. இதயநோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு 
பலவீனமாக இருக்கும்.அவர்களுக்கு தேனும் லவங்கப்பட்டை பொடியும்  ஒரு வரப்பிரசாதம். ஒரே மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.
அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.மேலும் 
#ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம். #மூட்டுவலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்கள்,தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியைக் கலந்து குடித்துவாருங்கள்.ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.
‘எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் நிச்சயம்  குணமாகும். 
#சிறுநீர்க்குழாய் கிருமிகள் நீங்க. ..
2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில் 
கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும்.#கொலஸ்ரால் என்னும் கொழுப்பு சத்து 2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன்.
2 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி லவங்கப் பட்டை பொடியையும் 16 அவுன்ஸ் தண்ணீருடன் கலந்து  குடியுங்கள். இரண்டு மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும். ஒரு நாளில் மூன்று முறை இரண்டு கரண்டி தேன், ஒரு கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும்.சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.#ஜலதோஷம் நீங்க... 
சூடான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன் 1/4 தேக்கரண்டி லவங்கப் பொடியை குழைத்து  மூன்று நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடிப் போகும்.#அல்சர் உள்ளவர்கள்  இரு தேக்கரண்டி தேன்,  ஒரு தேக்கரண்டி லவங்கப்பொடி கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.
தேனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட்டால் #வாயுத்தொல்லை தீரும்!
#நோய் எதிர்ப்பு சக்தி வளரும். 
தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. இதை நாம் தொடர்ந்து லவங்கப் பொடியுடன் கலந்துஉண்டு வந்தால் 
வைரஸ் ஜுரம், ஃபுளு போன்ற வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கும.#அஜீரணம்...சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து  சிரமப்படுவார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன் இரண்டு தேக்கரண்டி தேனில்
சிறிது லவங்க பொடியை தூவி சாப்பிட வேண்டும். பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல் 
ஜீரணமாகும்.
#நீண்ட ஆயுளுக்கு 3 கப் மிதமான சூடில் உள்ள நீரில் 4 தேக்கரண்டி தேன்,  1 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியை கலந்து வைத்துகொண்டு
ஒரு நாளில் 3 அல்லது 2 முறையாக பருக இளமை ததும்பும்.வயதான தோற்றம் மறைந்தே போகும்.100 வயதில் 20 வயதிற்கான சுறுசுறுப்பைக் காணலாம்.  சருமம் மிருதுவாக இருக்கும். ஆயுள் நீடிக்கும். 1 தேக்கரண்டி தேனை எடுத்து மெதுவாக உண்ணுங்கள். 
3 மணிக்கு ஒரு தரம் இப்படி 
செய்து வாருங்கள். #தொண்டையில் கிச்கிச் போய்விடும்.
#முகப்பருக்கள் அடியோடு மறைய!
3 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கப் பொடியை எடுத்து இரவு படுக்கும் போது இதை குழைத்து பருக்களின் மேல் தடவி காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்புங்கள். தொடர்ந்து இரு வாரம் இதை செய்து வர பருக்களை வேரோடு இது அழித்துவிடும்.
#சொறி, படை போன்ற பல சரும நோய்களை குணப்படுத்த தேன் லவங்க பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு குழைத்து தடவி வர இந்த சரும நோய்கள் குணமாகும்.
#எடை குறைய வேண்டுமா?
தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்கப் பொடியையும் கலந்து குடிக்கவும். அதே போல இரவில் படுக்கப்போகும் முன்னர்தேனையும், லவங்கப்பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல் எடை குறைவது உறுதி.
இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும். அதாவது நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும். ‘வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்று நோய்களை குணப்படுத்தும்.ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து, 
தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில் இந்த புற்று நோய் ஆதிக்கம் குறைந்துவிடும்.
#அயர்ச்சி

தேன்


உடம்பில் சக்தியை அதிகரிக்க தேனை விடச் சிறந்தது இல்லை.  இதில் உள்ள சர்க்கரை ஆபத்தானது 
இல்லை. உடலுக்கு உதவக் 
கூடியது. வயதானவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள், சக்தி குறைவதால் தினமும் காலை ஒரு கப் நீரில், ஒரு தேக்கரண்டி தேனில் லவங்கப் பொடியை நன்று தூவிக் குடிக்க வேண்டும். அதே போல மதியம் 3மணிக்கும் குடித்து வர, இழந்த சக்தியை மீண்டும்  பெறுவார்கள்.#வாய் துர்நாற்றத்தை போக்க! தினமும் காலையில் தேனையும் லவங்கப் பொடியையும் கலந்து சுடுநீரில்  வாய் கொப்பளிப்பதால் வாய் துர்நாற்றம் போய் விடும்.
வாழ்க வளமுடன்.




 

Saturday, January 4, 2020

கடவுள், மொழி, மதம்.

#கடவுள், #மொழி, #மதம்.


பொதுவாக மொழிக்கும் கடவுளுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. கடவுளை அறிந்ததாக சொன்னவர்கள் ஒரு சிலரே, ஆனால் மற்ற அனைவரும் இவர்களை நம்பியும், இவர்களது அறிவுரைகளை கேட்டும், இவர்களை பின் தொடர்ந்துமே கடவுளை வணங்கி வருகின்றனர். கடவுளை அறிந்ததாக சொல்ல படும் சிலர் உலகில் உள்ள மற்ற அனைவருக்கும் எடுத்து கூற மொழி தேவை படுகிறது. https://namennangal.blogspot.com/2020/01/blog-post_94.html

மொழி இல்லாமல் போய் இருந்தால் எதையும், யாரும், யாருக்கும் புரிய வைத்து இருக்க முடியாது. கடவுளை பற்றிய ஞானம் மக்களுக்கு தெரிய படுத்த, அதை கேட்டு அனைவரும் பின் பற்ற மொழி ஒரு முக்கியமான, மறுக்க முடியாத ஒரு தேவை. அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பது மொழி இன்றி அனைவருக்கும் தெரிந்திராது.   

மொழி உருவான பின்பே கடவுளை பற்றி ஞானம் பரவி இருக்க முடியும். வேறு சைகையினாலோ அல்லது ஓவியம் வரைந்தோ கடவுளை பற்றிய செய்திகளை யாராலும் முழுமையாக பரப்பி இருக்க முடியாது. மொழி இல்லாமல் இருந்த காலத்தில் ஒரு சிலர் கடவுளை அறிந்து இருந்தாலும் அதை மற்றவர்களிடத்தில் சொல்லி இருக்க முடியாது.

கடவுளை பற்றிய ஞானம், மொழி உருவானதற்க்கு முன்னரும் மொழி உருவானதற்க்கு பின்னரும் நிச்சயமாக ஒன்றாக இருக்க முடியாது. ஆனால் முதல் முதலாக கடவுளை பற்றிய தகவல்களை பரிமாற ஏதேனும் ஒரு மொழி அவசியம் தேவை. அதன்பின் அந்தந்த மொழிகளில் இருக்கும் கடவுளை பற்றிய தகவல்கள் மற்றோரு மொழிகளில் இருந்து பெறப்பட்டு இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் மொழி இல்லாத காலத்தில் இருந்து மொழி உருவான காலத்திற்க்கு தகவல்களை பரிமாறிக் கொள்ள வாய்ப்புகள் இல்லை.

கடவுளை பற்றிய தகவல்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை மக்களுக்கு அறிவித்து அவர்களை பின்பற்ற வைக்க மதம் என்னும் ஒரு அமைப்பு தேவை படுகிறது. ஆனால் மதம் தோன்ற, மக்கள் அதை பின்பற்ற மொழி நிச்சயம் தேவை. மொழி இல்லாமல் மதம் இல்லை. எனவே மதம் அனைத்தும் அந்தந்த மொழி உருவான பின்னரே தோன்றி இருக்க முடியும். மதம் உருவாகி பின் அதை மக்கள் பின் பற்ற ஏதேனும் ஒரு மொழி நிச்சயம் அவசியம். 
 
கடவுள், மொழி, மதம்.
Tamilan


ஒரு மதம் தோன்றிய காலம் அறிய அது உருவான மொழியின் காலம் அறியப்பட வேண்டும். அதன் பின்னரே மதம் தோன்றிய காலத்தை கணக்கிட முடியும். ஒரு மதம் தோன்றிய மொழியில் இருந்து மற்ற மொழிக்கு பரவி அது பின்பற்றப்பட்டு இருக்கிறது. ஒரு மொழியில் ஒரு மதம் தோன்றி அது மற்ற மொழிக்கு பரவாமல் இருக்கும் போது, அந்த மொழி அழியும் போது அந்த மதமும் அழிந்து, அந்த மதத்தில் பின் பற்றப் பட்ட கடவுள்கள் பற்றிய தகவல்களும் மறைந்து விடுகிறது..

புத்தருடைய மொழி மஹதி ப்ராக்ரித். ஆனால் அவருடைய கருத்துக்கள், போதனைகளாகி, புத்த மதம் உருவாகி, பின்னர் பல்வேறு மொழிகளை சேர்ந்தவர்களால் இன்றும் பின்பற்றப் படுகிறது. ஆனால் புத்த மதம் தோன்றிய மஹதி ப்ராக்ரித் மொழி இன்று இல்லை. புத்த மதம் வேறு மொழிகளுக்கு பரவாமல் இருந்திருந்தால் இன்று புத்தருடைய போதனைகள் நம்மிடையே இல்லாமல் போயிருக்கலாம்.

மேற்கு அந்தமானில், 65,000 ஆண்டுகள் பழைமையான  கிரேட் அந்தமானீஸ் மொழி குடும்பத்தை (Great Andamanese language family) சேர்ந்த கடைசி பெண்மணி, போவா சீனியர் (Boa Sr) கடந்த ஜனவரி 2, 2010 –ல் இறந்தார். அவருடன் அந்த இனத்தை சேர்ந்த போ (Aka-Bo) மொழியும், அதில் பின் பற்றப்பட்ட மதமும் மறைந்து போனது. இது போலவே மனித குலம் தோன்றிய காலம் முதல் ஏராளமான மொழிகளும் அதில் தோன்றிய மதங்களும் மறைந்து போன சரித்திரம் நிறைய உண்டு.


Tamilan