Showing posts with label S. Show all posts
Showing posts with label S. Show all posts

Saturday, January 4, 2020

கடவுள், மொழி, மதம்.

#கடவுள், #மொழி, #மதம்.


பொதுவாக மொழிக்கும் கடவுளுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. கடவுளை அறிந்ததாக சொன்னவர்கள் ஒரு சிலரே, ஆனால் மற்ற அனைவரும் இவர்களை நம்பியும், இவர்களது அறிவுரைகளை கேட்டும், இவர்களை பின் தொடர்ந்துமே கடவுளை வணங்கி வருகின்றனர். கடவுளை அறிந்ததாக சொல்ல படும் சிலர் உலகில் உள்ள மற்ற அனைவருக்கும் எடுத்து கூற மொழி தேவை படுகிறது. https://namennangal.blogspot.com/2020/01/blog-post_94.html

மொழி இல்லாமல் போய் இருந்தால் எதையும், யாரும், யாருக்கும் புரிய வைத்து இருக்க முடியாது. கடவுளை பற்றிய ஞானம் மக்களுக்கு தெரிய படுத்த, அதை கேட்டு அனைவரும் பின் பற்ற மொழி ஒரு முக்கியமான, மறுக்க முடியாத ஒரு தேவை. அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பது மொழி இன்றி அனைவருக்கும் தெரிந்திராது.   

மொழி உருவான பின்பே கடவுளை பற்றி ஞானம் பரவி இருக்க முடியும். வேறு சைகையினாலோ அல்லது ஓவியம் வரைந்தோ கடவுளை பற்றிய செய்திகளை யாராலும் முழுமையாக பரப்பி இருக்க முடியாது. மொழி இல்லாமல் இருந்த காலத்தில் ஒரு சிலர் கடவுளை அறிந்து இருந்தாலும் அதை மற்றவர்களிடத்தில் சொல்லி இருக்க முடியாது.

கடவுளை பற்றிய ஞானம், மொழி உருவானதற்க்கு முன்னரும் மொழி உருவானதற்க்கு பின்னரும் நிச்சயமாக ஒன்றாக இருக்க முடியாது. ஆனால் முதல் முதலாக கடவுளை பற்றிய தகவல்களை பரிமாற ஏதேனும் ஒரு மொழி அவசியம் தேவை. அதன்பின் அந்தந்த மொழிகளில் இருக்கும் கடவுளை பற்றிய தகவல்கள் மற்றோரு மொழிகளில் இருந்து பெறப்பட்டு இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் மொழி இல்லாத காலத்தில் இருந்து மொழி உருவான காலத்திற்க்கு தகவல்களை பரிமாறிக் கொள்ள வாய்ப்புகள் இல்லை.

கடவுளை பற்றிய தகவல்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை மக்களுக்கு அறிவித்து அவர்களை பின்பற்ற வைக்க மதம் என்னும் ஒரு அமைப்பு தேவை படுகிறது. ஆனால் மதம் தோன்ற, மக்கள் அதை பின்பற்ற மொழி நிச்சயம் தேவை. மொழி இல்லாமல் மதம் இல்லை. எனவே மதம் அனைத்தும் அந்தந்த மொழி உருவான பின்னரே தோன்றி இருக்க முடியும். மதம் உருவாகி பின் அதை மக்கள் பின் பற்ற ஏதேனும் ஒரு மொழி நிச்சயம் அவசியம். 
 
கடவுள், மொழி, மதம்.
Tamilan


ஒரு மதம் தோன்றிய காலம் அறிய அது உருவான மொழியின் காலம் அறியப்பட வேண்டும். அதன் பின்னரே மதம் தோன்றிய காலத்தை கணக்கிட முடியும். ஒரு மதம் தோன்றிய மொழியில் இருந்து மற்ற மொழிக்கு பரவி அது பின்பற்றப்பட்டு இருக்கிறது. ஒரு மொழியில் ஒரு மதம் தோன்றி அது மற்ற மொழிக்கு பரவாமல் இருக்கும் போது, அந்த மொழி அழியும் போது அந்த மதமும் அழிந்து, அந்த மதத்தில் பின் பற்றப் பட்ட கடவுள்கள் பற்றிய தகவல்களும் மறைந்து விடுகிறது..

புத்தருடைய மொழி மஹதி ப்ராக்ரித். ஆனால் அவருடைய கருத்துக்கள், போதனைகளாகி, புத்த மதம் உருவாகி, பின்னர் பல்வேறு மொழிகளை சேர்ந்தவர்களால் இன்றும் பின்பற்றப் படுகிறது. ஆனால் புத்த மதம் தோன்றிய மஹதி ப்ராக்ரித் மொழி இன்று இல்லை. புத்த மதம் வேறு மொழிகளுக்கு பரவாமல் இருந்திருந்தால் இன்று புத்தருடைய போதனைகள் நம்மிடையே இல்லாமல் போயிருக்கலாம்.

மேற்கு அந்தமானில், 65,000 ஆண்டுகள் பழைமையான  கிரேட் அந்தமானீஸ் மொழி குடும்பத்தை (Great Andamanese language family) சேர்ந்த கடைசி பெண்மணி, போவா சீனியர் (Boa Sr) கடந்த ஜனவரி 2, 2010 –ல் இறந்தார். அவருடன் அந்த இனத்தை சேர்ந்த போ (Aka-Bo) மொழியும், அதில் பின் பற்றப்பட்ட மதமும் மறைந்து போனது. இது போலவே மனித குலம் தோன்றிய காலம் முதல் ஏராளமான மொழிகளும் அதில் தோன்றிய மதங்களும் மறைந்து போன சரித்திரம் நிறைய உண்டு.


Tamilan

சூட்சும சக்திகளும் நமது உடலும், சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!

சூட்சுமசக்தி:

சூட்சும சக்திகளும் நமது உடலும், சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!

1. நமது மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு நமது மனம்  செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.

நாம் தீயவர்களை நினைக்கும்போது நமது சூட்சும சக்தி அவர்களுடன் இணைந்து நமது வலிமை குறைகிறது. இறைவனை எண்ணும்போது சூட்சும சக்தி வலிமை பெற்று நம்மை காக்கிறது.

2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.

3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.

4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.

5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.

6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.

7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.

8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.

9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.

10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.

11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல. அவனின் சூட்சுமசக்தி காந்தசக்தி போல அவனைச் சுற்றி பாதுகாத்து வருகிறது.

12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.

13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள தொடர்பின் பாதிப்பே ஆகும்.

14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.

15. நோயாளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.

16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.

17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.

18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.

19. ஒரு மனிதனை புண்படச் செய்வது நூதனமான கொலைக்கு சமம்.

20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.

21. நாம் விஞ்ஞான அறிவை மட்டும் பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.

22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

23. வலி என்பது உடலின் மொழி. 
அதை ஒரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.

24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.

25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.

26. உடலின் உறுப்புக்கள் அனைத்தும் மனதுடன் சேர்ந்து இயங்குவதே ஆரோக்கியம். மனது நோயுற்ற பின்னரே உடல்  நோயுறுகிறது.

27. விவசாய நிலத்தில் தாயின் கருவறையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.

28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.

29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.

30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.

31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.

32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.

33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய சக்திகள் நீங்கும்.

34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.

35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரீரத்தின் கவசம் பலம் பெறுகிறது.

36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.

37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடக்கவும்.

38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.

39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.

40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரீரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.

41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.

42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.

43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.

44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.

45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.

46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.

47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.

48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.

49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.

50. தூக்கம் என்பது, 
விழிப்புணர்வு அற்ற தியானம். 
 
தியானம் என்பது, 
விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம். 
*சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்.