Sunday, October 18, 2020

புத்தனின் சீடர்கள்


#அருணகிாி



உலகெல்லாம் பரந்திருந்த இந்துமதம் புத்தன் காலத்தில் திசைதிருப்பபட்டது, புத்தனின் சீடர்கள் இந்து தத்துவங்களை அழிக்க இந்துக்களின் புனித உருவங்களுக்கு புத்தன் பெயரை சூட்டினார்கள்
பிரம்மன் 4 முக புத்தன் என்றானார், பள்ளி கொண்ட பெருமாள் தூங்கும் புத்தர் என்றானார், இப்படி ஏக அழிச்சாட்டியங்களை அந்த புத்தமதம் கிழக்காசியாவில் செய்தது
பிள்ளையார் கூட சிரிக்கும் புத்தராக மாறினார், இன்னும் பல இந்து தத்துவ தெய்வங்கள் அப்படி மாறின‌
முருகன் கூட மயில்மேல் புத்தா என மங்கோலியா பக்கம் மாறினார்
இது ஜப்பானில் கூட உண்டு
சரஸ்வதி ஜப்பானிய மொழியில் அறிவு வழங்கும் கடவுள் என பென்சாண்டைன் என்றானார், பிள்ளையார் மூல கடவுள் என சொல்லபடும் வகையில் காங்கிடென் என்றானார்
குபேரன் செல்வங்களின் அதிபதி என சொல்லபடும் வகையில் பிஷமொன்டன் என்றானார்
சப்த ரிஷிகள் கதையும் ஜப்பானில் இன்று அப்படியே உண்டு மொழி மட்டும் வேறு
பிரம்மனுக்கு முகத்தை புத்தர் என மாற்றிய அம்மதம், சரஸ்வதிக்கு வீணையினை அப்படியே கொடுத்தது
இன்றும் சரஸ்வதி வீணையுடன் ஜப்பானில் பென்சான்டைன் எனும் தெய்வமாக அருள் புரிகின்றாள், ஜப்பானியரின் மிக விருப்பமான கடவுள் அவள்
ஒருவேளை ஜப்பானியர் பெற்றுகொண்ட அனைத்து அறிவுகளுக்கும் அந்த சரஸ்வதி கடாட்சமும் காரணமாக இருக்கலாம்
இந்துமதம் உலகெங்கும் பரவி இருந்தது, இன்று இந்தியாவில் மட்டும் தனித்து பாதுகாக்கபடுகின்றது
தன் வழிபாட்டு வேண்டுதல் வழியெங்கும் "உலகம் " "உலக நன்மை" "உலகை காக்கும் லோக நாயகி" என உலகுக்கு பொதுவான நலன்களை வேண்டிய அம்மதம் அப்படித்தான் உலகெல்லாம் பரவி இருந்தது.
உலகெல்லாம் பரவி இருந்ததாலே லோக ஷேமம் எனும் உலக நலம் அதன் முக்கிய நிலைப்பாடாய் இருந்தது
இன்று  அதன் சுவடுகள் உலகெங்கும் எஞ்சி இருக்கின்றன, வெவ்வேறு வடிவங்களில் அது திரிக்கபட்டாலும் அதன் மூலம் இந்துமதமே என்பது பட்டவர்த்தனமாக தெரிகின்றது
எவ்வடிவில் மழை பொழிந்தாலும் அந்த மேகங்களின் மூலம் இந்து மதமாகவே இருக்கின்றது.
அப்படி உலக மதங்களின் தாய் என சொல்லபடும் இந்துமதம் அதன் பழமையான வேர்களை ஜப்பானிலும் கொண்டிருக்கின்றது
இந்துக்களை போல ஜப்பானியரும் சரஸ்வதியினை வணங்கி இந்நாட்களில் சிறப்பித்து கொண்டிருக்கின்றார்கள்
ஆம், சரஸ்வதி பூஜை ஒரு காலத்தில் உலக பெரும் பண்டிகையாக இருந்தது என்பதற்கான சான்றுகள் இவை..
இந்து என்றொரு மதமில்லை, அப்படி இந்தியா தாண்டி ஒரு பேச்சே இல்லை என திக திமுக ராம்சாமி கோஷ்டி சொல்லி கொண்டிருந்தால் அவனை பரிதாபமாக பார்த்து  கொஞ்சம் சோறும் நீரும் கொடுத்துவிட்டு   நகர்ந்துவிடுங்கள், 
நாம் அவ்வளவுதான் செய்யமுடியும்.

ஸ்டான்லி ராஜன் பதிவிலிருந்து

அருணகிரி

Wednesday, October 14, 2020

புதுவிதமான பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள்...

 தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் இல்லாத சிறப்பு அம்சம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. ஆமாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒன்றுதான்
சிறப்பிடம் பெற்று இருக்கும்.

ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும்தான்

வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையாக இருக்கட்டும்,
கட்டிடகலையின் உச்ச சாதனைக் கோயிலாக இருக்கட்டும்

இயற்கை அழகுசொட்டும் அருவியாக இருக்கட்டும்,
பசுமை போர்வை விவசாய தோழன் அணைகட்டாக இருக்கட்டும்,

புவியியல் சிறப்பு பெற்ற புதை படிமங்களாகட்டும்,
சித்தர்கள் வாசம் செய்யும் மலையகமாக இருக்கட்டும்,

அயல் தேசத்து பறவைகளின் புகலிடமாக இருக்கட்டும்

இப்படி அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற
ஒரே மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமே.

வாருங்களேன். நீங்களும் வந்து கீழ்கண்ட அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்து ரசித்து அனுபவித்து மற்றவர்களுக்கும் சொல்லுங்களேன்...

முக்கியமாக இந்த சுற்றுலா தலங்களுக்கு
அரசின் எந்தவித நுழைவு வரியும் இல்லை
வாகன நிறுத்துமிட கட்டணமும் இல்லை.

தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒருநாள் இன்ப சுற்றுலாவாக திட்டமிட்டு வந்தால் அனைத்து இடத்தினையும் பார்த்து ரசிக்கலாம். குறைந்த செலவில் நிறைந்த சந்தோஷத்துடன் சுற்றுலாவை கண்டு களிக்கலாம்.

பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாதலங்களை பற்றி ஒரு சில வரிகளில் சுருக்கமாக கொடுத்திருக்கிறேன். படித்து முடித்து ஆர்வம் உள்ளவர்கள் நேரில் வந்து விரிவான விளக்கங்களை அறிந்து ஆச்சரியப்படுங்கள்.

சுற்றுலா ஏற்பாடு செய்யும் முனைவோர்களே.. டிராவல்ஸ் அதிபர்களே...
இதுமாதிரி ஒரு கலவையான சுற்றுலாவை நீங்கள் எங்கும் எப்பொழுதும் அமைத்திருக்க மாட்டீர்கள்., உங்கள் பகுதியில் உள்ளவர்களை பெரம்பலூருக்கு சுற்றுலா அழைத்துவந்து இன்புருங்கள். காத்திருக்கிறோம்.

ஜோதிடர்களே, நாடி பார்ப்பவர்களே, கைரேகை பார்ப்பவர்களே தோஷம் உள்ளவர்களையும், பரிகாரம் செய்யவேண்டியவர்களையும் எங்கள் பகுதியில் உள்ள அருள்மிகு ஏகாபரேஸ்வரர் - குருபகவான் கோயில், கண்ணகிக்கே மனதை ஆற்றுப்படுத்திய அருள்மிகு தண்டபாணி திருக்கோயில், சுவேதகேது முனிவருக்கே தோஷம் அகற்றி முக்தி கொடுத்த அருள்மிகு அபராதரட்சகர் திருக்கோயில் மற்றும் மதுர காளியம்மன் கோயில்களுக்குவரச்சொல்லுங்கள்.

மனநிறைவோடு கடவுள் அருளும் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும் அதுக்கு நான் உத்திரவாதம்.

உங்களுக்கு பொருளாதாரம் - எங்களுக்கு வாழ்வாதாரம்

வேறு தொழில்கள் வாய்ப்புகள் இல்லாத எங்கள்
வானம் பார்த்த வறண்ட பூமியான பெரம்பலூர்
உங்கள் சுற்றுலாவால் வளம் பெறட்டுமே....
------------------------------------------------------------
1. அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்-வாலிகண்டாபுரம்:
கி.பி. 10ம் நூற்றாண்டில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னால் பராந்தக சோழனால் தஞ்சை பெரிய கோயிலுக்கு முன் கலைநயமிக்க சிற்பிகளால் பார்த்துப்பார்த்து அழகுற கட்டப்பட்ட சிறப்பு பெருமை பெற்றது இத்திருக்கோயில். திரேதா யுகத்தில் கிஷ்கிந்தை நாட்டின் அரசன் வாலியே வந்து இங்குள்ள சுயம்பு ஈஸ்வரரை வணங்கித்தான் எதிரியின் பலத்தில் பாதி பெற்றதும் / வாலியை இராமன் மறைந்து இருந்து அம்பெய்து கொன்ற இடம் இது என்றும் ஆதலால் இங்குள்ள ஈஸ்வரர் வாலீஸ்வரர் என்றும் ஊருக்கு வாலிகண்டாபுரம் என்றும் அழைக்கப்படுவதாக சொல்கிறார்கள். இது பெரம்பலூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கியதுவமான திருக்கோயில் ஆகும்.

2. இரஞ்சன்குடி கோட்டை – இரஞ்சன்குடி
சுந்தர சோழனின் சிற்றரசன் வன்னாட்டு தூங்கானை மறவன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டியதாக வாலிகண்டபுரம் கோயில் கல்வெட்டுகள் சிறு குறிப்பினை தருகிறது..நாயக்கர்கள், பிஜப்பூர் சுல்தான் சுல்பீர் கான், மராட்டியர்கள், முகலாய ஆர்காடு நவாப் கூட்டு படைகள் ,கோட்டையை ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி உள்ளனர் .. 1751-52 ராபர்ட் கிளைவின் தலைமையிலான ஆங்கிலப் படை ஆர்டினல் தலைமையிலான பிரெஞ்சுப் படை ஆகியோருக்கு இடையேயான போரில் ஆங்கிலேயர் கோட்டை மீது பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளனர் ..அதன் பிறகு ஆங்கிலேய நவாப் கூட்டுப் படைகளுக்கும்- ஹைதர் அலி படைக்கும் நடந்த போரின் போதும் இந்த கோட்டை பயன்படுத்தப்பட்டது. இது பெரம்பலூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் சென்னை தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை அழியாமல் உள்ள ஒரு சில கோட்டைகளில் இதுவும் ஒன்று.

3. மருதையாறு-கொட்டரை நீர்தேக்கம் (கொட்டரை அணை)
பெரம்பலூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் வட்டம் கல்பாடி பிரிவிலிருந்து ஆதனூர் கொட்டரை நீர்தேக்கத்தை 18 கி.மீ.ல்வந்தடையலாம் புதிய அணை நீர்தேக்கம். புதிய பூங்கா. பரபர[ப்பான நகர வாழ்க்கையில் இருந்து விலகி மருதை ஆற்றின் அழகையும் இயற்கை வளத்தையும் கண்டுகளிக்கவும் மனதுக்கு இனிமை சேர்க்கவும் சிறந்த சுற்றுலாத்தலம்.

4. அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில்-சிறுவாச்சூர்:
கி.பி.9ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதும் ஸ்ரீ ஆதிசங்கரர் வழிபட்டு பாடல் பெற்ற முக்கியத் திருத்தலம். சிலப்பதிகார காவிய நாயகி கண்ணகி மதுரையை எரித்தபின் மனம் அமைதியின்றி வாழ்ந்ததாகவும் இங்கு வந்து செட்டிகுளம் தண்டாயுதபாணியால் ஆற்றுப்படுத்தப்பட்டு சிறுவாச்சூரில் அம்மனாக மக்களுக்கு அருள் பாளிப்பதாகவும் பெரியோர்கள் சொல்கின்றனர். வாரத்தில் திங்கள், வெள்ளி மற்றும் அம்மாவாசை, பௌர்ணமி தினங்களில் மட்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. இத்திருக்கோயில் பெரம்பலூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

5. தேசிய கல்மரபூங்கா-சாத்தனூர்:
இந்தியாவில் வேறு எங்கும் காணக்கிடைக்காத டைனோசர் முட்டை மற்றும் 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட மரம் கல்லாகி போன பாசில்கள் (புதை படிமங்கள்) உள்ள ஒரே முக்கியத்துவம் வாய்ந்த இடம் இது. பெரம்பலூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள ஆலத்தூர் வட்டத்தில் திருச்சி தேசியநெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் பிரிவிலிருந்து செல்லும் சாலையில் சாத்தனூர் கிராமத்தில் ஏரிக்கரை அருகில் உள்ள இந்த தேசிய கல்மர பூங்காவில் மட்டும்தான். வரலாற்று பெட்டகம். ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்த இடம் ஒருசிறந்த பாடமாகும்.

6. அருள்மிகு அபராதரட்சகர் திருக்கோயில்-சு.ஆடுதுறை:
சுவேதகேது முனிவரால் வணங்கப்பட்டு முக்தி பெற்றதும் கி.பி.12ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்தலம். இத்திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 11,12,13 ஆகிய தேதிகளில் சூரியன் மூலவர் சிலை மீது விழும்படி அமைக்கப்பட்ட சிறப்பு பெற்ற திருத்தலம். திருக்கோயில் தொழுதூர் திட்டக்குடி சாலையில் ஆக்கனூருக்கு தெற்கே சு. ஆடுதுறையில் வடவெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.

7. மயிலூத்து அருவி – லாடபுரம் மற்றும் கோரையாறு அருவி
தமிழகத்தில் இருக்கும் ஒரு சில அருவிகளில் பெரம்பலூர் நகரில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் லாடபுரம் பச்சை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மயிலூத்து அருவிக்கும் ஒரு சிறப்பு இடம் உண்டு. இங்கு வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் நவம்பர் மாதங்களில் அருவியில் தண்ணீர் ஆர்பரித்து வந்து சீசன் களைகட்டும். அருவியில் குளித்து இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க மிகசிறந்த இடம்.
இந்த லாடபுரம் மகாபாரத போரில் பஞ்சபாண்டவர்கள் மறைந்து இருந்த (அஞ்சாதவாசம்) இடம் என்ற செவி வழிச்செய்தியும் உண்டு. பச்சைமலையில் திரௌபதிக்கு கோயில் இருந்ததாகவும் காலவெள்ளத்தில் சிதிலமடைந்துவிட்ட அந்த கோயிலையும் காணலாம். வரலாற்று சுவடுகள்.
கோரையாறு அருவி இந்த பச்சைமலைக்கு வடக்கே(பின்புறம்) அதாவது பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் வேப்பந்தட்டை கிருஷ்ணாபுரம் தொண்டமாந்துறை விஜயபுரம் அய்யர்பாளையம் வழியாக பச்சைமலை அடிவாரம் வந்தால் கோரையாறு அருவியை அடையலாம். இயற்கை அன்னையின் மடியில் சுத்தமான காற்று சுத்தமான தண்ணீர் மாசற்ற சூழல் வேண்டுவோருக்கு அமைதியான சிறந்த இடம்.
8. அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்-செட்டிகுளம்.
கி.பி.12ம் நூற்றாண்டில் அதாவது சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் குலசேகர பாண்டிய மன்னனால் இவ்வாலயம் கட்டப்பட்டது. சூரிய ஒளி பங்குனி மாதம் 19,20,21 ஆகிய தேதிகளில் சுவாமிமீது விழும் வகையிலும் சிறுது நேரத்தில் அதே சூரிய ஒளி நகர்ந்து அம்மன் மீதும் விழும்படி இத்திருக்கோயில் தமிழனின் கட்டடகலையின் சிறப்பம்சமாகும். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத இங்கு குபேரனுக்கு தனி சன்னிதியும் பிரசாதமாக பச்சை குங்குமமும் வழங்கப்படுவது தனிச்சிறப்பு. அதுமட்டுமல்லாது 12 ராசிகளுக்குமான குபேரன் ஓம் வடிவில் தனித்தனியாக ஆலய தூண்களில் அமைத்துள்ளது வேறு எங்கும் இல்லா சிறப்பு. இதன் மூலம் குபேர சம்பத்துக்கு வழிகாட்டும் தளமாக இது திகழ்கிறது. இவ்வாலயம் பெரம்பலூரில் இருந்து துறையூர் சாலை பிரிவிலிருந்து செட்டிகுளம் 25 கி.மீ. திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆலத்தூர் கேட் பிரிவிலிருந்து 10 கி.மீ. தூரத்திலும் இவ்வாலயம் அமைந்துள்ளது.

9. விசுவகுடி அணை - கல்லாறு நீர் தேக்கம்
தமிழகத்தில் இருக்கும் மிகசில அணைகளில் 2015ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த விசுவகுடி நீர்தேக்கத்துக்கும் ஒரு இடம் உண்டு. அழகிய பூங்காவுடன் அமைந்த இந்த நீர்தேக்கம் பெரியவர்களையும் குழந்தைகளையும் கவரும் வண்ணம் ரம்மியமாக அமைக்கப்பட்டுள்ளது. இது பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் சாலையில் அன்னமங்கலம் ஊராட்சியில் 33 அடிவர்ரை நீர் தேக்கும் அளவில் கல்லாற்றின் குறுக்கே பச்சை மலைக்கும் செம்மலைக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பினருக்குமான சி’றந்த சுற்றுலா தளம்..

10. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்-செட்டிகுளம்
தமிழகத்திலேயே முருகன் 11 கணுக்களுடைய கரும்புடன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பது இத்தலத்தில் மட்டுமே. இத்தலத்தில் உள்ள காமாட்சியம்மன் அரக்கணை அழிக்க தண்டாயுதபாணிக்கு கரும்பினை கொடுத்தமையால் அம்மன் இத்தலத்தில் கரும்பில்லாமல் காட்சி கொடுக்கிறார். கி.பி.12ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டது. இதன் கட்டிடகலைக்கும் வான சாஸ்திரத்திற்கும் ஒரு சான்று எடுத்துக்காட்டு அதாவது ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம்19,20,21ம் தேதிகளில் மாலை வேளையில் சூரியனின் ஒளிகதிர்கள் சுவாமியின் மீது விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இத்திருதலத்தை தவிர வேறேங்கும் இல்லை. இது பெரம்பலூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் பிரிவில் இருந்து செட்டிகுளம் சென்றால் மலை குன்றின்மீது இருக்கும் சுவாமி தண்டாயுதபாணியை தரிசிக்கலாம்.

11. பறவைகள் சரணாலயம் – ஆதனூர்
விதவிதமான வெளிநாட்டு பறவைகளையும் உள்நாட்டு பறவைகள் நாரை கொக்கு போன்ற பறவைகளை பார்க்கனுமா? அப்ப உங்க சாய்ஸ் பெரம்பலூர் அருகில் இருக்கும் ஆதனூர் பறவைகள் சரணாலயம்தான். வாருங்கள் இயற்கை அழகை ரசித்துக்கொண்டே ஏரியில் மரங்களில் பறவைகள் கிறீச்சிடும் ஓசையும் சிரகடிக்கும் அழகும் ரம்யமான சுற்றுச்சூழலும் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும். அனைவருக்குமான அருமையான ஒரு சுற்றுலாதலம் இது.

12. பிரம்மரிஷி சித்தர்கள் மலைக்கோயில் – எளம்பளூர்
மலைஏற்றம் விருப்பம் உள்ள ஆட்களுக்கு இது ஒரு சிறந்த சுற்றுலாவுக்கான இடம். சிறிய மலை 20-30 நிமிடங்களில் ஏறிவிடலாம். சித்தர்கள் சூட்சுமமாக உலவும் இடம் என்று சொல்லப்படுகிறது.. மலை அடிவாரத்தில் சித்தருக்கு கோயிலும். மலை மேல் விளக்கு தூணும் அமைக்கப்பட்டுள்ளது. மலை மேல் இருந்து கீழே பறவை பார்வையில் பெரம்பலூர் நகரத்தையும் தேசிய நெடுஞ்சாலையையும் பார்ப்பது ஒரு பரவசமான அனுபவம். வாருங்களேன் ஒருமுறை பிரம்மரிஷி மலை ஏறித்தான் பாருங்களேன்... உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம். பெரம்பலூரில் இருந்து 3வது கி.மீ. எளம்பளலூரில் சென்னை தேசியநெடுஞ்சாலையில் இருந்து ஆத்தூர் செல்லும் சுற்றுவட்டச்சாலையில் அமைந்துள்ளது இந்த பிரம்ரிஷி மலை.
---------------------------------------------
அதிகம் பகிர்ந்து சேவை செய்யுங்கள் தோழமைகளே..!

ஒரு மாவட்டத்தின் வளர்ச்சியே உங்கள் கையில்...

தாமரை மக்கள் சேவை மையம்
9944433250












Tuesday, October 6, 2020

நீ ஆடுகின்ற ஆட்டத்தில் தான் உலகம் ஆடுகின்றது

#சுந்தா்ஜீ


நீ ஆடுகின்ற ஆட்டத்தில் தான் உலகம் ஆடுகின்றது அறியாமையில் நான் என்ற கர்வம் கொண்டேன் உணர்ந்தபோது புரிந்துகொண்டேன் நான் இல்லை அனைத்தும் நீதான் என்று
ஈசனே!!!



#சூா்யா

Sunday, September 27, 2020

வெள்ளி மற்றும்

"வியாபார மந்தம் நீங்கி செழிப்பு ஏற்ப்பட""...🏵🏵🏵

#Sundarji
#Suryatrust

வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து அதில் கொஞ்சம் பன்னீரும் ஒரு ஏலக்காயும் போட்டு உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை

 "ஓம் ஸ்ரீம் .................தெய்வத்தின் பெயர் சேர்த்து 108"முறை

 ஜெபித்தப்படி கிழக்கு திசையில் ஆரம்பித்து எல்லா திசைகளிலும் அந்த நீரை தெளித்து விடவும் கண் திருஷ்டி எதிரிகளின் கெட்ட எண்ணங்கள் நீங்கி தொழில் விருக்திஅடையும்  மீதமுள்ள நீரைக்கொண்டு முகம் கழுவவும்..

இதை காலை 9 to 10"மணிக்குள்ளும் அல்லது மாலை"6 முதல் 7.30"வரைக்குள் செய்து முடிக்கவும் 
#Sundarji

Friday, September 25, 2020

பனகிழங்கு சாப்பிட்ட அனுபவம்

பிஸ்கெட் என்பார்!
பர்கர் என்பார்!

பனங்கிழங்கின்!
ருசியறியாதோர்...!!!

பனகிழங்கு  சாப்பிட்ட அனுபவம் ....???

Wednesday, September 23, 2020

இவருக்கு கோபம் என்பதே வராது.

🕉️காசியபர் என்ற முனிவர் அசுரர்களின் தந்தை. இவர் பிரம்மனின் மகன். பெரும் தெய்வபக்தி கொண்டவர்.

 இவருக்கு கோபம் என்பதே வராது. சத்தியத்தைக் கடைபிடிப்பவர். நல்ல குணங்கள் கொண்ட காசியபருக்கு திதி என்ற மனைவி இருந்தாள். இவர்களுக்கு 66 கோடி குழந்தைகள். அனைவரும் அசுர குணம் கொண்டவர்கள். இருந்தாலும் பெற்றோருக்கு பிள்ளைகள் அல்லவா? அசுரக்குழந்தைகளின் தலைவனாக அசுரேந்திரன் என்பவனை நியமித்தார். 
அசுரேந்திரன் மங்களகேசினி என்பவளை மணந்து சுரசை என்ற மகளைப் பெற்றான். அவளுக்கு அசுர குருவான சுக்கிராச்சாரியார் பல வித்தைகளை கற்றுக்கொடுத்தார். மாயை என்ற பெயரையும் சூட்டினார். சுக்கராச்சாரியாருக்கு அசுரர்களின் நிலை குறித்து கவலை ஏற்பட்டது. தேவர்களைவிட அவர்கள் குறைந்த வலிமையுடன் இருந்தனர். 

🔥தேவர்களிடம் தோற்றுப்போவதே அசுரர்களுக்கு வாடிக்கையாக இருந்தது. எனவே தேவர்களை அடக்கி ஆளும் வல்லமையை பெற்று, அசுரகுலத்தின் பெருமையை உயர்த்த முடிவுசெய்தார். மாயையால் இதை செய்ய முடியும் என நம்பினார். ஆண்களால் செய்ய முடியாத ஒன்றை பெண்களைக்கொண்டு சாதிப்பது எந்தக் காலத்திலும் கைவந்த கலை தானே!.

 💦காசியப முனிவரை சந்தித்து அவர் மூலமாக ஏராளமான அசுரகுழந்தைகளை உற்பத்தி செய்து நம் குலத்தின் பெருமையை உயர்த்த வேண்டும். அந்தக் குழந்தைகள்தான் 66 கோடி அசுரர்களையும் பாதுகாக்க வேண்டும். காசியபர் மிகவும் நல்லவர் என்பதால் அவர் மூலம் பிறக்கும் குழந்தைகள் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள் என மாயைக்கு சுக்கிராச்சாரியார் யோசனை சொன்னார். 

மாயை பெற்றோரிடம் அனுமதி பெற்று காசியபர் வசிக்கும் காட்டிற்கு சென்றாள். காட்டின் ஒரு பகுதியை அழித்து மலர்செடிகள், மரங்கள், நீரோடை, உயரமான மண்டபங்கள் கொண்ட ஒரு அரண்மனையை தன் சக்தியால் உருவாக்கினாள். அங்கு காசியபர் வந்தார். 

அவருக்கு நட்ட நடு காட்டில் இருந்த அரண்மனை பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இதை உருவாக்கியது யார் என பார்ப்பதற்காக அரண்மனைக்குள் சென்றார். உள்ளே மாயை அழகே வடிவாக அமர்ந்திருந்தாள்.

💦மாயையிடம், நட்ட நடு காட்டில் பயமின்றி அரண்மனை அமைத்து தங்கியிருக்கும் நீ யார்? என கேட்டார். அதற்கு அவள், நான் இந்த காட்டுப்பகுதியில் மன அமைதி தேடி வந்தவள். தனிமையாகவே இங்கு வசிக்கிறேன் என்றாள். அவளது அழகை காசியபர் மிகவும் புகழ்ந்தார். தவத்தில் சிறந்த முனிவரான நீங்கள் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கும் நிலையில் தனியாக இருக்கும் ஒரு பெண்ணின் அழகைப் புகழலாமா? 

🙏இது உங்கள் தவத்திற்கு இழுக்கை ஏற்படுத்தாதா? என கேட்டாள் மாயை. காசியபர் காதில் எதுவும் விழவில்லை. அந்தப் பெண்ணை திருமணம் செய்துவிட வேண்டும் என்பதில் மும்முரமாக இருந்தார். அப்போது மாயை ஒரு நிபந்தனை விதித்தாள். இந்த வயதான ரூபத்தில் இருந்தால் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன். என் வயதுக்கு தக்கபடி ஒரு ராஜகுமாரன்போல உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் என்றாள். காசியபரும் அவள் சொன்னபடி உரு மாறினார். அவர்களுக்கு முதலில் பிறந்தவனே சூரபத்மன்.

 ...இதைத் தொடர்ந்து அவர்களின் வியர்வை துளியிலிருந்து 30 ஆயிரம் அசுர படைவீரர்கள் உருவானார்கள். மேலும் சிங்க முகம் கொண்ட சிம்மபத்ரன் என்பவனும் அவனோடு 40 ஆயிரம் படைவீரர்களும், யானைமுகம் கொண்ட தாரகன் என்பவனும், அவனோடு 40 ஆயிரம் படைவீரர்களும் உற்பத்தி ஆனார்கள். ஆட்டின் முகம் கொண்ட கஜாமுகி என்ற பெண்ணும் அவளோடு 30 ஆயிரம் வீரர்களும் பிறந்தனர். இதனால் உலகில் அசுரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தங்களது புத்திரசெல்வங்களை பார்த்து காசியபரும், மாயையும் ஆனந்தம் கொண்டனர். ஒருநாள் பத்மாசுரன், 

🗿ஒரே நேரத்தில் இவ்வளவு அசுரர்களை எதற்காக பெற்றீர்கள்? நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என காசியபரிடம் கேட்டான். அவர் தன் குழந்தைகள் அனைவரையும் அழைத்து, அனைவருமே சிவனின் அருளைப் பெற தவம் செய்யுங்கள்.  தானம் தர்மம் செய்யுங்கள். தர்மம் தவறாமல் வாழ்ந்துகாட்டுங்கள். எல்லா ஜீவன்களிடத்திலும் அன்பு செலுத்துங்கள் என கூறினார். இதைக்கேட்ட மாயை ஆத்திரம் அடைந்தாள். 

👀அவள் தன் சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தாள். உங்கள் தந்தை சொன்ன எதையும் நீங்கள் செய்ய வேண்டாம். அவர் தன்னைப்போலவே உங்களையும் முனிவர்கள் போல் ஆக்க முயற்சி செய்கிறார். இதனால் உங்கள் வாழ்க்கை இனிக்காது. நீங்கள் வீரர்களாக வளர வேண்டும். ஏராளமான செல்வம் சேர்க்க வேண்டும்.

🦚புகழுடன் வாழ வீரமும், செல்வமுமே பிரதானமானது. எனவே நீங்கள் சிவபெருமானை நினைத்து தவம் இருந்து, உங்கள் வீரத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களை யாரும் அழிக்காமல் இருக்க வரம் பெற்று வாருங்கள். அதன்பிறகு அசுரகுலமே உலகில் உயர்ந்தது என்பதை உணர்த்துங்கள் என்று கட்டளையிட்டு விட்டு, 

🦚தான் யார் என்ற உண்மையை காசியபரிடம் தெரிவித்தாள். காசியபருக்கு அப்போதுதான், தாம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம் என்பது புரிந்தது. அவர் தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் வேண்டி, தவமிருக்க சென்றுவிட்டார். அதன்பிறகு அசுர குமாரர்கள் எல்லாம் சூரபத்மனின் தலைமையில் தவம் இருந்தனர். தங்களைச் சுற்றி 108 அக்கினி குண்டங்களை உருவாக்கினர். ஏராளமான தானியங்களைக் கொண்டு யாகம் செய்தனர். தவத்தை தொடர்ந்து நடத்தினர். ஆனால் சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றவில்லை. எனவே சூரபத்மன் தீக்குள் குதிக்க முயன்றான். அப்போது சிவபெருமான் தோன்றி சூரபத்மனை தடுத்து நிறுத்தி தனது சக்தியைத் தவிர வேறு யாராலும் அசுரகுலத்தை அழிக்க முடியாது என வரம் தந்தார். 

🌸அதன்பிறகு சூரர்களின் அட்டகாசம் அதிகரித்தது. பிரம்மா, விஷ்ணு ஆகியோர் கூட அவரவர் தொழிலை செய்ய முடியவில்லை. அனைவரும் வரம் கொடுத்த சிவனிடமே முறையிட்டனர். அவர் அசுரகுலத்திற்கு முடிவுகட்ட நேரம் வந்துவிட்டதை அவர்களிடம் உணர்த்தி, தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உருவாக்கினார். சரவணப் பொய்கை என்ற குளத்தில் அந்த பொறிகள் போய் விழுந்தன. ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக வடிவெடுத்தன. 

🦚அந்த குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் தாலாட்டி வளர்த்தனர். பார்வதிதேவி அந்த குழந்தைகளை ஒன்று சேர்த்து கந்தன் என பெயர் சூட்டினாள். ஸ்கந்தன் என்றால் ஒன்று சேர்க்கப்பட்டவன் என்று பொருள். கந்தனுக்கு முருகன் என்ற பெயரும் உண்டாயிற்று. அழகாக இருந்ததால் முருகன் என பெயர்பெற்றார். அவருடன் வீரபாகு தலைமையில் லட்சம் வீரர்கள் போர்செய்ய சென்றனர். வீரபாகு பார்வதியின் கொலுசு மணியில் இருந்து உருவானவன். அவனை தனது படையின் சேனாதிபதி ஆக்கினார் முருகன்.

 🦚அனைவரும் சூரபத்மனையும் அவனது சகோதரர்களையும் எல்லா அசுரர்களையும் கொன்று குவித்தனர். சூரனை இரண்டாகப் பிளந்து, ஒரு புறத்தை சேவலாகவும், ஒரு புறத்தை மயிலாகவும் மாற்றினார். மயிலை தன் வாகனமாகவும், சேவலை தன் கொடியின் சின்னமாகவும் கொண்டார். ஐப்பசி மாதம் சஷ்டி நாளில் இந்த வதம் நிகழ்ந்தது.