Tuesday, October 6, 2020

நீ ஆடுகின்ற ஆட்டத்தில் தான் உலகம் ஆடுகின்றது

#சுந்தா்ஜீ


நீ ஆடுகின்ற ஆட்டத்தில் தான் உலகம் ஆடுகின்றது அறியாமையில் நான் என்ற கர்வம் கொண்டேன் உணர்ந்தபோது புரிந்துகொண்டேன் நான் இல்லை அனைத்தும் நீதான் என்று
ஈசனே!!!



#சூா்யா

Sunday, September 27, 2020

வெள்ளி மற்றும்

"வியாபார மந்தம் நீங்கி செழிப்பு ஏற்ப்பட""...🏵🏵🏵

#Sundarji
#Suryatrust

வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து அதில் கொஞ்சம் பன்னீரும் ஒரு ஏலக்காயும் போட்டு உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை

 "ஓம் ஸ்ரீம் .................தெய்வத்தின் பெயர் சேர்த்து 108"முறை

 ஜெபித்தப்படி கிழக்கு திசையில் ஆரம்பித்து எல்லா திசைகளிலும் அந்த நீரை தெளித்து விடவும் கண் திருஷ்டி எதிரிகளின் கெட்ட எண்ணங்கள் நீங்கி தொழில் விருக்திஅடையும்  மீதமுள்ள நீரைக்கொண்டு முகம் கழுவவும்..

இதை காலை 9 to 10"மணிக்குள்ளும் அல்லது மாலை"6 முதல் 7.30"வரைக்குள் செய்து முடிக்கவும் 
#Sundarji

Friday, September 25, 2020

பனகிழங்கு சாப்பிட்ட அனுபவம்

பிஸ்கெட் என்பார்!
பர்கர் என்பார்!

பனங்கிழங்கின்!
ருசியறியாதோர்...!!!

பனகிழங்கு  சாப்பிட்ட அனுபவம் ....???

Wednesday, September 23, 2020

இவருக்கு கோபம் என்பதே வராது.

🕉️காசியபர் என்ற முனிவர் அசுரர்களின் தந்தை. இவர் பிரம்மனின் மகன். பெரும் தெய்வபக்தி கொண்டவர்.

 இவருக்கு கோபம் என்பதே வராது. சத்தியத்தைக் கடைபிடிப்பவர். நல்ல குணங்கள் கொண்ட காசியபருக்கு திதி என்ற மனைவி இருந்தாள். இவர்களுக்கு 66 கோடி குழந்தைகள். அனைவரும் அசுர குணம் கொண்டவர்கள். இருந்தாலும் பெற்றோருக்கு பிள்ளைகள் அல்லவா? அசுரக்குழந்தைகளின் தலைவனாக அசுரேந்திரன் என்பவனை நியமித்தார். 
அசுரேந்திரன் மங்களகேசினி என்பவளை மணந்து சுரசை என்ற மகளைப் பெற்றான். அவளுக்கு அசுர குருவான சுக்கிராச்சாரியார் பல வித்தைகளை கற்றுக்கொடுத்தார். மாயை என்ற பெயரையும் சூட்டினார். சுக்கராச்சாரியாருக்கு அசுரர்களின் நிலை குறித்து கவலை ஏற்பட்டது. தேவர்களைவிட அவர்கள் குறைந்த வலிமையுடன் இருந்தனர். 

🔥தேவர்களிடம் தோற்றுப்போவதே அசுரர்களுக்கு வாடிக்கையாக இருந்தது. எனவே தேவர்களை அடக்கி ஆளும் வல்லமையை பெற்று, அசுரகுலத்தின் பெருமையை உயர்த்த முடிவுசெய்தார். மாயையால் இதை செய்ய முடியும் என நம்பினார். ஆண்களால் செய்ய முடியாத ஒன்றை பெண்களைக்கொண்டு சாதிப்பது எந்தக் காலத்திலும் கைவந்த கலை தானே!.

 💦காசியப முனிவரை சந்தித்து அவர் மூலமாக ஏராளமான அசுரகுழந்தைகளை உற்பத்தி செய்து நம் குலத்தின் பெருமையை உயர்த்த வேண்டும். அந்தக் குழந்தைகள்தான் 66 கோடி அசுரர்களையும் பாதுகாக்க வேண்டும். காசியபர் மிகவும் நல்லவர் என்பதால் அவர் மூலம் பிறக்கும் குழந்தைகள் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள் என மாயைக்கு சுக்கிராச்சாரியார் யோசனை சொன்னார். 

மாயை பெற்றோரிடம் அனுமதி பெற்று காசியபர் வசிக்கும் காட்டிற்கு சென்றாள். காட்டின் ஒரு பகுதியை அழித்து மலர்செடிகள், மரங்கள், நீரோடை, உயரமான மண்டபங்கள் கொண்ட ஒரு அரண்மனையை தன் சக்தியால் உருவாக்கினாள். அங்கு காசியபர் வந்தார். 

அவருக்கு நட்ட நடு காட்டில் இருந்த அரண்மனை பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இதை உருவாக்கியது யார் என பார்ப்பதற்காக அரண்மனைக்குள் சென்றார். உள்ளே மாயை அழகே வடிவாக அமர்ந்திருந்தாள்.

💦மாயையிடம், நட்ட நடு காட்டில் பயமின்றி அரண்மனை அமைத்து தங்கியிருக்கும் நீ யார்? என கேட்டார். அதற்கு அவள், நான் இந்த காட்டுப்பகுதியில் மன அமைதி தேடி வந்தவள். தனிமையாகவே இங்கு வசிக்கிறேன் என்றாள். அவளது அழகை காசியபர் மிகவும் புகழ்ந்தார். தவத்தில் சிறந்த முனிவரான நீங்கள் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கும் நிலையில் தனியாக இருக்கும் ஒரு பெண்ணின் அழகைப் புகழலாமா? 

🙏இது உங்கள் தவத்திற்கு இழுக்கை ஏற்படுத்தாதா? என கேட்டாள் மாயை. காசியபர் காதில் எதுவும் விழவில்லை. அந்தப் பெண்ணை திருமணம் செய்துவிட வேண்டும் என்பதில் மும்முரமாக இருந்தார். அப்போது மாயை ஒரு நிபந்தனை விதித்தாள். இந்த வயதான ரூபத்தில் இருந்தால் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன். என் வயதுக்கு தக்கபடி ஒரு ராஜகுமாரன்போல உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் என்றாள். காசியபரும் அவள் சொன்னபடி உரு மாறினார். அவர்களுக்கு முதலில் பிறந்தவனே சூரபத்மன்.

 ...இதைத் தொடர்ந்து அவர்களின் வியர்வை துளியிலிருந்து 30 ஆயிரம் அசுர படைவீரர்கள் உருவானார்கள். மேலும் சிங்க முகம் கொண்ட சிம்மபத்ரன் என்பவனும் அவனோடு 40 ஆயிரம் படைவீரர்களும், யானைமுகம் கொண்ட தாரகன் என்பவனும், அவனோடு 40 ஆயிரம் படைவீரர்களும் உற்பத்தி ஆனார்கள். ஆட்டின் முகம் கொண்ட கஜாமுகி என்ற பெண்ணும் அவளோடு 30 ஆயிரம் வீரர்களும் பிறந்தனர். இதனால் உலகில் அசுரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தங்களது புத்திரசெல்வங்களை பார்த்து காசியபரும், மாயையும் ஆனந்தம் கொண்டனர். ஒருநாள் பத்மாசுரன், 

🗿ஒரே நேரத்தில் இவ்வளவு அசுரர்களை எதற்காக பெற்றீர்கள்? நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என காசியபரிடம் கேட்டான். அவர் தன் குழந்தைகள் அனைவரையும் அழைத்து, அனைவருமே சிவனின் அருளைப் பெற தவம் செய்யுங்கள்.  தானம் தர்மம் செய்யுங்கள். தர்மம் தவறாமல் வாழ்ந்துகாட்டுங்கள். எல்லா ஜீவன்களிடத்திலும் அன்பு செலுத்துங்கள் என கூறினார். இதைக்கேட்ட மாயை ஆத்திரம் அடைந்தாள். 

👀அவள் தன் சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தாள். உங்கள் தந்தை சொன்ன எதையும் நீங்கள் செய்ய வேண்டாம். அவர் தன்னைப்போலவே உங்களையும் முனிவர்கள் போல் ஆக்க முயற்சி செய்கிறார். இதனால் உங்கள் வாழ்க்கை இனிக்காது. நீங்கள் வீரர்களாக வளர வேண்டும். ஏராளமான செல்வம் சேர்க்க வேண்டும்.

🦚புகழுடன் வாழ வீரமும், செல்வமுமே பிரதானமானது. எனவே நீங்கள் சிவபெருமானை நினைத்து தவம் இருந்து, உங்கள் வீரத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களை யாரும் அழிக்காமல் இருக்க வரம் பெற்று வாருங்கள். அதன்பிறகு அசுரகுலமே உலகில் உயர்ந்தது என்பதை உணர்த்துங்கள் என்று கட்டளையிட்டு விட்டு, 

🦚தான் யார் என்ற உண்மையை காசியபரிடம் தெரிவித்தாள். காசியபருக்கு அப்போதுதான், தாம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம் என்பது புரிந்தது. அவர் தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் வேண்டி, தவமிருக்க சென்றுவிட்டார். அதன்பிறகு அசுர குமாரர்கள் எல்லாம் சூரபத்மனின் தலைமையில் தவம் இருந்தனர். தங்களைச் சுற்றி 108 அக்கினி குண்டங்களை உருவாக்கினர். ஏராளமான தானியங்களைக் கொண்டு யாகம் செய்தனர். தவத்தை தொடர்ந்து நடத்தினர். ஆனால் சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றவில்லை. எனவே சூரபத்மன் தீக்குள் குதிக்க முயன்றான். அப்போது சிவபெருமான் தோன்றி சூரபத்மனை தடுத்து நிறுத்தி தனது சக்தியைத் தவிர வேறு யாராலும் அசுரகுலத்தை அழிக்க முடியாது என வரம் தந்தார். 

🌸அதன்பிறகு சூரர்களின் அட்டகாசம் அதிகரித்தது. பிரம்மா, விஷ்ணு ஆகியோர் கூட அவரவர் தொழிலை செய்ய முடியவில்லை. அனைவரும் வரம் கொடுத்த சிவனிடமே முறையிட்டனர். அவர் அசுரகுலத்திற்கு முடிவுகட்ட நேரம் வந்துவிட்டதை அவர்களிடம் உணர்த்தி, தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உருவாக்கினார். சரவணப் பொய்கை என்ற குளத்தில் அந்த பொறிகள் போய் விழுந்தன. ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக வடிவெடுத்தன. 

🦚அந்த குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் தாலாட்டி வளர்த்தனர். பார்வதிதேவி அந்த குழந்தைகளை ஒன்று சேர்த்து கந்தன் என பெயர் சூட்டினாள். ஸ்கந்தன் என்றால் ஒன்று சேர்க்கப்பட்டவன் என்று பொருள். கந்தனுக்கு முருகன் என்ற பெயரும் உண்டாயிற்று. அழகாக இருந்ததால் முருகன் என பெயர்பெற்றார். அவருடன் வீரபாகு தலைமையில் லட்சம் வீரர்கள் போர்செய்ய சென்றனர். வீரபாகு பார்வதியின் கொலுசு மணியில் இருந்து உருவானவன். அவனை தனது படையின் சேனாதிபதி ஆக்கினார் முருகன்.

 🦚அனைவரும் சூரபத்மனையும் அவனது சகோதரர்களையும் எல்லா அசுரர்களையும் கொன்று குவித்தனர். சூரனை இரண்டாகப் பிளந்து, ஒரு புறத்தை சேவலாகவும், ஒரு புறத்தை மயிலாகவும் மாற்றினார். மயிலை தன் வாகனமாகவும், சேவலை தன் கொடியின் சின்னமாகவும் கொண்டார். ஐப்பசி மாதம் சஷ்டி நாளில் இந்த வதம் நிகழ்ந்தது.

Monday, August 31, 2020

பழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன.?



தெரிந்து கொள்ளுங்கள் பழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன.?
#Sundarji

ஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.

மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை “செவி” அல்லது “பதினு” எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர். அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை “பதினு” மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு அணியமாவார்கள்.

மழைக்குப் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.

“தூறல்” – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.

“சாரல்” – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.

“மழை” – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.

” பெருமழை” – நீர்நிலைகள் நிரம்பும்.

” அடைமழை” – ஐப்பசியில் பெய்வது

” கனமழை” – கார்த்திகையில் பெய்வது..

இதையே அறிவியல் வேறுவகையில் கூறுகிறது:

மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல்.

அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை.

4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்.

மழையைப் பற்றித் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மாறாநீர் என குறிப்பிட்டிருக்கிறார். இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார்.

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக்கு அணி.

(குறள் 701)

இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று குறிப்பிடுவார்

பழ.கோமதிநாயகம். நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே பிறிதோர் குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு.

(குறள் 452)

எனவே வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது.

ஒரு உழவு மழை :

‘பொதுவாக ஊர்ப்புறங்களில் மிக அதிகமாக 5 செ.மீஅளவுக்கு மழை பெய்தால் ஒரு உழவு மழை என சொல்வது உண்டு.பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஒரு உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்.’

நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்....

பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும்...

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர்.

அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்..

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது..

இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்...

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.

அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.

இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை...

நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...

மனிதனுக்கு இந்த உலகில் விலை மதிப்பற்ற செல்வம் அறிவு..!

பலமான ஆயுதம் பொறுமை..!

மிகச்சிறந்த பாதுகாப்பு உண்மை..!

அற்புதமான மருந்து புன்னகை..!

சிந்தித்து செயலாற்றுங்கள்.

Saturday, August 22, 2020

உலகை ஆண்ட தமிழன் வரலாறு

 Sundar Ji......

உலகை ஆண்ட தமிழன்.......... 

                                                        .........வரலாறு!



தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.


குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே
குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.
1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்
இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.
இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.
இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”. கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!Tamilan
குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.
நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.
வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்! இதனைத் தமிழர்கள் அனைவரிடத்திலும் பகிருங்கள் தோழமைகளே.