Monday, June 17, 2019

நாம் ஏன் விநாயகரை முதலில் வணங்க வேண்டும் தெரியும்மா?


நமக்கெல்லாம் தெரிந்த விநாயகரும்(வலம்புரி விநாயகர்இடம்புரி விநாயகர்)
மற்றும் விநாயகரைப்பற்றி தெரியாத ரகசியமும் தொடர்பான அரிய பதிவு:
ஆன்மீகத்தில் இருக்கும் விநாயகர் வழிபாடு தொடர்பான மிக ரகசியமான ஒரு விஷயத்தை இங்கே உங்களுக்காக பதிவிடுகிறேன்.
நமது மூளை வலப்பகுதி,இடப்பகுதி என இரண்டு பிரிவுகளாக உள்ளது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
மூளையின் இடது, வலது பாகங்கள்தான் நம் உடலின் அத்தனை செய்கைகளுக்கும் காரணம்.
இடப்பக்க மூளை, உடலின் வலது பாகத்தையும், வலப்பக்க மூளை, உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்துகிறது என்கிறது விஞ்ஞானம்.
இதையே நம் சாஸ்திரம் பிங்கலை, இடங்கலை,நாடிகள் என வரையறுக்கிறது.
உடலின் செயல் வலது ,இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது.
உங்கள் வலது பக்க மூளை செயல்படும் பொழுது உங்கள் இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும்.
அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும்.
நாடி சாஸ்த்திரத்தை பற்றி விரிவாக காண்பதல்ல நம் நோக்கம்.
இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கையை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் நமது முன்னோர்கள் அமைந்திருக்கின்றார்கள்
இனி கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனியுங்கள்.
விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் உங்களின் நாசியில் சுவாசம் வரும்.
வலம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம்.
வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் கூறும் விஷயம் இது.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
விநாயகர் விக்ரஹத்தின் இந்த அரிய இரகசியத்தை முயற்சி செய்து பார்த்து உணர்ந்து கொள்ளவும்.
வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன.
வலது நாசிக் காற்று (சூரிய கலை)
* உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.
* வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.
* உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும்.
* உடலின் வலிமை அதிகரிக்கும்.
* மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.
* இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்.
இடது நாசிக் காற்று (சந்திர கலை)
* உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது.
* சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.
* இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.
* பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும்.
* மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும்.
* அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.
விநாயகப்பெருமானின் கல் விக்ரஹத்திற்கு உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் இத்தகைய ஆற்றல் இருப்பதால் தான் அவரை முதலில் வணங்க வேண்டும் என்கிறார்கள்.
பிராணன் (சுவாசம்)இல்லாமல் நாம் ஏது? அத்தகைய பிராணனை சுத்தப்படுத்தவே அவரை அரசமரத்தடியில் அமரச்செய்து அவரை வழிபடுவதன் மூலம் அரசமரம் நாளொன்றுக்கு வெளியிடும் 2400 கிலோ பிராண வாயுவை சுவாசித்தும், கருப்பை கோளாறுகளை போக்கியும் அரசமரக் காற்றினால் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியை பெறுகின்றோம்.
விநாயகரின் விக்ரஹ மகிமையை எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பிள்ளையாருக்கு பிறப்பில்லை .
அதனால் தான் நாம் விநாயகர் ஜெயந்தி என கொண்டாடுவதில்லை.
விநாயகர் சதுர்த்தி என கொண்டாடுகிறோம். ..!
ஆவணி மாத சுக்லபக் சதுர்த்தி திதி பிரணவ மந்திரத்தின் நாளாக , பிரணவ ரூபனின் நாளாக கொண்டாடுகிறோம்.
எனவே வாருங்கள்! விநாயகப்பெருமானின் கல் விக்ரஹத்திற்கு உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் ஆற்றல் இருப்பதால் அவரை வணங்கி ஞானத்தின் வழியில் சென்று அவர் கையில் இருக்கும் மோதகமாவோம்.

-காவியா

Saturday, March 2, 2019

உண்மையிலே இது ஏழாம் உலகமா இல்லை ஏழாம் நரகமா என்று தெரியவில்லை நமக்கு தெரியாத பல மனிதர்களின் கதை இல்லை


உண்மையிலே இது ஏழாம் உலகமா இல்லை ஏழாம் நரகமா என்று தெரியவில்லை நமக்கு தெரியாத பல மனிதர்களின் கதை இல்லை இல்லை பல ஆத்மாகளின் கதை. இப்படிபட்ட ஓர் உலகம் ( நரகம் ) இருக்கின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பதே பெரிய கேள்வி. அகோரமான உடல் அமைப்பு கொண்டவர்களை பிச்சை எடுக்க வைத்து அதன் மூலம் பிழைப்பு நடத்தும் பண்டாரம் அந்த மனிதர்களை எப்படி பயன்படுத்தி தன் தேவைகளை பூர்த்தி செய்கிறான் என்பதே கதை. இப்படி ஓர் பிழைப்பை நடத்தும் ஒருவனின் மறுபக்கத்தையும் காட்ட முயற்சி செய்திருக்கிறார் ஆசிரியர். தன் இளைய மகள் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொள்கிறாள் ஒரு நாள் மகள் வாழ்ந்து வரும் வீட்டின் வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை அவள் வீட்டின் அருகில் இருக்கும் கடையில் அமர்ந்து மகளை பார்ப்பதற்காக காத்து கொண்டிருக்கும் தருணம், மகள் கேட்ட வளையலை வாங்குவதற்கு மறந்துவிட்ட பண்டாரம் வீட்டிற்கு வந்த பிறகு வளையல் எங்கே என்று கேட்ட மகளை சமாதானப்படுத்த முயல்கிறான் அவளின் ஏக்கத்தையும் கண்ணீரையும் பார்த்தவன் அந்த நள்ளிரவே ஓடி சென்று ஆசாரியை எழுப்பி தங்க வளையல் வேண்டும் என்று 13 ஆயிரம் கொடுத்து வாங்கி வரும் தருணம், மகளுக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளையின் தொழில் பற்றி தெரிந்த பிறகு மாப்பிள்ளையின் அம்மாவிடம் அதை பற்றி கேட்டு வசவு சொற்களால் அர்ச்சனை வாங்கிய பிறகு வெறுப்புடன் இங்கே என் மகள் எப்படி வாழ்வாள் இது எல்லாம் சரி பட்டு வராது என்று செல்லும் பொது இது போன்ற பல தருணங்களில் பண்டாரம் ஓர் இளகிய மனம் படைத்தவன் என்று ஆசிரியர் நிருபிக்க முயற்சித்து இருக்கிறார் இருந்தாலும் முத்தம்மையை ஓர் குழந்தை பிறக்கும் இயந்திரமாக பயன்படுத்திய பண்டாரம் பிறக்கும் குழந்தை ஊனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வலுக்கட்டாயமாக உடல் ஊனமுற்ற குறை உள்ள மனிதர்களையே கூட விடுவதும், ஓர் நேரத்தில் முத்தமையின் ஒரு கை ஒரு கால் மட்டுமே உள்ள அந்த குழந்தையை வெயிலில் போட்டு பிட்சை எடுக்க வைத்து வெயில் கிரக்கத்தில் மயங்கும் குழந்தைக்கு அரைமணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து விடு ஒன்னும் ஆகாது என்று சொல்கிற பண்டாரத்தை இளகிய மனம் படைத்தவராக ஏதோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவனும் ஒரு அரக்கனே என்று என் மனம் பதறுகிறது. இக்கதையின் உயிரோட்டமே நெல்லை நாகர்கோவில் வட்டார வழக்கு சொற்கள் தான். அருமையாக சொற்களை கையாண்டிருக்கும் ஆசிரியருக்கு நிகர் அவர் மட்டுமே.நாம் வாழும் இந்த உலகில் இதை போலவும் மக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேதனையும் அச்சமும் கலந்து வருகிறது. ஆசிரியர்க்கு நன்றி.