Monday, January 5, 2015
அனைவருக்கும்
அனைவருக்கும் மதிய வணக்கம் . .
பாசத்துக்குரிய நம் மதுரையில் உள்ள மாற்று திறனாளி சகோதரி நாகலட்சுமி கேட்டுக்கொண்டதற்கிணங்க
அவருக்கு சுயமாக யார் உதவியும் இன்றி நடக்க
சூர்யா சமூகநல அறக்கட்டளை சார்பாக . . .
ஈரோடு மாவட்ட மாற்றுதிறனாளிகள் சங்க தலைவர்
திரு. அருள்பிரகாசம் அவர்கள் ஆலோசனையின்படியும் அவர்கள் மூலமாகவும் அலுமினிய (வாக்கிங் ஸ்டிக்) கைதடி வாங்கி கொடுக்கப்பட்டது.
அது நம் சகோதரிக்கு சவுகர்யமாக இருக்கிறதா என்று நாம் அறியோம். ஏனென்றால் அவர்களை யாம் நேரில் கண்டதில்லை. அலைபேசி தொடர்பு மட்டுமே. அவர்கள் எம்மிடம் அலைபேசியில் உரையாடியபடி வாங்கி அனுப்பி உள்ளோம். அவர்கள் திருப்தி கடவுள் திருப்தி.
அவர்கள் அலைபேசி எண் இங்கு பதிக்க அனுமதி கோரவில்லை.
மன்னிக்கவும். . .
இது நன்றியை எதிர்பார்த்து பதியப்பட்ட பதிவு இல்லை.
உண்மையில் தேவை உள்ள வரியவர்களுக்கு
நம் சூர்யா சமூகநல அறக்கட்டளை சேவை செய்ய தயங்காது என்பதை வெளிப்படுத்தவே.. . .
நல்லது.
No comments:
Post a Comment