Thursday, November 14, 2024

வீட்டில் துளசி மாடத்திற்கு என்ன வேலை?

வீட்டில் துளசி மாடத்திற்கு என்ன வேலை?

துளசி ஒரு நாளில் 22 மணி நேரம் ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை உள்ளது.

துளசி ஒரு அனைத்து வகை கிருமி நாசினி.

அது இருக்கும் இடத்திற்கு விஷ ஜந்துக்கள், பூச்சிகள், வராது.

தினமும் அதிகாலை எழுந்து குளித்து முடித்து சூரிய நமஸ்காரத்திற்கு பின்னர்…

துளசி மாடத்தை சுற்றி வந்து 6 துளசி இலைகளை பறித்து நன்றாக மென்று தின்றுவந்தால்….

நம்மை எந்த விஷ காய்ச்சலும், வைரஸ் கிருமிகளும், தொற்று வியாதிகளும் அண்டவே அண்டாது. சுவாச பிரச்சனை கோலாறும் வராது.

பெருமாள் கோயிலில் கூட இதனால்தான் துளசி தீர்த்தம் வழங்கப்படுகிறது..

துளசி மாடம் உள்ள வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கிய இரகசியம் இதுதான்.

எங்க கிளம்பிட்டீங்க? உங்க வீட்டிலும் துளசி மாடம் வைக்கவா? அப்ப சரி…

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


 

Wednesday, November 13, 2024

மொட்டை போடுவது ஏன்? ஆன்மீகமா? மூட நம்பிக்கையா?

 


மொட்டை போடுவது ஏன்? ஆன்மீகமா? மூட நம்பிக்கையா?

இரண்டும் இல்லை… நம் ஆரோக்கியத்துக்குதான்…

சிறு வயதில் குழந்தைகளுக்கு/ சில பெரியவர்களுக்கும்தான் தலையில் ஈறு பேன் பொடுகு தொல்லை அதிகம் இருக்கும்.

காரணம் தலையை நன்கு அலசி சுத்தமாக பராமரிக்க முடியாது தெரியாது.

அதனால் ஏதாவது ஒரு கடவுள் பெயரைச்சொல்லி மொட்டை போட்டுவிட்டால்..

தலை சுத்தமாகிவிடும் பேன் ஈறு பொடுகு தொல்லை இருக்காது.. முடியும் நன்கு வளரும்.

இப்ப புரியுதா மொட்டை இரகசியம்.

சரி அதை ஏன் கடவுள் பெயரைச்சொல்லி கோயிலில் போடவேண்டும்?

வீட்டிலோ அல்லது கடையிலோ போடலாமே?

மொட்டை போடுவதாக ஏதாவது ஒரு சாமிக்கு…

பரிட்சையில் வெற்றி பெற வேண்டும் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் அல்லது நோய் குணமாக வேண்டும் இப்படி ஏதாவது ஒரு குறிக்கோள் வேண்டுதல் இருக்கும்…

அப்படி வேண்டும் பொழுது அந்த குறிக்கோளையே நினைத்துகொண்டு இருப்பதால்…

மனது அலைபாயாமல் ஒருநிலைப்பட்டு மூளையை நன்கு செயல்பட வைத்து…

நம் உடலில் நேர்மறை ஆற்றல் உருவாக்கி நோயை குணப்படுத்தும், பரிட்சையிலும் கவனமாக இருந்து படித்து நல்ல மதிப்பெண் பெற்றுவிடுவார்கள், குறிக்கோளை அடைந்துவிடுவார்கள்.

அதனால்தான் தெய்வத்திடம் வேண்டுதல் வைத்து கோயில் சென்று சுற்றத்துடன் நட்புடன் சென்று முடி காணிக்கை செலுத்த படுகிறது.

அது குடும்ப மொத்தத்திற்கும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

இது வீட்டில் போடும் மொட்டைக்கோ அல்லது கடையில் போடும் மொட்டைக்கோ கிடைக்காது… 

எங்க கிளம்பிட்டீங்க? திருப்பதிக்கா? பழனிக்கா? அப்ப சரி…

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


தும்மினால் ஆயுசு நூறு….!!!!!!

 

தும்மினால் ஆயுசு நூறு….!!!!!!

தும்மல் வந்தால் சளி வரும் சத்தம் வரும்…

அதெப்படிங்கானும் ஆயுசு நூறு வரும்?

நமது உடல் ஒரு அற்புதமான தானே சுயமாக இயங்கும் இயந்திரம்.

நம் மூக்கின் வழியே உடலுக்கு தேவை இல்லாத அசுத்தமோ, தூசியோ சென்றுவிட்டால்..

காற்றின் மூலம் தும்மலை ஏற்படுத்தி அந்த வேண்டாத தூசியை வெளியேற்ற முயற்சிக்கிறது.

காற்றின் மூலம் அந்த தூசியை வெளியேற்ற முடியாவிட்டால்…

நம் உடலில் சளியை உற்பத்தி செய்து அதில் அந்த தூசியை ஒட்ட வைத்து வெளியேற்ற முயற்சி செய்கிறது.

அதனால் சளி வந்தால் சீந்திவிட்டு போங்க 3 நாளில் / தூசி வெளியேறிவிட்டால் தானே சளி சரியாகிவிடும்.

இல்லை என்றால் அந்த தூசி நம் நுரையீரலில் தங்கி உடல் உபாதையை கொடுக்கும். அதற்கு பெயர் நுறையீரல் தொற்று.

நமக்கு தும்மலோ சளியோ வந்தால் தேவை இல்லாமல் உடனே மருத்துவரை அணுகி  உடலின் செயல்பாட்டை தடுத்து சொந்த காசில் நமக்கு நாமே சூன்யம் வைத்துக்கொள்கிறோம்.

தும்மினால் சளி வந்தால் மூக்கின் வழியாக சென்ற தூசியோ நம் உடலுக்கு தேவை இல்லாத பொருளோ வெளியேற்றப்படுகிறது.

பிறகு நமக்கு ஆரோக்கியம்தானே?

அதனால்தான் தும்மினால் ஆயுசு நூறு என்று சொல்லி அதை அத்தோடு வைத்தியம் பார்க்கச்சொல்லாமல் முடித்துகொண்டார்கள்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் நம்முடைய ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டது.. மூடநம்பிக்கையை அடிப்படையாக கொண்டது இல்லை.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


மார்கழி மாலையில் வீளக்கேற்றினால் மகாலட்சுமி வருவாளா?


மார்கழி மாலையில் வீளக்கேற்றினால் மகாலட்சுமி வருவாளா?

மார்கழி மாதம் முழுவதும் மாலையில் 6 மணிக்கு வீட்டில் அகல்  விளக்கேற்றி வழிபட்டால்…

நம் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்று சொல்வார்கள்..

உண்மையா? ஏன் அப்படி சொன்னார்கள்?

இது உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கு சொல்லப்பட்டதே.

மார்கழி மாதம் முழுவதும் பனிகாலம்..

பனிப்பொழிவின் போது நம் வீட்டை வெப்பபடுத்தி நம் வீட்டு குழந்தைகளையும் மற்றவர்களையும்…

சளி மற்றும் குளிர்கால காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு கொடுத்து நம்மை காக்கவே வீடு முழுவதும் அகல் விளக்கு ஏற்றிவைத்து வழிபடச்சொன்னார்கள்.

சரி அதை ஏன் மகாலட்சுமியுடன் தொடர்பு படுத்தி சொன்னார்கள்? மகாலட்சுமி வரவில்லையே என்பவர்களுக்கு…

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.. செல்வத்துக்கு அதிபதி மகாலட்சுமி. இப்ப புரியுதா?

திருட்டு திராவிட பகுத்தறிவுவாதிகள் சொல்வதை கேட்டு இவற்றை தவிர்த்து மருத்துவமனை போய்த்தான் செலவு செய்து உடம்பை கெடுத்துகொள்வோம் என்றால் யார் என்ன செய்யமுடியும்?

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் நம்முடைய ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டது.. மூடநம்பிக்கையை அடிப்படையாக கொண்டது இல்லை.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 

சனி நீராடு என்றால் என்ன? ஏன் செய்ய வேண்டும்?

 


சனி நீராடு என்றால் என்ன? ஏன் செய்ய வேண்டும்?

நம் உடலின் வெப்பநிலை ஒரே சீராக இருக்க வேண்டும்…

நம் காலசூழ்நிலையாலும், நாம் உட்கொள்ளும் உண்வு முறைகளாலும், வேலை தன்மையாலும் நம் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். சமநிலை அற்று இருக்கும்.

அதனால் தலைவலி சளி உடல் அசதி வலி நீர்கடுப்பு, மலச்சிக்கல் போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும்.

இதை தவிர்க்கவும், நம் தோலில் உள்ள வெப்பநிலையை போக்கும் துளைகளில் உள்ள அடைப்புகளை நீக்கவும்,,,

வாரத்தில் ஒரு நாள்..

சுத்தமான செக்கில் ஆட்டிய நல்லெண்ணை கொண்டு உடல் முழுவதும் பூசி ஒரு மணிநேரம் ஊரவைத்து…

பின்னர் வீட்டில் தயாரித்த சீவக்காயை வடி கஞ்சியில் கலந்து தலை மற்றும் உடல் முழுவதும் தேய்த்து குளித்தால்…

உடல் சூடு குறைந்து சமநிலை ஏற்படும். தலையும் சுத்தமாகும், தோலும் பளபளப்பாகும்.

பெண்கள் வெள்ளி கிழமையும், ஆண்கள் சனிக்கிழமையும் எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்தது.

எண்ணை தேய்த்து குளிக்கும் நாள் அன்று உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள் மற்றும் தம்பதிகள் சம்போகம்/ தாம்பத்தியம் தவிர்ப்பது நல்லது.

எங்க கிளம்பிட்டீங்க? சனி நீராடுக்கா?/ எண்ணை தேய்ச்சி குளிக்கவா? அப்ப சரி…

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


Tuesday, November 12, 2024

விரதம் இருப்பது வேண்டுதலா? பக்தியா? மூட நம்பிக்கையா?

 

விரதம் இருப்பது வேண்டுதலா? பக்தியா? மூட நம்பிக்கையா?

இது எதுவும் இல்லை…

நம் உடல் மெஷின் போல 24 மணி நேரமும் இயங்கி கொண்டே இருக்கும். ஒருசில உறுப்புகளைத்தவிர மற்ற எல்லா உறுப்புகளும் உறக்கத்தில் ஓய்வு எடுக்கும்.

ஆனால் வயிறு அதாவது ஜீரண உறுப்பு?

காலையில் இருந்து இரவு வரை எதையாவது வாயில் வயிற்றில் போட்டுக்கொண்டே இருந்தால் ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு எப்படி கிடைக்கும்?

வயிற்று உறுப்புகளுக்கு ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கவே…

நாம் வாரத்தில் ஒரு நாள் அம்மாவாசை ஏகாதேசி பெளர்ணமி போன்ற விஷேச தினங்களில் ஏதாவது ஒரு கடவுள் பெயரைச்சொல்லி விரதம் இருந்து ஓய்வு கொடுக்கச்சொன்னார்கள்.

ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கும்போது. அது வயிற்றில் இருக்கும் கழிவுகளை அகற்றும் வேலை செய்யும். வயிறும் சுத்தமாகும் ஆரோக்கியம் கிடைக்கும்.

அதுக்கு ஏன் கடவுள் பெயரைச் சொல்லவேண்டும்?

எல்லா மனிதர்களுக்கும் பிரச்சனை இல்லாத நிம்மதியான வாழ்க்கை என்றும் இருப்பதில்லை.

அப்போது ஏற்படும் மன சஞ்சலத்தை போக்கவும் மனதை ஒருநிலைப்படுத்தி அமைதிபடுத்தவும் ஊக்கபடுத்தவும் உடல் ஆரோக்கியம் காக்கவும் கடவுள் பெயரைச்சொல்லி ஆற்றுபடுத்தினார்கள்.

எங்க கிளம்பிட்டீங்க? விரதம் இருக்கவா? அப்ப சரி…

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


பாத யாத்திரை வேண்டுதல் கடவுளுக்கா? இல்லை மூடநம்பிக்கையா?

 

பாத யாத்திரை வேண்டுதல் கடவுளுக்கா? இல்லை மூடநம்பிக்கையா?

இரண்டும் இல்லை… நம் ஆரோக்கியத்துக்கே…

நம் உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் பாதத்தில் வந்துதான் முடிகிறது.

நாம் வெறும் காலுடன் நடக்கும்போது…

கல் மண் எல்லாம் காலில் பட்டு பட்டு பாதத்தில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு செயல்படாத நரம்புகளும் முழுமையாக தூண்டப்பட்டு அனைத்து உள் உறுப்புகளும் நன்கு செயல்படும்.

இதை நம் மக்கள் ஒரு மனதோடு மனமுவந்து கடைபிடிக்க வைக்கவே தெய்வத்தின் பெயரைச்சொல்லி மனசை ஒருநிலைப்படுத்தி செய்ய வைத்தார்கள்.

இதனால் சுத்தமான காற்று உடலுக்கு பயிற்சி விரத்தால் உடல் கழிவுகள் அகற்றம் என்று ஒரே கல்லில் பல மாங்காய்கள் நமக்கு தெரியாமலே அடித்தார்கள் நம் முன்னோர்கள்

அதையே இன்று மருத்துவர் சொன்னார் என்று காலில் செருப்போ சூவோ போட்டுக்கொண்டு நாயை புடிச்சிகிட்டு காதில் குத்து பாட்டு கேட்டுகிட்டு பேய் அலையர நேரத்தில் மோட்டார் வாகன புகையுடன் நடைபயிற்சி செய்வதால் ஒரு பலனும் இல்லை…

ஆகவே ஒவ்வொரு கடவுள் பெயரைச்சொல்லி பாதயாத்திரை செய்ய வைத்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மறைமுகமாக சொன்னதுதான் பாதயாத்திரை வேண்டுதல்.

எங்க கிளம்பிட்டீங்க? பாதயாத்திரைக்கா? அப்ப சரி…

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி